Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

23 SEP, 2024 | 11:56 AM
image
 

எரிக்சொல்ஹெய்ம்

இடதுசாரி அனுரகுமார திசநாயக்க வார  இறுதியில் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாரம்பரிய உயர்குழாமிற்கு வெளியே ஒருவரை இலங்கை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வது சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் இதுவே முதல் தடவை.

ஏகேடி என அழைக்கப்படும் திசநாயக்க அனுராதபுரத்தில் மிகவும் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர்.

அவரது கட்சியோ அல்லது கூட்டணியோ கடந்த காலத்தில் ஆட்சிக்கு அருகில் இருந்ததில்லை.

பொருளாதார நெருக்கடியின் போது வறிய  ஏழ்மையான நிலையில் உள்ள இலங்கையர்கள் அனுபவித்த வலிக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு சான்று.

anurakumara.jpg

ஊழலிற்கு எதிரான ஏகேடியின் போராட்டத்திற்கும,; மக்களிற்கு அதிகளவு நலன்புரிசேவைகளை வழங்கவேண்டும் என்ற  அவரது வேண்டுகோள்களிற்கும் பரந்துபட்ட ஆதரவுள்ளது.

தேர்தல் வெற்றியாளரின் பலவீனம் என்னவென்றால் அவரது கூட்டணிக்கு இலங்கை போன்ற ஒரு  சிக்கலான அரசாங்கத்தை நிர்வகித்த அனுபவம் மிகவும் குறைவு.

மிகவும் சவாலான பொருளாதார சூழலில் தங்களின் பல வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவது அவர்களிற்கு மிகவும் சவாலான விடயமாக காணப்படலாம்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது அவர்களிற்கு மிகவும் கடினமான விடயமாக  அமையலாம்.

இந்த தேர்தல் முடிவுகள் வெளிநாடுகளின்  தலைநகரங்கள் பலவற்றில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இராஜதந்திரிகள் இரண்டு முறை சிந்திக்கவேண்டும்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏகேடி இந்தியா சீனா மேற்குலகை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டினார்.

நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு அவர் வெற்றிகரமான  தலைவராக மாறுவதற்கு உதவவேண்டும்.

அதிகசெழிப்புமிக்க அமைதியான இலங்கையே அனைவரினதும் நன்மைக்கு உகந்த விடயம்.

இந்த பயணத்தில் ஏகேடிக்கு உதவவேண்டும்.

இலங்கையின் தேர்தல் பிரச்சாரத்தில் பேரினவாதமும் இனதீவிரவாதமும் நீண்டகாலத்தின் பின்னர் எந்த முக்கியத்துவத்தையும் பெறாத தேர்தல் இது.

இந்த தேர்தலின் அமைதியிலிருந்தும்  தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் வெற்றிபெற்றவர் குறித்து வெளிப்படுத்திய நாகரீகத்திலிருந்தும் பல மேற்குலக நாடுகள் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.

இலங்கை பொருளாதாரரீதியாக மிக மோசமான நெருக்கடியிலிருந்தவேளை அதிலிருந்து நாட்டை மீட்டவர் என ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் பதிவு செய்யப்படுவார்.

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியமைக்காக உலக வரலாற்றில் எந்த தலைவரும் தெரிவு செய்யப்பட்டதில்லை.

https://www.virakesari.lk/article/194591

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நாங்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டு அவர் வெற்றிகரமான  தலைவராக மாறுவதற்கு உதவவேண்டும்.

 ஏகேடி மேற்கினுள் சங்கமிப்பதும் மக்களின் ஆணையை நிராகரிப்பதும் ஒன்றே.

என்ன தமிழர்களை சிங்களத் தேசியத்துள் கரைத்துவிட உழைத்துவரும் இந்த வெள்ளைநரி புதிய தலைமைக்கு உதவுமாறு ஊளையிடுகிறது.

 

1 hour ago, ஏராளன் said:

இலங்கையில் அரசியல் பூகம்பம்

முதலில் இந்தத்தலைப்பே பிழையானது. ''ஒரு புதிய அரசியல் தலைமையின் தொடக்கம் என்பதே பொருத்தம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.