Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamil-unaites-libaration-front.png?resiz

“சங்கிற்கு“ வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள் – தமிழர் விடுதலைக் கூட்டணி!

தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

எம் அன்புக்கினிய தமிழ் மக்களே! ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள். தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை.

இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம். ஏன் தெரியுமா?

நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது  உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.

வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை.

கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத்  தயங்காது.

எமது ஆதரவு தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்ப்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கே. தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம் –  என  குறிப்பிடப்பட்டுள்ளது.

IMG-20240905-WA0023.jpg?resize=424%2C600

https://athavannews.com/2024/1398260

 

#####################     ###################   #######################

 

458631258_519351893837361_80647840616489

நடை பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் வாக்குச் சீட்டு இதுதான்.  

😂

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2024 at 10:23, தமிழ் சிறி said:

458631258_519351893837361_80647840616489

நடை பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் வாக்குச் சீட்டு இதுதான்.  

😂

தபால் மூல வாக்களிப்பு; வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவருக்கு எதிராக முறைப்பாடு

Published By: DIGITAL DESK 3   07 SEP, 2024 | 02:49 PM

image
 

தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டை  புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில்  பகிர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்ததாக அரசியல் கட்சி ஒன்றின் மத்திய குழு உறுப்பினரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள நாழில் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வாக்குச் சீட்டில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக அடையாளம் இடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் இடம் பெற்ற பிரதேசம் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.

https://www.virakesari.lk/article/193077

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஏராளன் said:

தபால் மூல வாக்களிப்பு; வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தவருக்கு எதிராக முறைப்பாடு

Published By: DIGITAL DESK 3   07 SEP, 2024 | 02:49 PM

image
 

தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டை  புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில்  பகிர்ந்த அரசியல்வாதிக்கு எதிராக வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்ததாக அரசியல் கட்சி ஒன்றின் மத்திய குழு உறுப்பினரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சிங்கள நாழில் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வாக்குச் சீட்டில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக அடையாளம் இடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் இடம் பெற்ற பிரதேசம் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.

https://www.virakesari.lk/article/193077

அரசாங்க செலவில்,  சங்கிற்கு… அகில இலங்கை முழுவதும் நல்ல விளம்பரம் கிடைத்திருக்கு. 😂

சங்கே… முழங்கு. 😁

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.