Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   12 JUL, 2024 | 01:00 PM

image
 

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

முன்னதாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலைய கட்டிட திறப்பு விழா, கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் மற்றும் உலர் உணவுகள் விநியோக நிகழ்வு, தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அரச ஊழியர் குழுவிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

அவற்றினை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள புதிய வர்த்தக சேவை நிலைய திறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார்.

https://www.virakesari.lk/article/188295

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது - பிரதமர்

Published By: DIGITAL DESK 3   12 JUL, 2024 | 04:54 PM

image
 

யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதன் போது சீன அரசின் உதவியுடன் முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் பகிரந்தளிக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசியும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர்- யாழ் குடாநாட்டின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக உள்ளூராட்சி நிர்வாக பகுதியில் கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான விசேட ஏற்பாடுகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளோம். பிரதமர் என்ற வகையில் நீங்கள் அனைவரும் அடைந்துள்ள முன்னேற்றத்தை அவதானிக்கவும், வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் நாம் இன்று இருக்கும் இடத்தைப் பற்றிய சில கருத்துக்களைப் பெறவும் இங்கு வருகைதர கிடைத்தமையை பாக்கியமாக கருதுகிறேன்.

சேவைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உறுதிபூண்டுள்ளனர். எனவே, அபிவிருத்திக்குத் தேவையான அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது இந்தப் பிரதேசத்திற்கு மிகவும் முக்கியமானது.

விவசாயிகளின் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். அனைத்து விவசாயிகளும் தனியார் துறையை சேர்ந்தவர்கள். உரிமைகளின் அடிப்படையில் அல்லது சிறு விவசாயிகள் என்ற வகையில் அவர்கள் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட பங்களிப்பாளர்களாக உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் கல்விக்கு அதிகூடிய முன்னுரிமையை வழங்குவதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியைப் பெறுவதற்கும் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கும், பின்னர் புதிய நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் துறைகளில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும். அதற்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும்.

எமது நாட்டில் வறுமை நிலை திருப்திகரமாக நிர்வகிக்கபட்டுள்ளது. எந்தவொரு பொருளாதாரத்திலும், எந்த நாட்டிலும் வறுமை ஒரு முக்கிய பிரச்சினை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். செல்வந்த நாடான அமெரிக்காவில் உணவு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. எனவே, உலகின் அனைத்துப் பொருளாதாரங்களும் வறியவர்கள் தொடர்பில் இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளன. வடமாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களைச் சேரந்த குறைந்த வருமானம் பெறும் மக்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும் - என்றார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், க.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், யதாமினி குணவர்தன, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, பதில் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன்  மற்றும் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/188312

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கல்!

13 JUL, 2024 | 10:19 AM
image

வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் இந்த நிகழ்வில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 

இதன்போது உரையாற்றிய வட மாகாண ஆளுநர் கூறுகையில்,

IMG-20240712-WA0017.jpg

மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க பாரிய பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்களின் கோரிக்கையை ஏற்று, மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கு அமைய, கௌரவ பிரதமர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவர்கள் இருவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். 

IMG-20240712-WA0019.jpg

165 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. நீண்ட கால ஏக்கத்துக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பிரதமர் தெரிவிக்கையில், 

தற்காலிக மற்றும் அமைய அடிப்படையில் பணியாற்றிவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் செயற்பாட்டுக்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் முதன் முதலில் தனது ஆதரவை தெரிவித்தார். 

ஆளுநர் அவர்களின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே இன்று 165 பேருக்கான நிரந்தர நியமனங்கள் கிடைத்துள்ளன. நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் தங்களின் கடமைகளை உரியவாறு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

IMG-20240712-WA0018.jpg

IMG-20240712-WA0024.jpg

IMG-20240712-WA0020.jpg

https://www.virakesari.lk/article/188332

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.