Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'அமெரிக்கா, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கும்' - இந்திய ஹைபர்சோனிக் ஏவுகணையின் சிறப்பு என்ன?

இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,EPA

  • எழுதியவர், அபினவ் கோயல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதை மிகப்பெரிய சாதனை மற்றும் வரலாற்று சிறப்புமிக்கது என கூறியுள்ளார்.

நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டது.

இந்த ஏவுகணை மூலம் காற்று, நீர் மற்றும் நிலம் என எப்பகுதியில் இருந்தும் எதிரியை தாக்கலாம்.

 

இந்தியாவின் `பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (டிஆர்டிஓ) நீண்ட காலமாக இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையைத் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.

2020 ஆம் ஆண்டில், டிஆர்டிஓ ஒரு `ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டட் வாகனத்தை’ (HSTDV) வெற்றிகரமாக சோதித்தது .

தற்போது இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, இந்தியா இத்தகைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன?

இந்த ஏவுகணை காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் தாக்கும் திறன் கொண்டது

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணம் செய்து இலக்கைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.

அதேசமயம், சப்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட வேகமாக கடக்க முடியாது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை மட்டுமே வேகமாகப் பயணிக்க முடியும்.

பிபிசியிடம் பேசிய பாதுகாப்பு நிபுணரான, ஓய்வு பெற்ற ஏர் கமாண்டர் அஷ்மிந்தர் சிங் பாஹ்ல் கூறுகையில், ``ஹைப்பர்சோனிக் ஏவுகணை முதலில் வானத்தில் சுமார் 100 கிலோமீட்டர் வரை செல்கிறது, அதாவது அது முதலில் பூமியின் வளிமண்டலத்தை கடக்கிறது. பின்னர், விண்வெளியில் இருந்து மீண்டும் புவியின் வளிமண்டலத்தை அடைந்து தன் இலக்கை நோக்கி அது பயணம் செய்கிறது" என்று விவரித்தார்.

இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹைப்பர்சோனிக் ஏவுகணை அணு ஆயுதத்தை (nuclear warhead) சுமந்தும் செல்லும் திறனுடையதா என்பதே தற்போதைய கேள்வி!

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி, ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை நிறுவ முடியும் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்," 1700 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தக் கூடிய திறனுடையது. இது நிச்சயமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஏவுகணையாகக் கருதப்படுகிறது." என்றார்.

"ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இந்தியாவிற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும்” என்றும் அவர் கூறினார்.

அவர் கூறுகையில், "ஒரு காரை உருவாக்குவது போல, முதலில் ஒரு முன்மாதிரி உருவாக்கப்படும், அதன் பின்னர் அது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு, அது உற்பத்திக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே இந்தியாவில் இந்த ஏவுகணை செயல்பாட்டுக்கு வர கால அவகாசம் எடுக்கும்." என்று விளக்கினார்.

 
இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,@RAJNATHSINGH

ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சிறப்பம்சம் என்ன?

ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிக வேகமாக செல்லும் என்பதால், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால் இதனை கண்டறிந்து தடுப்பது கடினம்.

இந்த ஏவுகணை ஒலியை விட வேகமாக பயணம் செய்வதால் மட்டும் இந்த சிறப்பம்சத்தை பெறவில்லை.

பிபிசி உடனான கலந்துரையாடலில் பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி, இது மிக நவீன ஏவுகணைத் தொழில்நுட்பம் என்றார்.

அவர் கூறுகையில், "இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிகவும் வேகமாக அதன் இலக்கை நோக்கி பறந்து செல்லக் கூடியது, இதனை ஏவுகணை எதிர்ப்பு அமைப்பால், கண்டறிய முடியாது." என்றார்.

அதே நேரம் பாதுகாப்பு வல்லுநர் பாஹல், “ஹைப்பர்சோனிக் ஏவுகணைப் பாலிஸ்டிக் ஏவுகணைப் போல் இல்லாமல், அவை பயணம் செய்யும் பாதை அல்லது எங்கிருந்து வந்தது என்பதை வெளிப்படுத்தாது. இதனால் இதன் இலக்கைக் கணிப்பது மிகக் கடினம்” என்கிறார்.

அமெரிக்கா உருவாக்கிய உயர் பாதுகாப்பு முனையங்கள் (The'Terminal High Altitude Area Defense' -THAAD) மற்றும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான ‘அயர்ன் டோம்’ ஆகியவற்றால் கூட இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்கிறார்.

"ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அவர்கள் கண்டறிந்தாலும், அதனை சுட்டு வீழ்த்துவது கடினம். ஏனெனில் இதற்கு இணையான வேகத்தில் பயணம் செய்யும் வகையிலான மற்றொரு ஏவுகணை தேவை. இதற்கு ஒரு நாடு, ஏரோ வெப்பன் சிஸ்டம் Arrow Weapon System (AWS) வைத்திருக்க வேண்டும். இதன் வரம்பு 2,500 கிலோ மீட்டர்" என பாஹல் தெரிவித்தார்.

 

எந்தெந்த நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளது?

சில குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்துள்ளன. வல்லுநர்கள் இதைப்பற்றி மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தற்போது சீனா மற்றும் ரஷ்யா வைத்துள்ளன. அதேசமயம் அமெரிக்காவும் இந்தியாவைப் போல நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு வல்லுநர் பாஹல் தெரிவித்தார்.

மேலும், “ சில நாடுகள் தாங்கள் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வைத்துள்ளதாக கூறுகின்றன. ஆனால் அதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. அத்தகைய சூழலில், இந்த நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது நாடாக இருக்கும்” என்றார் .

பாதுகாப்பு வல்லுநர் ராகுல் பேடி கூறுகையில், "ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவைத் தவிர்த்து அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை இருப்பதாக நம்பப்படுகிறது. இதைத் தவிர்த்து இரான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது” என்றார்.

இந்தியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

"யுக்ரேன் உடனான போரில் ரஷ்யா கிஞ்சால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியது. ஏனெனில் அவற்றைப் தடுப்பது மிகக் கடினம்," என ராகுல் பேடி கூறினார்.

2022 மார்ச்சில், யுக்ரேனின் மேற்கு பகுதியில் உள்ள ஆயுத கிடங்கை ஹைப்பர்சோனிக் ஏவுகணை கொண்டு தாக்கியதாக ரஷ்யா கூறியது.

சில வல்லுநர்கள் இஸ்ரேல் மீது இரான் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக கருதுகின்றனர்.

பாலிஸ்டிக் மற்றும் குரூயிஸ் ஆகிய இரு ரகங்களிலும் ஃபதா ஹைபர்சோனிக் ஏவுகணையை அறிமுகப்படுத்திய முதல் நாடு தாங்கள்தான் என்றும் இரான் கூறுகிறது.

அல்-பதாஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,400 கிலோ மீட்டர் வரை தாக்கக் கூடியது என்றும், எதிர்ப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி இலக்கை தாக்கக் கூடியது என்றும் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறுகிறது.

2021-ஆம் ஆண்டு, வடகொரியா அதன் உச்ச தலைவர் கிம் ஜாங்-உன் முன்னிலையில் ஏவுகணைச் சோதனை மேற்கொண்டது.

தாங்கள் தயாரித்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை "துல்லியமாக" தாக்கியதாக வடக்கொரியா கூறியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.