Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக கொட்டும் மழைக்கும் மத்தியில் நினைவேந்தப்பட்டது!

27 NOV, 2024 | 08:59 PM
image

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. 

நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

முல்லைத்தீவு

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில்...

IMG-20241127-WA0346.jpg

IMG-20241127-WA0348.jpg

IMG-20241127-WA0376.jpg

IMG-20241127-WA0368.jpg

IMG-20241127-WA0358.jpg

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் துயிலுமில்ல வளாகத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடர் மாவீரரின் தாயாரான வள்ளிபுரம் புஷ்பமலரினால் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர்.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில்...

IMG-20241127-WA0452.jpg

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

IMG-20241127-WA0447.jpg

சரியாக மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

IMG-20241127-WA0450.jpg

அந்தவகையில் பிரதான பொதுச்சுடரினை மாவீரர் மேஜர் பாலுவின் சகோதரியும், மாவீரர் லெப்ரினன்ட் பொன்னம்பலத்தின் மனைவியுமான கமலாதேவியினால் பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

IMG-20241127-WA0439.jpg

அத்தோடு சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர்.

IMG-20241127-WA0451.jpg

மேலும் குறித்த அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்து உணர்வெழுச்சியுடன் மாவீரர்நாள் நினைவேந்தலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில்....

IMG-20241127-WA0298.jpg

மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம் பெற்றது.

IMG-20241127-WA0286.jpg

பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார்.

IMG-20241127-WA0256.jpg

அதனைத் தொடர்ந்து ஏனைய தீபங்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG-20241127-WA0246.jpg

IMG-20241127-WA0244.jpg

யாழ். குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல்

IMG_20241127_175421.jpg

மாவீரர் வாரத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது.

IMG_20241127_180226.jpg

கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கே.கனகரத்தினம் ஏற்றியதை தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில்வாயினியின் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்ததை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG_20241127_180800.jpg

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில்...

DSC_0679.JPG

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது

DSC_0660.JPG

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள்  உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்

DSC_0702.JPG

அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

DSC_0681.JPG

DSC_0701.JPG

வவுனியா

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில்...

466dc8c5-f0bc-42dc-9049-9f28384d7a61.jpg

வவுனியா ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.  

c705da22-7b40-4688-8374-dbbe93b72560.jpg

இதன்போது  பிரதான ஈகைச்சுடர் இரண்டு மாவீரர்களின்  தாயாரான பாக்கியத்தினால் ஏற்றி வைக்கப்பட்டது.  அதனைத்தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.

95686869-c852-44cc-b0b1-49452a1b1067.jpe

ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.  

ccf66a3f-a985-443f-9e56-90c785d17ec1.jpg

e73678a9-9908-425a-968f-c17cfde99737.jpg

கடும் மழைக்கு மத்தியிலும் ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் நாள்....

IMG_20241127_180201.jpg

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் மாவீரர் தின நினைவேந்தல் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

IMG_20241127_180316.jpg

இதன்போது மாவீரர்களின் தாயார் இருவரினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள் மற்றும் பொதுமக்களால் மாவீரர்களின் நினைவுருவ படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.   

IMG_20241127_181654.jpg

IMG_20241127_180906.jpg

IMG_20241127_180556.jpg

கிளிநொச்சி

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள்...

mavirar_01_.png

2024 மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு கிளிநொச்சி சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

mavirar_06_.jpg

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் போராளி வேங்கை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரினை  மாவீரர்களின் கப்டன் சிவரூபன், விரவேங்கை சிவரூபன், விரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயார் நடராசா சீலாவதி பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார்.

mavirar_05_.jpg

ஏனைய ஈகை சுடர்கள் மாவீரர் இரண்டாம் லெப்டினன் பாபுவின் தந்தை இராமையாவும் கப்டன் வண்ணனின் தந்தை விஜயசேகரமும் ஏற்றி வைத்தனர் இதனை தொடர்ந்து மலர் மாலையை முன்னால் போராளிகளான  வேந்தன் மற்றும் பாலன் அவர்கியோர்கள் அணிவித்தனர். தொடர்ந்து ஏனைய சுடர்களும், மலர் அஞ்சலியும் இடம்பெற்றது.

mavirar_03_.jpg

mavirar_02_.jpg

மட்டக்களப்பு

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில்...

BBCC7247-6D26-47A8-BF25-325031AE8FCD.jpe

தமிழர்கள் இந்த நாட்டில் சுயநிர்ணய உரிமையுடன் ஏனைய இனங்கள்போன்று சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த விடுதலை வீரர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக நரடைபெற்றது.

74B0F746-D603-45EF-8853-0D5E55AE3117.jpe

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

B4B4D6F5-F5DD-4607-8555-FB175E908012.jpe

பெருமளவான மாவீரர்களின் உறவினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

E01B2DF1-2594-4D43-B920-CA911AFC4176.jpe

சரியாக 6.10 மணியளவில் பிரதான சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் இசை இசைக்கப்பட்டதுடன் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில்

mavadimunmary__8_.jpeg

மாவீரர் நினைவு நாள் இன்றயதினம் தமிழர் தயாகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் நடைபெற்றன.

pho_mavadimunmary__18_.png

தற்போது நிலவி வருகின்ற வெள்ள அனர்த்த நிலமைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

pho_mavadimunmary__1_.png

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் அதிகளவான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உள்ளிட்ட  பலரும் இதன்போது கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

pho_mavadimunmary__15_.png

மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் 2ஆம் லெப்பினட்  தங்கநிலா என்பவரின் தாயார் கிருஷ்ணபிள்ளை புண்ணியவதி பொதுச்சுடர் ஏற்றினார். தொடர்ந்து இரண்டாயித்துக்கு மேற்பட்ட  பொதுமக்கள் மாவீர்ரகளின் பெற்றோர் கலந்துகொண்டு தீபங்களை ஏற்றி அஞ்சலி செய்தனர்.

mavadimunmary__3_.jpeg

mavadimunmary__2_.jpeg

மன்னார்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்...

