Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 SEP, 2024 | 05:59 PM
image

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளோம்.

தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களைத் தேடி வருவோம். எங்களுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம். அனாதரவாக்கப்பட்டுள்ளோம். எனவே முன்னாள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.

தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்.

மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களும் எங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/195010

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயம் said:

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்

 

அரசாங்கத்தை விடுங்கள். மில்லியன் டொலர் கேள்வி என்ன என்றால் நமது தூண்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

 

அரசாங்கத்தை விடுங்கள். மில்லியன் டொலர் கேள்வி என்ன என்றால் நமது தூண்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான்.

சோசலிஸ்ட்கள் இன அடையாளத்தை பெரிதாக எடுக்க மாட்டார்கள் அவர்கள் அபிவிருத்தி,உற்பத்தி என்ற கோசத்தை முன் வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பார்கள்...அத்துடன் இனங்களின் தனித்துவத்தை அழிக்க முயற்சிப்பார்கள் ...ஆகவே தூண்கள் கொஞ்சம் யோசித்து செயல் பட வேண்டிய கால கட்டம் ..தமிழ்தேசியத்துடன் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய காலம்...

இந்த சோசலிஸ்ட்கள் எவ்வளவு காலம் ஆட்சி செய்வார்களோ தெரியவில்லை...இதன் பின்பு 10 வருடங்களின் பின்பு மீண்டும் நாமல்,அல்லது வேறு யாராவது ஆட்சியை கைப்பற்றினால் எம் மக்களின் அடையாளம் கேள்விகுறியாகும்..

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை ரீதியாக பார்த்தால் சோசலிஸ்டுகளுடன் தமிழ்த்தேசியம் இலகுவாக கைகோர்க்க வேண்டுமே? சோசலிசத்தின் அத்திவாரத்தில் தானே விடுதலை புலிகள் அமைப்பு  கட்டப்பட்டது? விடுதலை புலி உறுப்பினர்கள் எடுக்கும் உறுதிமொழியில் (முன்பு) சோசலிட் நாடு எனும் பதம் வருகின்றது அல்லவா? சிங்கள சோசலிஸ்டுகளும் தமிழ் சோசலிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து பயணித்தால் தமிழ்த்தேசியமும் சிங்களதேசியமும் மதிப்பிழந்து போய்விடும் என இரு இனத்தின் தேசிய தூண்களும் எண்ணுகின்றார்களா?

@putthan நீங்கள் இன்னமும் கே. இன்பராசாவின் சுயேட்சை குழுவுக்கு தூண்கள் வழங்கக்கூடிய ஆதரவு பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயம் said:

கொள்கை ரீதியாக பார்த்தால் சோசலிஸ்டுகளுடன் தமிழ்த்தேசியம் இலகுவாக கைகோர்க்க வேண்டுமே?

உண்மை மாற்று கருத்துக்கு இடமில்லை...தற்பொழுது உள்ள தமிழ் தேசிய தூண்கள் சோசலிஸ்ட்கள் அல்ல முக்கியமாக தமிழரசு கட்சியினர் ...பக்கா முதாலாளித்துவ சிந்தனையாளர்கள் ...(ஆகவே தான் இந்தியா இவர்களை உற்சாகப்படுத்துகின்றது...   ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒற்றுமாயாக இருங்கள் என பாடம் எடுத்து அனுப்புகின்றனர்)...
ஏனைய முன்னாள் போராளிகளின்(பாராளுமன்றம் சென்ற)  தமிழ் தேசிய கட்சிகள் அன்று சோசலிசம் பேசினார்கள் இன்று அவர்களும் வெள்ளைவேஸ்டி அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர்...
இளைஞர்கள் வரவேண்டும் சிறிலங்கா தேசியத்தில் தமிழ் அடையாளத்தை (நிலம் மொழி,)இழக்காமல் சோசலிச அரசியல் செய்ய வேண்டும் ....
திருகோணமலையில் ஒர் இளைஞனின் (ராஜ்குமார் ரஜீவ்காந்த் ...பெயர் சரியா தெரியவில்லை)பேட்டி பார்த்தேன் ஒரளவு நம்பிக்கையான பேட்டியாக இருக்கின்றது...

