Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் …

PP.jpg

https://thinakkural.lk/article/310756

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணயம் இதற்கு அனுமதி வழங்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் ஆணயம் இதற்கு அனுமதி வழங்குமா?

ஓம் அண்ணை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வந்த அமைச்சரவைத் தீர்மானம் இது. ஆட்சி மாற்றத்தோட செப்ரம்பர் தருவதாகக் கூறிய 3000 ரூபா வராது போல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று முதல் இடைக்கால கொடுப்பனவு!

image

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று புதன்கிழமை (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.  

ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாய் வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து வழங்குமாறு அண்மையில் பணிப்புரை விடுத்தார்.  

அந்த அறிவுறுத்தலின்படி, திறைசேரியிலிருந்து தேவையான பணம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அதனை இன்று முதல் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வைப்பிலிட ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக ரூ.3000 வழங்க 24/08/2024 திகதியிட்ட 02/2024ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை.

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்துக்கான 2,021 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை  திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது.  

அதன்படி, இந்தக் கொடுப்பனவை இன்று (16) முதல் வழங்க ஓய்வூதியத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. 

அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கொடுப்பனவை இம்மாதம் 18ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

https://www.virakesari.lk/article/196463

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று புதன்கிழமை (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.  

நல்ல செய்தி.

இதன் புகழ் ரணிலுக்கா?அனுராவுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

நல்ல செய்தி.

இதன் புகழ் ரணிலுக்கா?அனுராவுக்கா?

குடுக்கிற ஆளுக்கு தான் எப்பவும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

குடுக்கிற ஆளுக்கு தான் எப்பவும் 

அப்ப அனராவுக்கு சொறி ஐயருக்கு இல்லையா?

தெய்வத்துக்கு தானா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.