Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத் தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனித புதைகுழிக்கு உரிய நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/308080

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்? - கொக்குதொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டம்!

20 AUG, 2024 | 01:00 PM
image
 

கொக்குதாெடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20)  இடம்பெற்றது. 

முல்லைத்தீவு  கொக்குதொடுவாய் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று  52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான  எவ்வித  உண்மைகளும் இதுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை. எனவே  கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை  மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. 

IMG-20240820-WA0018.jpg

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த  போராட்டத்தில்  பாராளுமன்ற  உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன்,வடக்கு மாவட்டங்களை சேர்ந்த முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்பாணம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்து தமக்கான நீதி கோரி போராடியிருந்தனர். 

IMG-20240820-WA0032.jpg

IMG-20240820-WA0039.jpg

குறித்த போராட்டத்தில் கொக்குதொடுவாய் மனிதபுதைகுழியை சுற்றி கண்ணீர் விட்டு  கதறி அழுததோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உண்மையை  மௌனமாக்காதே: கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை அச்சுறுத்தாதே ! ,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி: ஸ்ரீ லங்கா  இராணுவமே  பொறுப்புக்கூற வேண்டும்! ,OMP ஒரு ஏமாற்று வேலை: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும்  நீதி இல்லை!, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இலங்கை இராணுவத்தின் பங்கை அம்பலப்படுத்துங்கள்!, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்  ? உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

IMG-20240820-WA0007.jpg

IMG-20240820-WA0050.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த  ஆண்டு 2023.06.29 ஆம் திகதி  இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரை இடம்பெற்று  12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த விடயம் தொடர்பாக எவ்வித உண்மைகளும்  வெளிவராத நிலையில்  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240820-WA0004.jpg

IMG-20240820-WA0057.jpg

IMG-20240820-WA0023.jpg

IMG-20240820-WA0051.jpg

https://www.virakesari.lk/article/191518

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் தலைவணங்குகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் பகுதியில் மேலும் பல இடங்களில் புதை குழிகள் - துரைராசா ரவிகரன் 

Published By: VISHNU  21 AUG, 2024 | 02:06 AM

image

கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் இன்றையதினம் (20.08.2024) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயமானது ஆரம்பத்திலே நீதிமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பலராலும் வைக்கப்பட்ட கோரிக்கை சர்வதேச பொறிமுறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும். 

யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட துறையினை சேர்ந்த மாணவர்களோ, பேராசிரியர்களோ இந்த கண்காணிப்பில் பார்வையிடுதலில் இருக்க வேண்டும். அந்த கோரிக்கைகள் பலவாறாக முன் வைக்கப்பட்டது. இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. இரண்டு, மூன்று நாட்கள் பரமு புஷ்பரட்ணம் ஐயா அவர்கள் வந்திருந்தார். ஆனால் அவரும்  பின்னர் வரவில்லை.

ஏனோ தெரியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு இந்த உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. 

இலங்கை அரசாங்கமானது எத்தனையோ படுகுழிகளை இலங்கை அரசாங்கத்தினுடைய பார்வையில், கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றுக்கும் நீதியான, நேர்மையான வகையில் அறிக்கைகள் வரவில்லை .

1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கர்நாட்டுக்கேணி ஆகிய 6 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்களும் இடம்பெயர்ந்து 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் மீள்குடியேற்றப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது இப் பிரதேசம் இராணுவ பிரதேசமாக இருந்தது.

2009 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்ட, உறவுகள் வட்டுவாகலில், கடலில், முகாமில் என்று பலவாறு கையளிக்கப்பட்ட உறவுகள், சரணடைந்தவர்கள் இந்த புதைகுழியில் அகப்பட்டிருக்கலாம் என்பது மக்களுடைய நம்பிக்கை. எங்களுடைய நம்பிக்கை. 

அப்படி இருக்கும்போது அகழ்வை செய்து இப்போது முடிந்துவிட்டது என கூறிகின்றார்கள். கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் இப்படிப்பட்ட புதை குழிகள் இருக்கிறது என்பது இந்த மக்களுடைய கருத்து. ஆனால் இதற்கான ஒரு நீதி  கிடைக்கவில்லை.  

உள்ளக பொறிமுறையிலே மக்கள் யாருக்குமே நம்பிக்கை இல்லை.  யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை முழு பொய்யுரைப்பவர்களாகத்தான், பொய்களை பேசி வருகின்றார்கள் அறிக்கை இடுகின்றார்கள். தமிழ் மக்களுக்கான நியாயமான எந்த ஒரு கருத்துக்களும் வழங்கப்பட்டதா? என பார்க்க வேண்டும். எங்களுக்கு தேவை சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும். 

எத்தனை தாய்மார் குழந்தைகளை தேடி, பிள்ளைகளை தேடி இறந்து விட்டார்கள். இப்படியான நிலமையில் அவர்களுடைய ஏக்கம், அவர்களுடைய கண்ணீர், இவற்றிற்கு பதில் கூறியே ஆக வேண்டும். எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆனால் சர்வதேசம் நிச்சயமாக கண்காணித்து நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/191575

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.