Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 AUG, 2024 | 01:00 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்) 

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முக்கிய நாடுகளின் தலையீடுகளும் கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. புவிசார் அரசியல் போட்டியில் இலங்கையின் மூலோபாய முக்கியத்தவத்தின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதி தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருவதாக கொழும்பை தளமாக கொண்ட தேசிய இராஜதந்திர மையம் குறிப்பிட்டது.   

உத்தேச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்த முக்கிய தேர்தல்களைப் போலவே, நாட்டின் கீழ் மட்ட அரசியல் செல்வாக்கு மற்றும் நகர்வுகளை மதிப்பிடும் வகையில் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும்  முக்கிய நாடுகள் பல ஆர்வத்துடன் கொழும்பில் செயல்பட்டு வருகின்றன. அனைத்து பிரதான கட்சிகளுமே கடந்த மே தினத்தை எதிர்கால தேர்தலின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் கூட்டங்களை நடத்தியிருந்தன. 

இந்த கூட்டங்களின் பிரதிபலிப்புகள் முக்கிய நாடுகளின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருக்கும் சர்வதேச நாடுகள் உத்தேச ஜனாதிபதி தேர்தலின் அரசியல் முன்னேற்றங்களை அவதானிப்பது பொதுவான விடயமாகும். குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பிரித்தானியா உட்பட பிற மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதி தேர்தலின் சாத்தியமான மக்கள் ஆதரவு குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றன. 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத் துறையின் துணை அமைச்சர் சன் ஹையானின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது நேரடியாக மக்கள் மத்தியில் சென்று கருத்து கணிப்புகளை மேற்கொண்டிருந்தார். அது மாத்திரமன்றி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட அனைத்து  பிரதான அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் உண்மையான நிலைப்பாட்டை அறியும் சீனாவின் ஆர்வமே இதன் மூலம் வெளிப்படுகின்றது. 

இதே போன்று ஜனாதிபதித் தேர்தலின் சாத்தியமான விளைவுகளை முன்கூட்டியே மதிப்பிடுவதில் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளும் ஆர்வமாக உள்ளன. குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மீதான ஈடுபாடு பொருளாதார முதலீடுகள் முதல் புவிசார் அரசியல் செல்வாக்கு வரை அந்தந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளின் வெளிப்பாடாகவே உள்ளது. 

இலங்கை தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகள் எப்போதும் இருந்துள்ளன. ஆனால் அவற்றுக்கு எதிரான நேரடியான குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக மறைமுகமான சாடல்களும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்திகளுமே வெளிப்படுத்தப்படுகின்றன. இலங்கையை பொறுத்த வரையில் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தேசிய அளவில் மாத்திரமன்றி பிராந்திய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. 

பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்து ஈராண்டுகளை கடந்து இடம்பெறும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலானது, முக்கிய நாடுகளின் புவிசார் அரசியல் கரிசனைகளும் ஈடுபாடுகளையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. பூகோள ரீதியில் இலங்கையின் மூலோபாய இருப்பிடத்தின் முக்கியத்துவமே உலக நாடுகளின் தலையீடுகளுக்கு காரணமாகின்றன. குறிப்பாக அண்மைய காலமாக கொழும்பு வரும் பெரும்பாலான உலக நாடுகளின் போர் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு செல்லாது திரும்புவதில்லை. இதற்கு அந்த தறைமுகத்தில் உள்ள இயற்கையான சிறப்புகளே காரணமாகின்றது. இவ்வாறு பல்வேறு விடயங்கள் இலங்கை குறித்து பிராந்திய போட்டியாளர்களுக்கு காரணங்களாகியுள்ளன. 

எனவே இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் கடனை மீள்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலங்கையின் வளங்கள் ஊடாக பயனடைதல்  போன்ற விடயங்களில் கூடுதல் அவதானம் செலுத்துகின்றன. இலங்கையின் பிரதான கடன் வழங்குனரான சீனா தனது கடன் தொகையை மீளப்பெற கூடிய சாதகமான சூழல் நாட்டில் உருவாவதை விரும்பும் அதே வேளை, இந்தியாவும் இலங்கையில் தனது நலன்களின் ஆர்வம் செலுத்தி இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஆசிய நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் நில இணைப்புகளில் இலங்கையுடன் முனைப்புடன் செயல்படுகின்றது. இது சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி திட்டத்திற்கு நிகரான இந்திய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/191921

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.