DSC_0679.JPG

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் புதன்கிழமை (27) மாலை நினைவு கூரப்பட்டது.

DSC_0660.JPG

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினால் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

DSC_0681.JPG

தமிழ் தேசிய விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.

DSC_0702.JPG

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

DSC_0701.JPG

அம்பாறை

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்...

sdgjk__1__-_Copy.jpeg

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றது.

sdgjk__2__-_Copy.jpeg

இன்று கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.

sdgjk__3__-_Copy.jpeg

இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான  பொதுச் சுடர் ஏற்றி நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அங்கு சென்ற மக்களிடம் பொலிஸார் பாதுகாப்பு கெடுபிடிகளை விதித்து அங்கு செல்வதை தடுக்க முயற்பட்டள்ளனர்.

dsgh__1__-_Copy.jpeg

அத்துடன் அங்கு சென்ற வாகனங்களின் நம்பர் பலகைகள் பொலிஸாரினால் பதியப்பட்ட பின்னர் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

sdgjk__5__-_Copy.jpeg

அத்துடன் அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பொலிஸார் முரண்பட்டதுடன் அங்கு சிறு பதற்ற நிலையும் ஏற்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/199882

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தை
நிராகரித்துவிட்டார்கள் என்றவர்களுக்கு
தெளிவான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இனியாவது இலங்கை இந்திய அரசுகள்
இதனை புரிந்து கொள்ளுமா?

தோழர் பாலன்


அவர்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கவில்லை மாறாக தமிழ் தேசிய வியாபாரிகளை தோற்கடித்துள்ளனர்.

Suganthan Karalasingam

  • கருத்துக்கள உறவுகள்

 

தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் வருகைத்தந்த மாவீரர்களின் உறவுகள்

maverarr-02.jpg

தாயக போரில் மரணித்த மாவீரர்களின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களது பெற்றோர்கள் அஞ்சலி செலுத்த வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறுத்துடையவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம்(27.11.2024) கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரரின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வித்துடல் விதைக்கப்பட்ட தேராவில் துயிலும் இல்லத்திற்கு 15 வருடங்களின் பின்னர் அவர்களது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று வருகை தந்திருந்தனர்.

இதற்கமைய அவர்களையும் கண்ணியமான முறையில் இன்றைய தினம் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

 

https://akkinikkunchu.com/?p=300799

 

 

கொட்டும் மழைக்கு மத்தியில் வடக்கு கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

Oruvan

தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த உறவுகளை உணர்வெழுச்சியுடன் நினைவுகூறும் வகையில் வடக்கு கிழக்கில் இன்று மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும், இயற்கை சீற்றத்தையும் பொருட்படுத்தாது இன்று மாலை தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

வீதிகளிலும், மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு மாவீரர் அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மாவீரர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு, கண்ணீரால் உறவினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஒன்றுகூடி மாவீரர் தினத்தை அனுஷ்டித்திருந்தனர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக ஒன்று திரண்டு தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை ஒரு மாவீரரின் தாய் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Oruvan

 

Oruvan

 

Oruvan

 

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில்

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் இடைவிடாத கொட்டும் மழையிலும் மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இமடபெற்றிருந்தது.

மாலை 06.05மணிக்கு மணி ஓசை எழுப்பப்பட்டு, தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதையடுத்து மாவீரர்களுக்கான பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அத்துடன், சமநேரத்தில் ஏனைய சுடர்களும் ஏற்றப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்சொரிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தலை மேற்கொண்டனர்.

Oruvan

 

Oruvan

 

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில்

யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தையான கந்தசாமி ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படட்டது.

Oruvan

 

Oruvan

 

Oruvan

 

குடத்தனை வடக்கில் மாவீரர் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் முதல் நிகழ்வாக சிவப்பு மஞ்சள் கொடி ஏற்றப்பட்டது. கொடியினை மாவீரர் றதிகலாவின் தந்தை கனகரத்தினம் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து பொதுச் சுடரினை வீரவேங்கை தொழில் வாயினின்றும் தாயார் இராசசுந்தரம் சின்னக்கிளி ஏற்றிவைத்தார்.

Oruvan

 

சாட்டி துயிலும் இல்லத்தில்

யாழ் தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாலை 06.05 மணி ஒலி எழுப்பப்பட்டு ஒரு கரும்புலி மாவீரர் உட்பட மூன்று மாவீரர்களின் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களால் சுடர்களை ஏற்றப்பட்டு மாவீரர்கள் நினைவு கூரப்பட்டனர்.

அதனைதொடர்ந்து நினைவு கற்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

Oruvan

 

Oruvan

 

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில்

மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்று (27) மாலை நினைவுகூரப்பட்டுள்ளது.

ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழு வினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

Oruvan

 

Oruvan

 

 

https://oruvan.com/sri-lanka/2024/11/27/heroes-day-celebrated-in-the-north-east-amid-pouring-rain

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாபெரும் புனிதர்கள்...நாங்கள் இறக்கவில்லை ...வாழ்கின்றோம் என எண்ணியிருப்பார்கள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.