Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  தொடர்பில் 18 முன்னாள் அமைச்சர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார். 

கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால மற்றும் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்கு மூலங்களைப் பெறுவது அவசியம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர்  ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம, இந்த விடயம்  தொடர்பில் மாளிகாகந்த நீதிமன்றில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியதையடுத்து, அதற்கு அனுமதியளித்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198476

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கடா தம்பிமாரே..இரண்டுநாள் கிடக்கு...நீங்களே அப்படியும் இப்படியும் தள்ளாடும்போது...நீங்களும் தேர்தல் சோ காட்டுறியள் போல கிடக்கு..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க சி.ஐ.டி யில் ஆஜர்

image

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன  மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளனர்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/199309

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருந்து மோசடி குறித்த விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் - முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண

image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயார் என முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.

மருந்து மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக வியாழக்கிழமை (21) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்த போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மருந்து கொள்வனவு மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நான் தயாராக இருக்கின்றேன். அமைச்சரவை தீர்மானங்கள் வெவ்வேறு அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய நிதி அமைச்சின் அங்கீகாரத்துடனேயே எடுக்கப்படுகின்றன.

எனவே இவை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எமது தரப்பில் பிரச்சினைகள் இல்லை. எவ்வாறிருப்பினும் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவற்றுக்கு ஒத்துழைப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

உற்பத்தியின் போது மருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அவை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே நான் இங்கு முன்னிலையாகியிருக்கின்றேன். புதிய சுகாதார அமைச்சர் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகின்றேன் என்றார். 

https://www.virakesari.lk/article/199325

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க ஆகியோர் சி.ஐ.டி யில் ஆஜராகி வாக்குமூலமளித்தனர்

image
 

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வியாழக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளனர்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க,

இன்று எம்மை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் வந்து தேவையான தகவல்களை அவர்களுக்கு வழங்கினோம். அத்துடன் சுகாதார அமைச்சுப் போலவே விளையாட்டுத்துறை அமைச்சிலும் பாரிய ஊழல் மோசடிகள் நடந்துள்ளது. இது சம்பந்தமாக நான் ஏற்கனவே குற்றப்புலனாய்வு திணை களத்திற்கு முறைப்பாடு வைத்திருந்தேன்.

இப்பொழுது புதிய அரசாங்கம் வந்துள்ளது அதை வரவேற்கின்றோம். ஆனாலும் பழையவர்களும் இருக்கின்றார்கள்.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்குவதற்கு என்னிடமும் ஊழல்வாதிகளின் அறிக்கை ஒன்று உள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/199370

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.