Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்காசிய தலைமையை இந்தியா ஏற்கவேண்டும் - மஹிந்த

Featured Replies

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என் மஹிந்த கூறியுள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் டில்லியில் நடைபெற்ற தலைமத்துவ உச்சி மாநாட்டில கலந்து கொண்ட மஹிந்த "பிராந்திய அமைப்பில் இந்தியா ஓர் அயலவரின் பார்வை" என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்

அவர் அங்கு ஆற்றிய உரையின் முக்கிய விடயங்கள் :-

இந்தியா தன்னை ஒரு பொருளாதார வலுநிலையைமாக கட்டியெழுப்பி அயல் நாடுகள் சமாதானத்தையும் முன்னேற்றத்தயும் நோக்கிச் செல்வற்கு உதவ வேண்டும். இந்தியா இலங்கை இரு நாடுகளும் வறுமையை சரித்திரமாக்ககூடிய மற்றும் மில்லியன் கணக்கான தனது பிரஜைகளின் வாழ்க்கையை முன்னேற்றக்கூடிய தன்னம்பிக்ககையுடன் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

சார்க் பிராந்தியத்தில் இந்தியா தலைமைப் பாத்திரத்தை வகிக்க வேண்டுமென வலியுறுத்திய மஹிந்த இப்பிராந்தியத்தில் பொதுவான நாணயம் பயன்படுத்தப்பட வேண்டும்மென்றும் கூறினார்.

எமது பிராந்திய பொருளாதராத்தை ஸ்தீரப்பபடுத்துவதற்காக தாம் இதை வலியுறுத்துவதாகவும் ,எமது அரசாங்கம் பயங்கரவாதத்கிற்கு எதிராக போராடுவதற்கு உறுதி பூண்டுள்ள அதே வேளை இலங்கையிலுள்ள பிரச்சினைக்கு பேக்சுவார்த்தை மூலமாக நிரந்தர தீர்வுகாண்பதற்கும் முயற்சிக்கின்றது. அரசுக்கு எதிராக ஆயுதமேந்தியவர்கள் அமைதியன ஜனநாயகபூர்வமான தீர்வுகாண்பதற்காக உண்மையான பேச்சுவார்த்தை நடைமுறையில் ஆர்வம் காடடினால் அரசாங்கமும் மக்களும் அதற்கிணங்க செயற்படுவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கராவதம் உட்பட இலங்கையின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு இந்தியாவிடமிருந்து

இலங்கைக்கு மேலும் உதவிகள் தேவைப்படுகின்றனவா? என வினவப்பட்ட. போது எமக்கு இந்தியாவின் தார்மீக ஆதரவு உண்டு. அது தேவைக்கு அதிகமாகவே உண்டு என பதிலளித்தார்.

இந்திவில் இடம் பெறும் கிளர்ச்சிகளுடன் இலங்கை பயங்கரவாத சக்திகளுக்குமான தொடர்பு குறித்து வினவப்பட்ட போது எம்மிடம் அத்தகைய தகவல்கள் இல்லை. அவ்வாறான தகவல்கள் கிடைக்கும் போது நாம் அது குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவோம் என மஹிந்த பதிலளித்தார்.

நன்றி : வீரகேசரி

ம்...... இந்தியாவின் உச்சி குளிர்ந்திருக்கும். மஹிந்தா கவனம் பாக்கிஸ்தான் பின்னால் இருந்து கவனித்துக் ெகாண்டிருக்கின்றது.

நல்ல கோரிக்கை. தெற்காசியாவில் தமிழீழமும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் டெல்லியில் ராஜபக்சே அறிவிப்பு

புதுடெல்லி, அக்.14-: விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று டெல்லியில் இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.

டெல்லியில் ‘இந்துஸ்தாஸ் டைம்ஸ்’ சார்பில் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அம்மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியதாவது:-

இலங்கை இனப்பிரச்சினையை விடுதலைப்புலிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர். இலங்கையின் கிழக்கு பகுதியை விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து இலங்கை ராணுவம் விடுவித்துள்ளது. இந்த முக்கியமான சாதனையால், இலங்கை பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வு காண வழி கிடைக்கும்.

விடுதலைப்புலிகளுக்கு வெளிநாடுகளில் நிதிஉதவி கிடைப்பதையும், அவர்கள் சட்ட விரோதமாக ஆயுதம் பெறுவதையும் தடுக்க வழி கிடைக்கும். அவர்கள் வன்முறையை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்று உணர வைக்கும்.

தீவிரவாதத்தை எதிர்த்து போராட எனது அரசு உறுதி பூண்டுள்ளது. அதே சமயத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காணவும் உறுதி பூண்டுள்ளோம்.

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ள விடுதலைப்புலிகள், உண்மையிலேயே பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், அவர்களுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம். அதற்கு அண்டை நாடுகள் உதவ வேண்டும்.

இவ்வாறு ராஜபக்சே பேசினார்.

பின்னர் ராஜபக்சே, பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை மற்றும் இனப்பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றி ராஜபக்சே எடுத்துரைத்தார்.

அவற்றை கேட்ட மன்மோகன்சிங், இலங்கை இனப்பிரச்சினை குறித்து ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோரையும் ராஜபக்சே சந்தித்து பேசினார்.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.