Jump to content

ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என்கிறார் ஸ்ரீதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை அரசியல்வாதிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வரும் தமிழ் அரசியல்வாதிகள் ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை தொகுதி கிளை நேற்றையதினம்(17)  ஏற்பாடு செய்த பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு தேர்தல்கள் வருகிற பொழுது நாங்கள் சொல்லுகின்ற வார்த்தைகள்  தேர்தல் முடிவுற்றதும்  எங்களுக்கு ஒரு பயனையும் தரவில்லை என  2009 பின் பல தடவைகள் கூறியிருக்கிறோம்.

காரணம் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு இனம்.  இதே வட்டுக்கோட்டை மண்ணில் நாங்கள் எல்லோரும் இருந்து பேசுகின்ற இந்த மைதானம் சூழ்ந்து இருக்கின்ற  தேசிய விடுதலை மண்ணில் 1970 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்து இருந்தோம்.

மக்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம் தான் என.  காரணம் நாங்கள் தொடர்ந்து இனப்படுகொலை செய்யப்பட்ட பொழுது எங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து எங்கள் உயிர்களை குடித்த பொழுது வேறு வழியின்றி நாங்கள் அறவழியிலே போராடி இனம் ஆயுதம் தூக்கத் துணிக்கப்பட்டது.

பல பேச்சு வார்த்தைகளை நடத்தினோம் பல விட்டுக்கொடுப்புகளை செய்தோம் எல்லாவற்றிலும்  ஏமாற்றப்பட்டோம்.

தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் வைத்து சொன்னார் நான் எல்லா வழிகளிலும் முயற்சித்து பார்த்தேன்.  எதுவும் நடக்கவில்லை.  இழந்து போதும்  நாங்கள் ஒரு இறைமையுள்ள இனமாக இருந்திருக்கிறோம்.

எங்களுடைய இறைமையை மீட்டெடுக்கும் எங்களுடைய இறுதி தருணமாக  அறவெளிப் போராட்டம் என்றார்.

அவருடைய கருத்து எங்களுக்கு முழுமையான இலக்கு தமிழினம் தான் என்ற செய்தியைச் சொன்ன மண் இந்த மண். அதனால் தான் இந்த மண்ணுக்குரிய மகிமை வித்தியாசமானது .

1977 தேர்தலில்  24 தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தோம் 18 தொகுதிகளில் எங்களுடைய மக்கள் எங்களை வெல்ல வைத்து மிகப்பெரிய ஆணையை   வழங்கிய காலம்.

ஆனால் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாகவும் 1983 இல் எங்கள் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகள்  நாங்கள் இந்த மண்ணிலே அனாதைகள் ஆக்கப்பட்டோம் .

நாங்கள் அழிக்கப்படும் அனாதைகள் ஆக்கப்பட்டதை தொடர்ந்து தமிழினம் தன்னைக் காப்பதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய தேவை சிங்கள ஆட்சியாளர்களால் திணிக்கப்பட்டது.

அதனைத் தான் 1985 ஆம் ஆண்டு இந்தியாவினுடைய இந்தியா டுடே பத்திரிகைக்கு  தலைவர் பிரபாகரன் அவர்களை செவ்வியில் நாங்கள் விரும்பி ஆயுதத்தை தூக்கவில்லை எங்கள் பாதுகாப்புக்காகவும்   மக்களின் பாதுகாப்புக்காக நாங்கள் ஆயுதங்களை தூக்க வேண்டி நிர்பந்திக்கப்பட்டோம் என்றார்.

தலைவரின் கருத்தின் ஊடாக ஆயுதங்களை தேடி நாங்கள் போகவில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாகச் சொல்லி இருந்தார்.

உலகத்தினுடைய வரலாற்றிலேயே இரண்டு செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன ஒன்று1947 ஆம் ஆண்டு

இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கி தமிழர்கள் உரிமையுள்ள இனம் .

அவர்களுக்குரிய சுய நிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வுதான் இந்த மண்ணில் அவர்களுக்கு தனியரசாக தனித்துவமான இனமாக அடையாளப்படுத்தும் என கொழும்பு எழுதும் இளைஞர் சங்கத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரை  வரலாற்று  முக்கியத்துவம் வாழ்ந்த உரையாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்தியா டுடே ஊடகத்துக்கு வழங்கிய செவ்வி தமிழர்கள் ஏன் ஆயுதம்   தூக்கினார்கள் என்பதற்கான உண்மையைக் கூறியுள்ளார்.

