Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியான பின்னர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தொடர்பில் பலரும் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி, ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தவில்லை என தெரிவந்துள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தான் இதுவரையில் தங்கியிருந்த வீட்டிலேயே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து தனது தனிப்பட்ட தேவைக்கு ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தப்போவதில்லை எனவும் ஜனாதிபதி செயலக விடயங்கள் மற்றும் பணி விடயங்களுக்கு மட்டுமே அதனை பயன்படுத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பிரதமரும் அலரி மாளிகையை பயன்படுத்தாமல் தனது வீட்டிலேயே தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அரச சொத்துக்களை வீண் விரயம் செய்வதை தவிர்த்து பணத்தை சேமிக்கவுள்ளதாக தேர்தல் பிரச்சாரங்களின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/310566

  • கருத்துக்கள உறவுகள்

  அனுராவின் பொது தேர்தல் வெற்றியின் பின் வரும் அறிவிப்புக்கள் ...
1) ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் மக்கள் தங்க வேண்டிய அவசியமில்லை ...காலிமுகதிடலில் அல்லது மாநகர சபை பூங்காவில் டென்ட் அல்லது கரவன் அமைத்து கொடுக்கப்படும் அங்கு தூங்கி எழுந்து கடற்கரையில் அல்லது குளத்து கரையில் குளிதக்க வேண்டும் ....மின்சாரம்,நீர் போன்றவற்றை சேமிக்க முடியும்...(வைச்சான்டா ஆப்பு டயஸ்போரா சிங்களவர்களுக்கும் டமிழ்ஸுக்கும்)

2)தூர தேச பயணங்களுக்கு புகையிரத வண்டியையும் ,அரச பேருந்துகளையும் பாவிக்க வேண்டும் ...புகையிரத வண்டியில் எந்த வித பாகுபாடும் இருக்காது... அதாவது சகல பெட்டிகளும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளே (வகுப்புவாதம் இருக்காது)...சொகுசு பஸ் சேவைகள் உடனடியாக நிறுத்தப்படும் ..சலரும் அரச பேருந்தில் பயணிக்க வேண்டும்..அரச பேருந்தின் டிசல்,பெற்றோல் வாசனையை சகல் மக்களும் அனுபவிக்க வேணும் ஏற்ற தாழ்வு அற்ற ஒர் சமுதாயத்தை உருவாக்க இது தான் சிறந்த வழி...அந்த மண‌ம் 
பிடிக்கவில்லை என்றால் மூக்கு கவசம் அணியலாம் ..ஆனால் அது சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

3)சொந்த கார் வைத்திருப்பவர்கள் தனியாக செல்ல கூடாது ..பக்கத்து வீட்டுக்காரன் முன் வீட்டுக்காரன் ,பின் வீடுக்காரன் எல்லொரையும் அழைத்து செல்ல வேண்டும் கிழமையில் நாலு நாட்களாவது இந்த செவையை செய்ய வேண்டும்...

4)ஒட்டோக்கள் இறக்குமதி இரண்டு வருடங்களின் பின் தடை செய்யப்படும் ..காரணம் இந்தியாவுக்கு அன்னியசெலவானி அதிகமாக செல்லுகின்றது ....மசாலா தோசைக்கும்,பருப்புக்கு,பம்பாய் வெங்காய்த்துக்கு எல்லாம் தடை போட வேண்டும் என போராடிய எமது கட்சியினரின் கொள்கைக்கு ஆதரவு
அளிக்கும் வகையில்  ஓட்டோக்களை தடை செய்கின்றோம்

5)வடக்கு அல்லது கிழக்கு மாகாணத்துக்கு கொழும்பிலிருந்து செல்லும் பொழுது, முக்கியமாக புலம்பெயர்ந்த தமிழ் டயஸ்பராக்கள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தங்களது ஊருக்கு செல்லுகின்றனர் அதாவது யாழ்ப்பாணம் அல்லது மட்டக்கள்ப்பு ....இது சிறிலங்கன் என்ற தேசிய உணர்வை புண்படுத்தும் ஒர் செயல் ...காலிமுக திடலுக்கு வாருங்கள் வரும் வழியில்  களனி கங்கையில் நீராடுங்கள் ...காலிமுகதிடலில் தேசிய உணவான பொல் சம்பலும்,பருப்பும் பாணும் சுடச்சுட வழங்குவோம் சாப்பிடுங்கள்...இளைப்பாருங்கள் அடுத்தநாள் செல்லுங்கள் ...இரவு நேரங்களில் தேசிய உணர்வுடன் பைலா பாடல்கள் ஒலிபரப்புவோம்  ரசியுங்கள் ....(தயவு செய்து பனம் சாராயம் வேணும் என  சண்டை   பிடிக்காதீர்கள் முக்கியமாக பொல்லு தடிகளுடன் சண்டை பிடிக்க வேண்டாம்...நீங்கள் சண்டை பிடிப்பதற்கு முக்கிய காரணம் எகோபத்தியவாதிகள் உங்களுக்கு அறிமுகம் செய்த வர்க்க/வகுப்பாத ரெட் லெபில்( ஐ லவ் ரெட் லெபில் தோழர்களே)புளு லெபில்,கொல்ட் லெபில்,கிறீன் லெபில் போன்றவையே...

 
 6) டமிழ்டயஸ்பராக்களே நீங்கள்  என்ன பெரிய அப்பாடக்கரா?   இருவர் அல்லது மூவர் செல்வதற்காக தனிப்பட்ட  ரீதியில் வான் புக் பண்ணி செல்வதற்கு ...

ஒரு வானில் குறைந்தது எழு பேர் செல்லலாம் ...யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு செல்லும் வாகனங்கள் சிறிலங்கன் என்ற தேசிய உணர்வை வெளிப்படுத்தும்  வகையில் 7 இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தால் மட்டுமே யாழ் நகர் செல்ல அனுமதி வழங்கப்ப்டும் ...முக்கிய் குறிப்பு அந்த வாகனத்தில் சிங்களவர்கள் ,முஸ்லீம்கள் அதிக மாக இருப்பின் அவர்களுக்கு வரி விலக்கு 100% உண்டு

ஊழலிசம் ஒழிக ...லஞ்சலிசம் ஒழிக ...தெமிழிசம் ஒழிக  அப்பே சிறிலன்கன் ஜெய வேவா

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.