 

8 hours ago, நியாயம் said:

சிங்கள சோசலிஸ்டுகளும் தமிழ் சோசலிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து பயணித்தால் தமிழ்த்தேசியமும் சிங்களதேசியமும் மதிப்பிழந்து போய்விடும் என இரு இனத்தின் தேசிய தூண்களும் எண்ணுகின்றார்களா?

இருக்கலாம்....இரு இனத்துக்கும் பல கசப்பான அனுபவங்களை வரலாறு விட்டு சென்றுள்ளது...ஆகவே  பயம் இருப்பது நியாயமானது..அதிலும் தமிழ் தரப்பு பல விடயங்களில் நிரந்தர இழப்பை சந்தித்துள்ளது.

முதளாளித்துவ சிங்கள கட்சிகள் இனாவாதம் பேசி சிங்கள ,சிறிலங்கா தேசியத்தை காப்பாற்றிக்கொண்டு வருகின்றனர்...
சோசலிஸ்ட்கள் இந்த முறை இனவாதம் பேசவில்லை ஆனால் சோசலிசம் பேசி சிறிலங்கா தேசியத்தை கட்டியெழுப்பி தமிழ் இன அடையாளத்தை இல்லாமல் பண்ண முயற்சி செய்வார்கள்  

8 hours ago, நியாயம் said:

நீங்கள் இன்னமும் கே. இன்பராசாவின் சுயேட்சை குழுவுக்கு தூண்கள் வழங்கக்கூடிய ஆதரவு பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள்

இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ  பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ...😅


இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்...
இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை..
 

On 29/9/2024 at 16:29, நியாயம் said:

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்

இவர் தானே தலைவர் வருவார்,துவாரகா உயிர் உடன் இருக்கின்றார் என அறிக்கை விட்டவர் ,விடுபவர் ...இந்தியாவுக்கும் அடிக்கடிசென்று வருபவர் ..நாளைக்கு அமெரிக்கா சென்றாலும் செல்லலாம் ..ஆகவே அவரைப்பற்றி நான் பேசவிரும்பவில்லை ...தமிழ் மக்கள் இவரைப்பற்றியும் அறிந்திருப்பார்கள்

இப்படி எழுதினது புத்தன் என அவருக்கு சொல்லி போடாதையுங்கோ  பிறகு யூடியுப் நாறிபோய்விடும் ...


இன்று பல தமிழ் எலைட் நபர்கள் அனுராவை தேவதூதராக ,மீட்பனாக பார்க்கின்றனர் அத்துடன் அவர்களின் வட்சப் குறூப்பில் (சிங்களவர்களுடன் படித்தவர்கள்)வரும் பல கிளிப்புகளை வொவர்ட் பண்ணுகின்ரனர்...
இந்த எலைட் குறூப்கள் இவ்வளவு நாளும் தாங்கள் உண்டு தங்கன்ட வேலை உண்டு என இருந்த வையல் ...இப்ப அரசியல் பேசுகின்றோம் என அணுராவின் படம் இருக்கும் சகல கிளிப்புக்களை போஸ்ட் பண்ணுகினம் ....அந்த கிளிப்பை அவர்களே பார்ப்பதில்லை ...எனபது தான் வேடிக்கை..
 

  • கருத்துக்கள உறவுகள்

 விரிவான பதில்களுக்கு நன்றி புத்தன்.

கே.இன்பராசாவின் யூரியூப் காணொளிகளை நானும் முன்பு பார்த்துள்ளேன். சுவிஸ் துவாரகா விடயத்தில் தேசிய தூண்களே இங்கு சரிந்ததை நாம் பார்த்தோம். இந்தியாவுக்கு எல்லாரும்தான் அடிக்கடி போய் வருகின்றார்கள்.

பல தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியலே முழுமையான ஜனநாயகமானது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் சுயேட்சை குழுவாக தேர்தலில் போட்டியிடுவது தவறாக தெரியவில்லை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.