Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..!

அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிய ஜக்கி..!
--------
தோலுரிக்கும் நக்கீரன்..! 
-----------
ஜக்கி வாசுதேவ் 
தனது மனைவியை  
1997 இல் கொலை செய்துவிட்டு 
'அவள் ஜீவா சமாதி அடைந்துவிட்டாள்'
என்று புளுகியதை 
அம்பலப்படுத்தியது முதல்,  
இன்றுவரையிலான  
ஜக்கியின் அட்டூழியங்களை 
அம்பலப்படுத்திவரும் 
நக்கீரன் கோபால் அண்ணன், 
நேற்று வெளியிட்ட 
முக்கியமான வீடியோவை 
எல்லோரும் பாருங்கள், 
பரப்புங்கள்..!

தமிழ்நாட்டின் பொது சமூகம் 
விழிப்புணர்வு பெற்று,
ஒன்றுதிரண்டு தட்டிக்கேட்க 
முன்வராவிட்டால்,
ஜக்கிகள், நித்திகள், மகாவிஷ்ணுக்கள் 
முளைத்துக்கொண்டே இருப்பார்கள்.  

அயோக்கியன் ஜக்கி 
அமெரிக்காவுக்குத் தப்பி ஓடிவிட்டான் 
என்ற தகவலையும் 
அந்த வீடியோவில் 
அண்ணன் சொல்லி இருக்கிறார். 
உலகின் எந்த மூலையில் 
அவன் ஒளிந்துகொண்டாலும் 
தூக்கிவந்து 
தண்டனை கொடுக்க வேண்டும்.  

டிவிட்டர்லிருந்து.....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒரு தகவல் (104). 🌺🌿..

மீண்டும் ஈஷாவுக்கு நேர்மையான தீர்ப்பை வழங்கி இயங்க விட்ட உச்சநீதிமன்றம்.🙏

ஆம் இந்தத் தீர்ப்புக்காகத்தான் சில தகவல்களை தரக் காத்திருந்தேன்.😊

என்னைப் பொறுத்தவரை மிகக் கேவலமான விடயம் என்னவென்றால்......
பொய் வதந்திகளுக்கு விடை கூறிக் கொண்டிருப்பதுதான். ஆனாலும் பல நல்ல விடயங்களை தெரிவிக்க ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம் என்ற மகிழ்ச்சி.🥰

அடிக்கடி ஒரே பிரச்சனையை மீண்டும் மீண்டும் எழுப்பி ஈஷாவின் சந்நியாசிகள் இருவரை நீதிமன்றுக்கு இழுத்து, பொலிசார் மூலம் அடாவடித்தனமான நடவடிக்கை எடுத்த சென்னை உயர் நீதிமன்றை கண்டித்து, தடை விதித்து இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி ( நேர்மைக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது) 
மாண்புமிகு சந்திர சூட் ( Chandrachud) அவர்கள் 18/10/2024 அன்று வழக்கை முடித்து வைத்து சிறப்பான தீர்ப்பை ஈஷாவுக்கு வழங்கினர்.👏

எனது நெருங்கிய நண்பர் கோயமுத்தூரில் இருந்து ஒரு தகவலைத் தந்தார்..... ஏன் ஈஷாவை தொடர்ந்து உபத்திரவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு. அவர் ஒரு உயரிய அரச நிர்வாகத்தில் இருப்பவர். நேரே வாருங்கள் அருந்தா உண்மைகளை நானே கூட்டிச் சென்று காட்டுகிறேன் என்றார்.....! 
அவர் தந்த தகவல் உங்களுக்காக👇

ஒற்றை மனிதன் (சற்குரு)ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் கதற விட்டுட்டு இருக்காரு'னா அதுக்கு இதுதான் காரணம்.
😁☝️

🍁ஈஷா யோக மையம் சுற்றி மிஷனரியின் மதமாற்ற பருப்பு வேகவில்லை. (முன்னர் அந்த ஏரியாவே மதமாற்றம் செய்யப் பட்டது. சற்குரு வந்த பின் முற்றாக நின்று விட்டது.)

🍁சத்குருவின் உதவியினால் ஈஷா யோக மையம் சுற்றி உள்ள கிராமங்களுக்கு மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு,தொழில் வாய்ப்பு, விவசாய வாய்ப்பு, இலவச கல்வி,இலவச மருத்துவம் கிடைப்பதனால் மிஷனரியின் பண பலம் தூள் தூளாகி விட்டது.

🍁ஈஷா யோக மையம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காலை ஆறு மணிக்கு வேலைக்கு வருகிறார்கள்,மாலை எட்டு மணிக்கு வேலையை முடித்து செல்கிறார்கள். போதைக்கு அடிமையாகாமல் தொழிலில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

🍁அந்த இளைஞர்கள் அனைவருக்கும் நல்வழிப்பாதை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு குடும்ப உறவுகளை பேணிப்பாதுகாக்க வகுப்புகள் நடத்தப்படுகிறது.

🍁அவர்களுக்கு இலவச மருத்துவம், கல்வி,யோகா என அனைத்தும் கிடைப்பதால் பல கிராமங்களில் வியாபாரம் இல்லாமல் டாஸ்க்மார்க் கடைகள் மூடப்பட்டு விட்டது. (அரசியல் வியாதிகளுக்கு எரியுமா எரியாதா)

🍁கிராமங்களில் காளை மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் அவற்றை கசாப்பு கடைக்கு விற்காமல் அவற்றை தியானலிங்கம் டு ஆதியோகி மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதனால் சிறு வருமானம் பெறுகிறார்கள்.

