Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 JUL, 2024 | 09:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எவருக்கும் பயமில்லை, கடனில்லை என்று அரசியல் மேடைகளில் குறிப்பிடுபவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்றதை மறந்து விட்டார்கள். தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட வியாபாரியை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முயற்சிப்பது பிறிதொரு விளைவுக்கான ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

பதுளை நகரில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (14)  இடம்பெற்ற புதிய கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் உரையாற்றியதாவது,  

தவறான அரசியல் தீர்மானங்களினால் பலவீனமடைந்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்றுள்ளது.பாரம்பரியமான சுதந்திரக் கட்சியின் மீது பெரும்பாலான மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.ஆகவே இந்த புதிய கூட்டணியின் இரண்டாவது மாநாட்டின் ஊடாக சகல சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.அனைவரும் புதிய கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும். 

அரசியல் நெருக்கடிகளினால் நாட்டில் மீண்டும் உறுதியற்ற அரசாங்கம் தோற்றம் பெற கூடாது என்பதை கருத்திற் கொண்டு சிரேஷ்ட அரசியல்வாதிகளை உள்ளடக்கிய வகையில் பலமான அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.இன்னும் இரண்டு வாரங்களில் கூட்டணியை பலப்படுத்தி ஜனாதிபதித் தேர்தல் குறித்து எமது தீர்மானத்தை அறிவிப்போம். 

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து நாடு மீண்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில்  தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறுகின்றன.இதுவே ஜனநாயகம்.இதனை வரவேற்கிறேன்.ஆனால் 2022 ஆம் ஆண்டு  இவ்வாறான ஜனநாயக சூழல் நாட்டில் காணப்படவில்லை. 

அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என்று தற்போது குரல் எழுப்புபவர்வர்கள்  2022 ஆம் ஆண்டு நாடு மிக மோசமான நெருக்கடியை எதிர்க்கொண்ட போது அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.தனி மனிதனாக இருந்து ரணில் விக்கிரமசிங்க நாட்டையும்இநாட்டு மக்களையும் பொறுப்பேற்றார்.நெருக்கடியான சூழலில் நாங்கள் எமது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.எமது தீர்மானம் இன்று வெற்றிப் பெற்றுள்ளது. 

எவருக்கும் கடனில்லைஇபயமில்லை என்று நாட்டை கடனாளியாக்கியவர்கள் அரசியல் மேடைகளில் குறிப்பிடுகிறார்கள்.இவர்கள் 2022 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் தலைமறைவாகி நாட்டை விட்டு தப்பி ஓடியதை மறந்து விட்டார்கள்.யார் அச்சமடைந்து தப்பிச் சென்றதுஇயார் நாட்டை கடனாளியாக்கியது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 

பலம்வாய்ந்த அரசியல் கட்சி என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.2019 ஆம் ஆண்டு அரசியல் அனுபவமற்ற ஒருவரை ஜனாதிபதியாக்கியதால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றன என்று குறிப்பிடப்படுகிறது.இவ்வாறான நிலையில் இந்த கட்சி மீண்டும் அதே தவறை செய்ய முயற்சிக்கிறது. 

தேசிய பட்டியல் உறுப்பினராக வியாபாரியை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.அவர் கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் செய்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறானவர்களினால் ஒருபோதும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.ஆகவே எமது அரசியல் தீர்மானத்தை இன்னும் இரு வாரங்களில் அறிவிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/188459

Edited by ஏராளன்
wrong news changed

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.