அதனால் தான் அன்புக்குரிய சகோதரர்களே சகோதரிகளே நாங்கள் விரும்பி ஆயுதம் தூக்கவில்லை.  எங்களுக்கு முன்னாள் இருக்கும்  செழியன் காயப்பட்டு நடக்க முடியாமல் மேடையிலே ஏற முடியாமல் இருக்கிறார்.

இந்த மண்ணிலே மக்களுக்காக போராடி  இரத்தம் சிந்தியதால் விழிப்புண் அடைந்தவர்களாக எங்களுடைய தேசிய விடுதலை நேசித்த இனம் அதனால்தான் எங்கள் வீட்டினுடைய ஒவ்வொரு கதவுகளையும் தட்டிப் பாருங்கள்.

வட்டுக்கோட்டை தொகுதியில் இருக்கின்ற  கதவுகள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இருக்கிற தமிழ் மக்களுடைய ஒவ்வொருவருடைய வீட்டு கதவுகளையும் தட்டிப் பாருங்கள் யாரோ ஒரு போராளிகளுடைய வீர சாவு யாரோ ஒரு போராளியின் விழிப்புண் காயங்கள் இருக்கும்.

அதனால்  தான் யுத்தம் முடிவுக்கு வந்த பிற்பாடு எங்கள் மீதான யுத்தம் மொளனிக்கப்பட்ட பிற்பாடு நாங்கள்  இந்த மண்ணிலே நடக்கிற ஒவ்வொரு தேர்தல்களையும் ஒரு போர்க்களமாக பார்க்கிறோம் .

அது ஒரு யுத்த களமாக பார்க்கிறோம் அதனால்தான்  போர்க்களத்தில் நாங்கள் பாவிக்கின்ற ஆயுதம் வெடி மருந்துகள் அல்ல பீரங்கிக் குண்டுகள் அல்ல துப்பாக்கிகள் அல்ல உங்கள் கைகளுக்கு கிடைத்துள்ள வாக்குச் சீட்டு.

21 ஆம் திகதி   வாக்கு சீட்டுகள் தான் உங்களுடைய அந்த மிகப்பெரிய ஆயுதம் அதனை நாங்கள் இனத்துக்காக ப்  பயன்படுத்துகிறோமா அல்லது பணத்திற்காக தெற்கு அரசியல் வாதிகளுக்கும்  பயன்படுத்தப்போகிறோமா?

எல்லா சிந்தனையும் எண்ணமும் எங்களுடைய கைகளில் எங்களுடைய மனங்கள் தான் இருக்கிறது நாங்க வழமையாக 1978 ஆம் ஆண்டிலிருந்து யாரோ ஒரு சிங்களம் வேட்பாளருக்கு  வாக்களித்துவிட்டு கைய கட்டி நின்ற இனம்.

ஒரு அடிமையாக அது ஒரு சிங்கள வேட்பாளருக்கு ஒரு தென்பகுதி வேட்பாளருக்கு அளிக்கிற வாக்குத்தானே என பேசாமலே இருந்து விட்டுப் போன இனம் இன்று எமக்கான வேட்பாளரை களமிறங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு எங்கள் மீது யார் குற்றம் புரிந்தார்களோ எங்கள் மீது யார்  குண்டுகளை வீசினார்களோ எங்கள் மீது யார் கொத்துக் குண்டுகளை வீசினார்களோ எங்கள் மீது யார் பொஸ்பரஸ் குண்டுகளை வீசினார்களோ அந்த வீசிய இராணுவத்தினுடைய தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு  வாக்களிக்குமாறு  எங்களுடைய கட்சி கேட்டிருந்தது.

நாங்களும் மறுக்கவில்லை போய்  வாக்களிப்போம் காரணம் எய்தவன் இருக்க அம்பை நோவதா என எங்களை  நாங்கள் ஆறுதல் படுத்திச் சொல்லிக் கொண்டோம்.

மஹிந்த ராஜபக்ஷ என்கிற இனப்படுகொலையாளியை  அகற்றுவதற்காக நாங்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்தோம் என்ற செய்தியை சொன்னோம் அவர் தோற்றுப் போனார்.

2015 ஆம் ஆண்டு மகிந்த எதிரி  மைத்திரிக்கு வாக்களியுங்கள் என்றோம்  எங்களுடைய மக்கள்  வாக்களித்தார்கள் அவர் வென்றவுடன் சொன்னார் நான் இந்த தேர்தலில் தோற்று இருந்தால் ஆறடி நிலம் கூட எனக்கு மிஞ்சியிருக்காது.