🍁 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 2 மணி நேர ஒய்வை அளித்து அந்த காளை மாட்டுக்கு சிரமம் இல்லாத வகையில் என்ஃபீல்ட் நிறுவனத்துடன் பேசி சுலபமாக இயங்கும் வண்டிகளை வடிவமைத்துள்ளது ஈஷா யோக மையம்

🍁அந்த காளைகளுக்கான உணவு,உறைவிடம்,மருத்துவம் எல்லாமே இலவசம்.

🍁அங்குள்ள மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மின் மயானங்கள் அமைத்து உதவி புரிகின்றனர். இதவிட தமிழ் நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட சுடுகாடுகளை கோயில்கள் போல் பராமரித்து வருகிறனர்.

🍁இயற்கை விவசாயம் ,பயிர்ச்செய்கைக்கு மக்களை ஊக்குவித்து பயிற்சி வகுப்புகள் அளிக்கிறார்கள்.

🍁மரம் வளர்ப்பு திட்டங்களை,ஊக்குவித்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.

🍁மண் வளம் காக்கும் திட்டத்தை ( Save soil ) நாடளாவிய ரீதியில் அல்ல உலகலாவிய ரீதியில் கொண்டு சென்று பல உலகத் தலைவர்களினாதரவைப் பெற்று ,அந்த நடைமுறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இன்னும் நிறைய எழுதலாம்... இப்போதைக்கு இது போதும்.....😁

இப்போ உங்களுக்கு புரியுதா?? அந்த எகனாமிக் காரிடாரை உடைக்க முடியாததால் இப்படி பொட்டைதனமாக திருட்டு வழக்கு போட்டு பார்க்கிறது கேவலமான அரசியல்.👍

சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

நன்றி - Saravanaprasad Balasubramanian ஜி🍁

மேலும் சில தெளிவூட்டல்கள்.....👇

சந்நியாசம் என்பது இந்து , கிறீஸ்தவம், பெளத்தத்தில் பின்பற்றப்படுவது இயல்பே, யாவரும் அறிந்ததே......!❤️

ஆனால் ஈஷாவில்.....👇

வயது வராதவர்கள் சந்நியாசத்தில் சேர்க்கப்படுவதில்லை.
வயது வந்தவர்கள் சந்நியாசத்தை விரும்புகிறார் என்பதற்காகவும் சேர்க்கப் படுவதில்லை.👎

4,5 வருட training இன் பின் அவர்களால் அந்த நிலைக்கு முடியும் என்ற பின்பே  வீட்டாரின் அனுமதியுடன் , சந்நியாசத்துக்கு அனுமதி வழங்குகிறார்கள். 
சந்நியாசத்துக்கு தகுதியில்லாத வர்களுக்கு வீட்டாரிடம் அனுப்பி திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்கள்.👏

ஈஷாவில் உள்ள சந்நியாசிகள் அநேகர் உயர் கல்வியாளர்கள்.👍

அங்கு நூற்றுக் கணக்கான திருமணங்களை சற்குருவே நடாத்தி வைத்துள்ளார்.🙏

இந்த நடைமுறைகள் ஈஷாவுடன் தொடர்புடைய சகலருக்கும் தெரியும்.. 😊

ஆனாலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து, பொய்யான அவப்பெயரை ஏற்படுத்தி எப்படியாவது கிளப்பி விடுவோம் என நொந்து போன எதிராளிகள் ஒரு போதும் வெற்றி அடையப் போவது இல்லை.👎

ஏனென்றால் ஈஷாவின் எந்தவொரு செயல்பாடுகளும் எப்பொழுதும் சட்டத்திற்கு உட்பட்டதாகும் என்பதில் சற்குரு மிக அவதானமாக உள்ளார். திரித்து பேசும் மீடியாக்களை என்ன வென்று சொல்வது.....!😊☝️

நல்ல நேர்மையான தகவல்களைத் தரும் என் இந்திய உறவுகளுக்கு நன்றி 🙏

காய்கும் மரத்துக்கு கல்லெறி என்பார்கள். ஆனால் இங்கு நாகைச்சுவை என்னவென்றால் காய்க்கவே விடாமல் கல்லெறியலாம் என நினைக்கிறார்கள்😁
சற்குருவுக்கு இது புதிதல்ல..... ❤️

தொடர்ந்தும் வந்திகளுக்குப் பதில் அளிக்கப் போவதில்லை, நல்ல விடயங்கள் நல்ல சிந்தனைகளுடன் தொடர்ந்து பயணிப்போம் உறவுகளே.... !🙏

வழக்கின் உண்மை தன்மை அறிய...

https://www.youtube.com/watch?v=H9I5w06Q7sk

...

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜீவசமாதி ஆகும் ஜக்கி வாசுதேவ்! ஜக்கி மனுஷனே கிடையாது! உமாபதி கலகல பேச்சு! 🙂

 

தேறுமா தேறாதா என பாப்பாங்க . தேறல என்ன அங்கேயே எரிச்சிடுவாங்க😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.