Jump to content

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
09 AUG, 2024 | 04:03 PM
image
 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான இறுதி கட்டப் பதிவுகள் இன்று  வெள்ளிக்கிழமை (09) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதானிகள் கலந்து கொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதி கட்டப் பதிவுகளை மேற்கொண்டதோடு விடயங்களையும் கேட்டறிந்திருந்தனர். 

இதன்போது 62 பேருக்கு கடிதங்கள் தபால் மூலமாகவும் கிராம சேவையாளர் ஊடாகவும் அனுப்பப்பட்டு இந்த பதிவு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவர், 

எதிர்வரும் மாதம் அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அவர்களுக்காக நஷ்ட ஈடும், சான்றிதழும் வழங்குவதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தங்களிடம் அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். 

20240809_100138_0_.jpg

20240809_100357.jpg

20240809_094143.jpg

20240809_094007.jpg

https://www.virakesari.lk/article/190658

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.