அவரை திருகோணமலையில் மாலை சூடி வரவேற்ற சம்பந்தன் ஐயா  மண்டேலாவாக வந்திருக்கிறார்  என வாழ்த்தினார்.

ஆனால்  நான்கு வருடங்களில் மீண்டும் அதே கோர முகத்தை மைத்திரிபால சிறிசேன காட்டினார்.

எந்த வழியில் வந்தாரோ என்ன அரசியல் தீர்வை செய்வேன் என சொன்னாரோ அவற்றையெல்லாம் விட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார்.

2020 ஆம் ஆண்டு நாங்கள் திரும்ப நடந்த ஜனாதிபதி தேர்தலில்  சஜித் பிரேமதாசாவுக்கு எங்களுடைய கட்சி வாக்களிப்பதாக நாங்கள் மக்களிடம் கேட்டோம்  மக்கள் வாக்களித்தார்கள்.

அவரும் தோற்றுப் போனார்  தமிழ் மக்கள் வாக்களித்ததற்காக 2009 ஆம் ஆண்டடு இறுதி யுத்தத்திலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு மன்னிப்பு கேட்கக் கூட அவருக்கு மனம் வரவில்லை.

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின்  கோட்டபாய ராஜபக்ஷ ஓட ஓட விரட்டப்பட்ட பொழுது அந்த இடத்திற்கு ரணில் விக்கிரமசிங்கமும் டக்ளஸ் அழகப்பெருமாவும் போட்டியிட்டார்கள்.

அழகப் பெருமாவை ஆதரித்தோம்.  அவரும் தோற்றுப் போனார்  வரலாற்று ரீதியாக அவர்களுக்கு வாக்களித்து வாக்களித்து தோற்றுப்போன இனம் நாங்கள் எதையுமே அடைய முடியவில்லை.

ஒருவரை வெல்ல வைத்தோம்.  அவரும்  எங்களுக்கு எதுவும் செய்யவில்லை.

ஆகவே அன்புக்குரியவர்களே இப்பொழுது வரலாற்றை  திரும்பிப்  பாருங்கள்.

நாங்கள் எவ்வளவு தூரம் மனம் திறந்து  செய்திருந்தோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு எதையுமே செய்யவில்லை அதனால் தான் இப்பொழுது முடிவுக்கு வந்தோம். பொது வேட்பாளரை ஆதரித்து எங்கள் செய்தியை உலகிற்கு கூறுவதற்கு.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற 14,40,000 தமிழ் வாக்காளர்களை நோக்கி  தமிழ் பொது வேட்பாளர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தெற்கு பயப்படுகிறது.  தமிழ் மக்கள்  பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள்  வாக்களிக்க போகிறார்கள். அதனால் தான்  கடைசி  நேரத்திலும் கூட அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்கள் .

அவர்களுக்கு பின்னால் தமிழ அரசியல்வாதிகள் சிலர் ஆளுநர் பதவி தருவார். அமைச்சுப் பதவி தருவார் பேரம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்

ஆகவே,  எமது மக்கள் பொது வேட்பாளருக்கு வழங்கும் வாக்குகள் தெற்கு  மட்டும் அல்ல.

பதவிக்கும் பணத்துக்கும் விலை போகும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/309530

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள கட்டுரையை வாசிக்கும் போது ஏற்படும் கேள்வி,...இந்தாள் என்ன லூசா,.....

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மேலேயுள்ள கட்டுரையை வாசிக்கும் போது ஏற்படும் கேள்வி,...இந்தாள் என்ன லூசா,.....

இன்று காலையில் சிறீதரனின் பேச்சை வாசிக்கும் போது உங்களது எண்ணம்தான் எனக்கும் வந்தது. எழுபதுகளில் எங்கள் நகரத்தில், காலையில ஏழுமணிக்கு ஒருவர் வந்து இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார். இடையிடையே சிரித்தும் கொள்வார். அப்படி ஒரு படத்தைப் போடலாம் என எண்ணியிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை.  மதியம் படத்தைத் தயார் படுத்திவிட்டுப் பார்த்தால் உங்கள் கருத்து, “இந்தாள் என்ன லூசா” என்றிருக்கிறது.

large.IMG_7052.jpeg.ebdd3640783d084af81a

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள்  மட்டுமல்ல இந்த கூட்டமே லூசுகள் தான்.  14 லட்சம்  வாக்குகளில் இரண்டு அல்லது மூன்று  லட்சத்தை பெற்றுவிட்டு வந்து மாபெரும்  பேரெழுச்சி என்று லூசுகள் போல் கத்த தான் போகிறார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

இந்தாள்  மட்டுமல்ல இந்த கூட்டமே லூசுகள் தான்.  14 லட்சம்  வாக்குகளில் இரண்டு அல்லது மூன்று  லட்சத்தை பெற்றுவிட்டு வந்து மாபெரும்  பேரெழுச்சி என்று லூசுகள் போல் கத்த தான் போகிறார்கள்.  

