Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்  மக்கள் வாக்களிப்பு குறித்து
புலம் பெயர் நாடுகளிலும் தாயகத்திலும்  உள்ள ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் 
 தொடர்சியாக ஆய்வுகள் விவாதங்கள் நடத்தப்படுகின்றன.  சுமந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமா? தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் யாருக்கு?  என்பிபிக்கு  ஏன் தமிழ் மக்கள் வாக்களித்தனர்? தமிழ் தேசியம்
 தோற்றுவிட்டது என்றும்,  இல்லை தோற்கவில்லை  என்றும் பலர் விலாவாரியான புள்ளிவிபரங்களுடன் விவாதங்களும் தொடர்கின்றன. 
 
 ஆனால்,  வன்னி மண்ணில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பெண் போராளி பற்றி எவரும்  கணக்கெடுக்கவேயில்லை.  தூக்கி வீசிய கருவேப்பிலையாக,   கண்ணி வெடியில் காலை இழந்த பெண் போராளி கருணாநிதி யசோதினி உள்ளார்.   இத்தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய முண்ணனி சார்பில் போட்டியிட்டார்.  யுத்ததத்தில் அங்கவீனரான போராளிகளுக்கு உதவும் செயற்பாடுகளில் நீண்ட காலமாக பணிபுரிந்துவரும் இவர் இந்த பணிகளை முன்னெடுப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாக பிபிசி செவ்வியில் தெரிவித்தார்.  மிகுந்த  கஷ்ரத்தின் மத்தியிலும்,  மிகவும் துடிப்புடனும் வேகத்துடனும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  இருப்பினும் இவரது கட்சியை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதனை தெரிவு செய்த மக்கள் இவரை தெரிவு செய்யவில்லை.  இவரை மக்கள் ஏன் புறக்கணித்தனர் என்பது குறித்து தமிழ் ஊடகங்களுக்கு கவலையில்லை.  தினசரி பேட்டி என்ற பெயரில்  அரசியல்வாதிகளுக்குள் சண்டையை மூட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும்  ஐபிசி, லங்காஶ்ரீ போன்ற  தமிழ் ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ, யூருபர்களோ இது குறித்து   எந்த விவதங்களையும் நடத்தவில்லை. 
 
அர்சனாவுக்கு பாட்டெழுதிய வன்னி மைந்தன் போன்றோர் வன்னி மண்ணில் போராட்டத்திற்கென தம்மை அர்பணித்த இவர் போன்ற  போராளிகள் குறித்து பாராமுகமாக இருப்பது ஏன்?  வீரம் விளைந்த வன்னி மண் என்று நரம்பு முறுக்கேற சிலாகிப்போர் எவருமே இது குறித்து திரும்பிக் கூடப் பார்கவில்லை. 
இவர் தோற்கடிக்கப்பட்டது ஏன்? 
இவை குறித்து யாழ்கள உறவுகளின் கருத்து என்ன? 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஊதுகுழலாக பிபிசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வேலை செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, island said:

அரசியல்வாதிகளுக்குள் சண்டையை மூட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும்  ஐபிசி, லங்காஶ்ரீ போன்ற  தமிழ் ஊடகங்களோ சமூக வலைத்தளங்களோ, யூருபர்களோ இது குறித்து   எந்த விவதங்களையும் நடத்தவில்லை. 

சந்துரு பேட்டி கண்டதை நான் கேட்டிருந்தேன். கால் கை இழந்த போராளிகளை கண்டும் காணாமல் போகும் எமது மக்கள்( பயம் ஒரு காரணம்) வாக்களிபார்கள் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் கஸ்டப்பட்டு முன்னுக்கு வந்த பெண் எனைய பெண்களுக்கும் உதவி வந்தார்.
அவரின் மொத்த வாக்குகள் எவ்வளவு என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, island said:
வீரம் விளைந்த வன்னி மண் என்று நரம்பு முறுக்கேற சிலாகிப்போர் எவருமே இது குறித்து திரும்பிக் கூடப் பார்கவில்லை. 
இவர் தோற்கடிக்கப்பட்டது ஏன்? 

அரசியல் என்பது ஒரு சூது , சுத்துமாத்து, அதற்கு நேர்மையாக வளர்க்கப்பட்ட போராளிகள் ஒருபோதும் சரிப்பட்டு வரமாட்டார்கள்.

அரசியல் ஒரு புரியாத புதிர், தமிழர் பகுதியில் 80%க்கு மேல்  புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும் தேர்தல் என்று வரும்போது புலிகளால் நிராகரிக்கப்பட்ட , புளொட்டையும், ஈபிஆர் எல் எவ்வையும், ஈபிடிபியையும், ரெலோவையும் சேர்ந்தவர்களையே அதே புலிகளின் ஆதரவாளர்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள்,

அதற்கு காரணம்  குள்ளநரித்தனம், அரசியல் வியூகம் எனும் பேரில் சூழ்ச்சி, வலுவான கட்சி கட்டமைப்பு எல்லாம் அவசியம்.

ஏற்கனவே முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் தலைமையில் ஒரு பிரிவு தேர்தலை முயற்சித்தது நினைவிலுண்டு , ஜனநாயக போராளிகள் என்றொரு அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டதாய் ஞாபகம் அவர்கள் யாருமே தேர்தலில் சோபிக்கவில்லை இப்போ என்ன ஆனார்கள் என்றும்  தெரியவில்லை.

தேர்தலில் போட்டியிட்டு தோத்தவர்கள் மட்டுமே தேசியபட்டியல் உறுப்பினரில் உள்வாங்கப்படலாம் என்ற நிலமையில் தமிழரசுகட்சி நினைத்தால் இனத்தின் இருப்பு கருதி இவர்போன்றவர்களை தமது கட்சிக்குள் உள்வாங்கி எம்பி ஆக்கலாம்,  அது வாய்ப்பில்லையென்றால் கடந்த தேர்தலில் இவர்போன்ற போராளீகளை கட்சிக்குள் உள்வாங்கியிருக்கலாம்.

வன்னி மைந்தன்மேல் ஏன் பாய்கிறீர்கள், அவ்வளவு பெரிய ஆளூமையா அவர்? அல்லது  எமது போராட்ட தலைமை ஆயுதங்களை மெளனித்தபோது  இனிமே எல்லாமே வன்னி மைந்தன் பொறுப்பு என்றா சொல்லிவிட்டு போனது? அவர் சும்மா அடுத்த புதுவை ரத்தினதுரை நான்தான் என்ற நினைப்பில ஊருக்க சுத்திக்கிட்டிருக்கார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.