Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newproject71copy6-1709549106.jpg?resize=

பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ!

இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

 

உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுத் தெரிவித்தள்ளார்.

அபோபிஸ் [Apophis] என்ற இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அது 2036 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம் எனவும் வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளதால் இந்த பேராபத்து ஏற்படாது என எந்த உத்தரவாதமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் என்றாலும் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது எனவும் அசம்பாவிதங்களுக்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதால் நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகின்றதாகவும் ஆபத்துகளை கண்டறிய நாம் இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைவர் சோம்நாத் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1391240

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2024 at 00:04, தமிழ் சிறி said:

 

இராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித குலத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

🫣..........

இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்கள் ஆதவனை சரியாக 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி நேரடியாகத் தாக்குவதற்கு 50 வீதம் சாத்தியம் இருக்கின்றது...............

இந்த விண்கல் பற்றிய நாசாவின் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது. 2068இல், அது கூடமிகக் குறைந்த சாத்தியமே, பூமிக்கு அருகே வருவதால் ஒரு தாக்கம் இருக்கலாம் என்று சொல்லியிருக்கின்றார்கள். 

அந்த விண்கல்லை ஈலான் மஸ்க்கே தனியாளாக சமாளித்து விடுவார்........ ஆனால் இந்த ஆதவனை எவராலும் சமாளிக்க முடியவே முடியாது............🤣.

https://science.nasa.gov/solar-system/asteroids/apophis/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

அந்த விண்கல்லை ஈலான் மஸ்க்கே தனியாளாக சமாளித்து விடுவார்........ ஆனால் இந்த ஆதவனை எவராலும் சமாளிக்க முடியவே முடியாது............🤣.

சமீபத்தில் ஆதவனில் வந்த செய்தி ஒன்றின் தலையங்கத்தில் மரக்கறிக்கு… மறக்கறி என்று எழுதி இருந்தார்கள். 

வேறு எந்த இனமும்… தமது தாய் மொழியில் நடத்தும் பத்திரிகைகளில்  எழுத்துப் பிழை விட்டு எழுதுவதை கேள்விப் படவில்லை. 

அப்படி பிழை  விட்டு இருந்தாலும்… பெட்டிச் செய்தியில் தவறுக்கு மன்னிப்பு கேட்பார்கள். நம்முடைய ஊடகங்கள் மன்னிப்பு கேட்பதென்றால் தினமும் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2024 at 03:04, தமிழ் சிறி said:

மனித குளம்

இப்படியான குளத்தை  மக்களுக்கு ஆதவன் அறிமுகப்படுத்தி உள்ளது.🙂

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2024 at 09:04, தமிழ் சிறி said:

இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம்

இதுவும் ஆச்சரியம் தான்.

விண்கலம் அல்ல விண்கல் என்றுதான் இங்கு குறிக்கப்பட்டிருக்கவேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.