Jump to content

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!! 

623651775.jfif

மாவை சேனாதிராசா தெரிவிப்பு

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்படுவதற்குச் செல்வம் அடைக்கலநாதன் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் எனத்தாம் ஆலோசனை கூறியிருப்பதாகவும், வழமைபோன்று நாடாளுமன்றக் குழு இதுதொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய காலகட்டத்தில் எந்த வகையிலும் பிரிவுக்கும், குழப்பங்களுக்கும் இடம்கொடுக்காத வகையில் ஒற்றுமையாக இந்த விடயத்தில் தீர்மானிக்க வேண்டுமென்ற கருத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம். இதற்கமைய நாடாளுமன்றக் குழுவினர் பொருத்தமான, இணக்கமானதொரு தீர்மானத்தை எடுப்பார்கள் - என்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
 

 

https://newuthayan.com/article/தமிழரசுக்_கட்சியின்_நாடாளுமன்றக்_குழுத்தலைமைக்கு_இணக்கத்தின்_அடிப்படையில்_முடிவு!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 கட்சி கூட்டணியிலிருந்து விலகினால் மட்டுமே செல்வத்துக்கு குழு தலைமைப் பதவி – தமிழரசுக் கட்சி

July 11, 2024
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டும்தான் இருக்கின்றோம், ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தினால் மட்டுமே கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைமை பதவியை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்றிரவு நிகழ்நிலையில் கூடித் தீர்மானித்தது.

இது விடயத்தில் நேற்றுப் பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தமிழரசு கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுத்த நிலைப்பாட்டை நேற்றிரவு கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு முழு அளவில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.

நேற்றைய அரசியல் குழு கூட்டம் பற்றி நேரத்துடனேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்றிரவு நிகழ்நிலை கூட்டம் ஆரம்பமான நேரத்தில் இருந்து பல தடவைகள் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை என்று தெரியவருகிறது. அவர் கூட்டத்தில் பங்கு பற்றவில்லை. மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவரராஜாவும் இக்கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

 கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், குலநாயகம், குகதாசன், சுமந்திரன், சிறிதரன், கலையரசன், துரைராஜசிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்ற பலர் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லாத வேறு ஒரு கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருக்கின்ற ஒருவருக்கு தமிழரசுக் கட்சியின் பெயரிலான நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை வழங்கக கூடாது என்று உறுப்பினர்கள் அநேகமாக எல்லோரும் கருத்துத் தெரிவித்தனர். ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினின்றும் பிரிந்து, தனித்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்திருந்ததால், அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இன்றைய நிலைமை தோன்றியிருக்கின்றது என்பதைக் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். அந்தப் பின்னணியில் இந்த விடயத்தில் மத்திய குழுவின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையில் இறுதித் தீர்மானத்தை எடுப்பது என நேற்றிரவு அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அறியவந்தது.
 

https://www.ilakku.org/5-கட்சி-கூட்டணியிலிருந்த/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நல்ல புடுங்குப்பாடு…
சம்பந்தர் செத்த பின்பும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற புத்தி இவர்களுக்கு வரவில்லை. 

தமிழனை நடுத்தெருவில் நிறுத்தாமல் இவர்கள் ஓய மாட்டார்கள் போலுள்ளது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழரை சுமா என்றால் சும்மாவா , கூட்டமைப்பில் இருந்து விலகியது தமிழரசு , ஆனால் இதென்ன குதர்க்கமான பதில் . முதலில் தமிழரசுவை கேட்கவேண்டும் முதலில் கூட்டமைப்பில் உள்ளீர்களா என்று . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றக் குழுத்தலைமை வழங்க மறுத்தால் தனி அணி!

1473007800.png

புளொட், ரெலோ தீவிர பரிசீலனை!!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைப் பதவியை வழங்குவதற்கு மறுத்தால், நாடாளுமன்றத்தில் தனி அணியாக இயங்குவது தொடர்பில் ரெலோவும் புளொட்டும் ஆலோசனை நடத்திவருவதாக அறியமுடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன இணைந்து சந்தித்திருந்தன. நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக அவை இயங்கின. உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் முடிவை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததைத் தொடர்ந்து புளொட், ரெலோ என்பன வேறு சில தரப்புகளுடன் இணைந்து தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பிரகடனப்படுத்தின. அத்துடன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பெயரில் உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தன.

இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவின் பின்னர், அந்தப் பதவியை தமக்குத்தருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரியிருந்தார். ஆனால், இலங்கைத் தமிழரசுக்கட்சி அந்தக் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
தலைமைப் பதவியை வழங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் மறுக்குமாக இருந்தால், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் இயங்கி வந்த ரெலோவும், புளொட்டும் சபாநாயகரைச் சந்தித்து தனி அணியாக இயங்குவதற்கான கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில் தீவிரமாகப் பரிலீசிலித்து வருவதாக அறியமுடிகின்றது. (ச)
 

https://newuthayan.com/article/நாடாளுமன்றக்_குழுத்தலைமை_வழங்க_மறுத்தால்_தனி_அணி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்றதை இன்னும் பிரிக்காமல்… விட்டுக் கொடுப்புடன் செயல்பட தமிழரசுக் கட்சி முன் வரவேண்டும்.

அதற்கு தடையாக சுமந்திரன் இருந்தால்… சுமந்திரனை தூக்கி வெளியே போடுங்கள்.

சம்பந்தனின் சாவுடன்… ஒரு நல்ல விசயம் நடந்ததாக இருக்கட்டும். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.