Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!! 

623651775.jfif

மாவை சேனாதிராசா தெரிவிப்பு

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்படுவதற்குச் செல்வம் அடைக்கலநாதன் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் எனத்தாம் ஆலோசனை கூறியிருப்பதாகவும், வழமைபோன்று நாடாளுமன்றக் குழு இதுதொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய காலகட்டத்தில் எந்த வகையிலும் பிரிவுக்கும், குழப்பங்களுக்கும் இடம்கொடுக்காத வகையில் ஒற்றுமையாக இந்த விடயத்தில் தீர்மானிக்க வேண்டுமென்ற கருத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம். இதற்கமைய நாடாளுமன்றக் குழுவினர் பொருத்தமான, இணக்கமானதொரு தீர்மானத்தை எடுப்பார்கள் - என்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
 

 

https://newuthayan.com/article/தமிழரசுக்_கட்சியின்_நாடாளுமன்றக்_குழுத்தலைமைக்கு_இணக்கத்தின்_அடிப்படையில்_முடிவு!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

5 கட்சி கூட்டணியிலிருந்து விலகினால் மட்டுமே செல்வத்துக்கு குழு தலைமைப் பதவி – தமிழரசுக் கட்சி

July 11, 2024
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டும்தான் இருக்கின்றோம், ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தினால் மட்டுமே கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைமை பதவியை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்றிரவு நிகழ்நிலையில் கூடித் தீர்மானித்தது.

இது விடயத்தில் நேற்றுப் பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தமிழரசு கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுத்த நிலைப்பாட்டை நேற்றிரவு கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு முழு அளவில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது.

நேற்றைய அரசியல் குழு கூட்டம் பற்றி நேரத்துடனேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்றிரவு நிகழ்நிலை கூட்டம் ஆரம்பமான நேரத்தில் இருந்து பல தடவைகள் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை என்று தெரியவருகிறது. அவர் கூட்டத்தில் பங்கு பற்றவில்லை. மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவரராஜாவும் இக்கூட்டத்தில் பங்குபற்றவில்லை.

 கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், குலநாயகம், குகதாசன், சுமந்திரன், சிறிதரன், கலையரசன், துரைராஜசிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்ற பலர் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லாத வேறு ஒரு கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருக்கின்ற ஒருவருக்கு தமிழரசுக் கட்சியின் பெயரிலான நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை வழங்கக கூடாது என்று உறுப்பினர்கள் அநேகமாக எல்லோரும் கருத்துத் தெரிவித்தனர். ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினின்றும் பிரிந்து, தனித்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்திருந்ததால், அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இன்றைய நிலைமை தோன்றியிருக்கின்றது என்பதைக் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். அந்தப் பின்னணியில் இந்த விடயத்தில் மத்திய குழுவின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையில் இறுதித் தீர்மானத்தை எடுப்பது என நேற்றிரவு அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அறியவந்தது.
 

https://www.ilakku.org/5-கட்சி-கூட்டணியிலிருந்த/

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல புடுங்குப்பாடு…
சம்பந்தர் செத்த பின்பும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற புத்தி இவர்களுக்கு வரவில்லை. 

தமிழனை நடுத்தெருவில் நிறுத்தாமல் இவர்கள் ஓய மாட்டார்கள் போலுள்ளது. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஏழரை சுமா என்றால் சும்மாவா , கூட்டமைப்பில் இருந்து விலகியது தமிழரசு , ஆனால் இதென்ன குதர்க்கமான பதில் . முதலில் தமிழரசுவை கேட்கவேண்டும் முதலில் கூட்டமைப்பில் உள்ளீர்களா என்று . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றக் குழுத்தலைமை வழங்க மறுத்தால் தனி அணி!

1473007800.png

புளொட், ரெலோ தீவிர பரிசீலனை!!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைப் பதவியை வழங்குவதற்கு மறுத்தால், நாடாளுமன்றத்தில் தனி அணியாக இயங்குவது தொடர்பில் ரெலோவும் புளொட்டும் ஆலோசனை நடத்திவருவதாக அறியமுடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன இணைந்து சந்தித்திருந்தன. நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக அவை இயங்கின. உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் முடிவை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததைத் தொடர்ந்து புளொட், ரெலோ என்பன வேறு சில தரப்புகளுடன் இணைந்து தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பிரகடனப்படுத்தின. அத்துடன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பெயரில் உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தன.

இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவின் பின்னர், அந்தப் பதவியை தமக்குத்தருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரியிருந்தார். ஆனால், இலங்கைத் தமிழரசுக்கட்சி அந்தக் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.
தலைமைப் பதவியை வழங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் மறுக்குமாக இருந்தால், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் இயங்கி வந்த ரெலோவும், புளொட்டும் சபாநாயகரைச் சந்தித்து தனி அணியாக இயங்குவதற்கான கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில் தீவிரமாகப் பரிலீசிலித்து வருவதாக அறியமுடிகின்றது. (ச)
 

https://newuthayan.com/article/நாடாளுமன்றக்_குழுத்தலைமை_வழங்க_மறுத்தால்_தனி_அணி!

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்றதை இன்னும் பிரிக்காமல்… விட்டுக் கொடுப்புடன் செயல்பட தமிழரசுக் கட்சி முன் வரவேண்டும்.

அதற்கு தடையாக சுமந்திரன் இருந்தால்… சுமந்திரனை தூக்கி வெளியே போடுங்கள்.

சம்பந்தனின் சாவுடன்… ஒரு நல்ல விசயம் நடந்ததாக இருக்கட்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.