Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும்; பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழ்தேசிய பொது கட்டமைப்பு சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைப்பு

Published By: DIGITAL DESK 3   22 AUG, 2024 | 10:04 PM

image

(எம்.நியூட்டன்)

தமிழ் மக்களின் மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும்  என்பதற்காவே பொதுவேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளோம் என தமிழ்தேசிய பொது கட்டமைப்பு  சுவிஸ் தூதுவரிடம் எடுத்துரைத்துள்ளது.

தமிழ்தேசிய பொதுக் கட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து துதூவருக்குமிடையிலான சந்திப்பு புதன்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த சந்திப்பில் பொதுகட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமசந்திரன் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் மற்றும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்  உள்ளிட்டோர் கலந்துரையாடியிருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

சுவிட்ஸர்லாந்து துதூவர் தலைமையிலான குழுவினர் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்கள். அதிலும் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டார்கள் குறிப்பாக இலங்கையில் ஜனாதிபதி என்னும் ஒருவர் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் தமிழ்மக்களை பொறுத்தவரையில் யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள்.  ஆனால் எந்த ஜனாதிபதியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதில் ஆக்க பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்வில்லை.  யுத்தத்திற்கு பிற்பாடு கூட இதுவரையில் மூன்று ஜனாதிபதிகள் வந்தும் எந்த ஐனாதிபதியும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை. 

தற்போதைய ஐனாதிபதியும்  கடந்த இரண்டு வருடமாக பதவியில் இருக்கிறார். அவரும் குறைந்த பட்சம் 13 ஆம் திருத்த சட்டத்தை தானும் நடைமுறைப்படுத்த அக்கறையாக இருக்கவில்லை. ஆதலால் இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகள் அல்லது ஜனாதிபதிகளுடைய நடவடிக்கை காரணமாகத்தான்  நாங்கள் வேறுவழியில்லாமல்  ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வேட்பாளரை நிறுத்துவதற்கு முன்வந்து இருக்கிறோம்.

இதற்கூடாக நாங்கள் கூறவுள்ள விடயம் இலங்கை அரசாங்கம்  தமிழ் தேசிய  இனப்பிரச்சினையை பின்னுக்கு தள்ளி இந்த நாட்டில் வெறும் பொருளாதார பிரச்சினை மட்டும்தான் இருக்கிறது என்ற மாயையை உருவாக்க நினைக்கிறது அது அவ்வாறு இல்லை. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதனை வெளிப்படுத்தும் நோக்கத்துடனும்  அதனை சிங்கள அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும், இராஐதந்திர சமுகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்  என்பது எங்களுடைய முக்கிய நோக்கம்.

அதன் அடிப்படையில்தான் பொதுவேட்பாளரை நிறுத்தியிருக்கின்றோம். ஆகவே வடக்க, கிழக்கில் சுமார் பதின்மூன்று இலட்சம் தமிழ் வாக்குகள் இருக்கின்றது. அந்த நிலையில் நாம் பெரும்பான்மை வாக்குகளை எடுப்பதன் ஊடாக தமிழ்மக்களினுடைய மனோநிலையை ஜனநாயக ரீதியாக எவரும் புரிந்து கொள்ள முடியும்.

இதுவரை காலமும் தமிழ் மக்களிடையே ஒற்றுமையில்லை என கூறிவந்தவர்களினுடைய பிரச்சினைகளையும் அது தீர்க்கும் எனில், தற்போழுது சிவில் சமூகங்கள், தமிழ்தேசிய பரப்பில் இருக்கக் கூடிய தமிழ்கட்சிகள் மிகப் பெருமளவில் ஒன்றுசேர்ந்து இந்த விடயத்தை முன்னேடுத்துள்ளன. ஆகவே இத்தகைய விடயத்திற்காக நாம் இவற்றை கையாளுகின்றோம் என்பதை அவருக்கு கூறியிருந்தோம்.

இதனைவிட தற்போது வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் தற்போதைய நிலமைகள், தென்னிலங்கை நிலைப்பாடுகள் தொடர்பிலும் நிண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என்றார்.

https://www.virakesari.lk/article/191717

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.