சேர்ந்து உடுக்கடிச்சு சன்னதமாட புலம்பெயர் போராட்டக்காரர்களும் இருக்கினமெல்லே! 😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

சேர்ந்து உடுக்கடிச்சு சன்னதமாட புலம்பெயர் போராட்டக்காரர்களும் இருக்கினமெல்லே! 😂

"உடுக்கடித்து சன்னதம் ஆடுதல்" எனும் மரியாதையான வாக்கியம் உந்த பிக்ளிகாப் பசங்களுக்கு கொஞ்சம் அதிகம்தான் ...😁

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம்   ராமேசுவரம்: இலங்கை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக மீனவர்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கையின் வட மாகாண கடற்பகுதிகிளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள், இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தி விட்டுச் செல்கிறார்கள், மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிவிட்டுச் செல்கிறார்கள், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும் கடலின் சூழலியலையும் அழிக்கிறார்கள் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர்ப் போராட்டங்களை நடத்தினர்.   இலங்கை மீனவர்களுக்கும் அபராதம், சிறை தண்டனை: இந்தத் தொடர் போராட்டங்களின் விளைவாக, இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகள் மற்றும் மீனவர்களுக்கும் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் கடந்த ஜனவரி 24, 2018 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், எல்லை மீறும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும், 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை ரூ.50 லட்சம், 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.2 கோடி, 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.10 கோடி, 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு இலங்கை ரூ.15 கோடி, 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு இலங்கை ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம் விதிக்க முடியும். இதன் அடிப்படையில் இலங்கை எல்லைக்குள் சிறைப்பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பபடுகிறது. இலங்கை அரசு, வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்கள். படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது முறையாக சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனையும் படகின் ஓட்டுநர்களுக்கு முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலே சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. முதல்முறையாக சிறைப்பிடிக்கப்பட்டாலும் மீனவர்களுக்கு அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என தற்போது முழுமையாக வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை இலங்கை நீதிமன்றங்கள் அமல்படுத்த துவங்கி உள்ளன.   இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் கூறியது: “கடந்த 2010-ல் துவங்கி பல கட்டங்களாக சென்னை, டெல்லி, கொழும்பு ஆகிய நகரங்களில் இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளைக் கொண்டு பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மீனவர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் இன்று வரையிலும் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே போகிறது.   இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தினை இலங்கை அரசு படிப்படியாக அமல்படுத்தி தற்போது மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் கோடிக் கணக்கில் அபராதம் விதிக்க துவங்கி உள்ளது. தினக்கூலிகளாக கடலுக்குச் செல்லும் மீனவர்களால் எவ்வாறு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அபராதங்களை செலுத்த முடியும்? எனவே, இந்த வெளிநாட்டு மீன்பிடித் தடைச்சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதுடன், நீண்ட காலமாக நடைபெறாமல் உள்ள இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி தீர்வு காண வேண்டும்” என்றார்.   தமிழக மீனவர்களுக்கு கோடிகளில் அபராதம் விதிக்கும் இலங்கை: என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? | Sri Lanka will impose crores of fines on TN fishermen: What is the central govt going to do? - hindutamil.in
    • எனக்கே புரியாத அளவுக்கு சிறியர்?? வாழ்த்துக்கள் 🤣
    • பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. இவை எந்தெந்த நாடுகள்? 
    • வரலாற்று ரீதியாக யாழ் பல்கலைக்கழக சமூகம் மிகச்சிறந்த பணிகளை ஆற்றி வருகிறது. அதன் போதும் இவ்வாறான ஓரிரு குழுவினர் அறிக்கைகளை மட்டுமே விட்டு குழப்பங்களை உருவாக்குவது வழமை. அது சார்ந்த பதிவு என்பதால் இங்கே பதித்தேன். நன்றி. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.