Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து அதிகார பகிர்வை முடிவுறுத்துவேன்; ஷரியா சட்டத்துக்கு இடமில்லை - ஜனாதிபதி வேட்பாளர் சீலரத்ன தேரர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 AUG, 2024 | 09:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சிங்களவர்கள் தொடர்பில் மகாநாயக்கர்கள் அவதானம் செலுத்தாவிடின் சிங்கள இனப்பரம்பலும், பௌத்த சாசனமும் இல்லாதொழியும். ஷரியா சட்டத்தை செயற்படுத்த ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்துச் செய்து அதிகார பகிர்வு என்பதை முடிவுக்கு கொண்டு வருவேன். சிங்களவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனசேனா முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை  (28)  இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை தொடர்பான தெளிவுப்படுத்தல் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

எமது கட்சியில் சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படும்.  சிங்களவர்களின் இனபரம்பல் தற்போது சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.  

சிங்களவர்களின் பொருளாதார நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்கள் அவதானம் செலுத்தி ஏழ்மையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையேல்  சிங்கள இனமும், பௌத்த சாசனமும் இல்லாதொழியும். 

225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த மக்களை பற்றி சிந்திப்பதில்லை. தம்மையும், தமது குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலைமையை நாங்கள் மாற்றியமைப்போம்.  எமக்கு ஆணை வழங்கினால்  நாட்டை தன்னிறைவடைய செய்வோம். 

இது சிங்கள பௌத்த நாடு! ஆகவே  சிங்களவர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் எமக்கு வாக்களிக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாகவும், இயலும் என்று குறிப்பிட்டுக் கொள்கின்றவர்கள்  அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியுள்ளார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது  திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு பற்றி பேசப்படுகிறது. 

தெற்கு துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தென்மாகாணம் சீன காலனியாக மாறினால்  சீனர்களும் இலங்கையில் குடியுரிமை கோருவார்கள். 

அவர்களுக்கு தென்மாகாணத்தை தனி பிராந்தியமாக வழங்க நேரிடும். நான் இன்று குறிப்பிடுவது இன்று நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால் என்றோ ஒருநாள் சிங்களவர்கள் எனது கருத்தை சிந்தித்துப் பார்ப்பார்கள். 

சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் அவரவரின் மொழி உரிமையை கொடுக்க வேண்டும். இலங்கையில் சுதேச முஸ்லிம்கள்  வெளிநாட்டு முஸ்லிம்களின் வருகையினால் இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள்.

சரியா சட்டத்தை ஒருபோதும் நாங்கள் செயற்படுத்த இடமளிக்க முடியாது. இங்கு வாழ விருப்பமில்லாதவர்கள்  ஸரியா சட்டம் உள்ள நாடுகளுக்கு தாராளமாக செல்லலாம்.

கேள்வி –பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உங்களின் திட்டம் அல்லது கொள்கை என்ன, வற் வரியை நீக்குவீர்களா?

பதில் - பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடி பொருளாதார கொள்கைத் திட்டங்களை வகுக்க வேண்டும். வற் வரியை நீக்கினால் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது. உணவு  பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவேன்.

கேள்வி – அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் - 13 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்வேன். இந்த திருத்தத்தால் எவருக்கும் நல்லது நடக்கவில்லை. மாகாண சபை முறைமை வெள்ளை யானை போன்று பயனற்றது. உள்ளுராட்சிமன்றங்கள் போதும் மாகாணங்களை நிர்வகிப்பதற்கு. 

அதிகார பகிர்வுக்கு இடமில்லை. என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் அரசியலமைப்பின் 13 ஆவது திருதத்தை முழுமையாக இரத்து செய்து அதிகார பகிர்வு என்பதற்கு முடிவு கட்டுவேன் என்றார்.

https://www.virakesari.lk/article/192253

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேரர் தானே தேர்தல் நியமனப் பத்திரம் தாக்கல் செய்யப் போகும் போது கட்டுப்பணத்தை மறந்து விகாரையிலேயே விட்டு விட்டுப் போனவர்........... பிறகு அடுத்த நாள் போய்த்தான் நியமனப் பத்திரம் தாக்கல் செய்தவர். தேரரின் 50,000 ரூபாவை காப்பாற்ற கடவுள் ஒரு முயற்சி செய்திருக்கின்றார்.......... ஆனால் விதி கடவுளை விடவும் வலியது போல........

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வதில் எதாவது ஒன்றைக்கூட பிழை என்று மற்ற சிங்கள  கட்சிகளின் வேட்பாளர் சொல்லட்டும் பார்ப்போம்.

இது தான் சிங்களம்.

இங்கே சிலர் சொல்லுவார்கள் சிங்களவர் நல்லவர் என்று.

அனால் குழு, சிங்களம், பௌத்தம் என்று வரும் பொது சிங்களவரின் நிலைப்பாடு பொதுவாக இது தான்.

ஹிந்தியாவும், மேற்கும் அதை தான் சொல்கிறது, சிங்களவர் விரும்பினால் இனப்படுகொலையும் செய்யலாம் என்பது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.