Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் கடலில் பொதுமக்கள் படகு மீது சிறிலங்காக் கடற்படை தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடலில் பொதுமக்கள் படகு மீது சிறிலங்காக் கடற்படை தாக்குதல்

Written by Seran - Oct 18, 2007 at 03:00 PM

மன்னார் நாச்சிக்குடாவில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் சென்று கொண்டிருந்த அகதிகள் மீது பேசாலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கோரத்தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் இத்தாக்குதலுக்கு நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர்கள் இலக்காகியிருப்பதாக தெரிகிறது.

இச்சம்பவத்தில் புஸ்பமலர் அகவை -34 என்ற தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் புஸ்பமலர் மருத்துவர் ஒருவரிடம், தனது கணவர், இரண்டு பிள்ளைகள் மற்றும் இரண்டு படகோட்டிகள் படகில் இருந்தனர் என்றும் அவர்கள் உயிரிழந்து விட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.

இவ்வாறு கூறிவிட்டு அவர் மயக்கமடைந்ததாக மன்னார் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்களை மன்னார் மருத்துவமனைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இச்சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிக்கும் சிறிலங்கா கடற்படையினர் தாம் கடற்புலிகளின் படகுகள் மீதே தாக்குதல் நடத்தியதாக கொழும்பில் கூறி வருகின்றனர்.

விடத்தல்தீவிலிருந்து பேசாலை வடக்கு நோக்கி வந்துகொண்டிருந்த கடற்புலிகளின் படகுகளே தாக்கப்பட்டன என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா கடற்படையின் தாக்குதலின் பின்னர் கடற்புலிகள் அப்பகுதியில் இருந்து பின்வாங்கிவிட்டனர். அதனையடுத்து கடற்படையினர் அப்பகுதியில் தேடுதல் நடத்தினர். அடையாளம் காணப்படாத நான்கு சடலங்களை கடற்படையினர் அங்கிருந்து மீட்டுள்ளனர். மேலும் மூவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட படகின் வெளியிணைப்பு இயந்திரங்கள் இரண்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார் அவர்.

http://www.sankathi.net/index.php?option=c...63&Itemid=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பேசாலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் [/b

வீரகேசரி இணையம்

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை விடுதலைப்புலிகளிற்கும் கடற்படையினரிற்கும் இடையே கடற்சமர் இடம்பெற்றுள்ளது.இன்று காலை பேசாலை கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் படகுகளின் நடமாட்டத்தை அவதானித்த கடற்படையினர் இத்தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இப்பகுதி மீன்பிடிக்கவோ,மற்றும் ஏனைய அதிகார பூர்வமான நடவடிக்கைகளிற்கோ தடைவிதிக்கப்பட்ட பகுதியாகும்.அத்துடன் நேர வரையறை விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் இடம்பெறும் பகுதியாகுமென கடற்படையின் பேச்சாளர்டி.கேஎ.பி தசாநாயக்க தெரித்துள்ளார். புலிகளினுடையது என சந்தேகிக்கப்படும் இப்பேசாலை கடற்பரப்பில் படகுகளின் நடமாட்டத்தை அவதனித்த கடற்படையினர் தாக்குதல் நடத்திலுள்ளனர்.

இதற்கு அப்படகுகளில் தப்பி சென்றுள்ளதாகவும் இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதலில் ஒரு படகொன்றிலிருந்து 4 சடலங்களும் மூவரையும் மீட்டுள்ளதாக கடற்படை தரப்புக்கள் தெரிவித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.கைப்பற்றிய மூவரையும் மன்னார் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளிற்க்காக ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை இவர்கள் தலைமன்னார் நாச்சிக்குடாவில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் சென்று கொண்டிருந்த அகதிகள் எனவும் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இதில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் கடற்படையின் இத்தாக்குதலுக்கு நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர்கள் இலக்காகியிருப்பதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் புஸ்பமலர் (வயது 34) என்ற தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் புஸ்பமலர் மருத்துவர் ஒருவரிடம், தனது கணவர், இரண்டு பிள்ளைகள் மற்றும் இரண்டு படகோட்டிகள் படகில் இருந்தனர் என்றும் அவர்கள் உயிரிழந்து விட்டனர் என்றும் கூறியிருக்கிறார்.இவ்வாறு கூறிவிட்டு அவர் மயக்கமடைந்ததாக மன்னார் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்களில் இருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மன்னார் மருத்துவமனைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கொடிகளை காண்பித்து கைகளை உயர்த்தி கதறினோம் காயமடைந்து சிகிச்சை பெறும் புஸ்பமலர் விபரிப்பு

வீரகேசரி

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரின் பல படகுகளைக் கண்டோம். கடற்படையினரைக் கண்டதும் நாம் வெள்ளைக் கொடிகளை காண்பித்து கைகளையும் உயர்த்தி காட்டினோம். ஆனாலும் கடற்படையினர் எம்மீது தாக்குதல் நடத்தினர் என்று கடற்படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புஸ்பமலர் என்பவர் கேசரிக்கு தெரிவித்தார்.

கடற்பரப்பில் தமக்கு நேர்ந்த கதி குறித்து படுகாயமடைந்து சிகிச்சை பெறும் புஸ்பமலர் மேலும் கூறியதாவது,

அட்டனை பிறப்பிடமாகக் கொண்ட நாம் பாஷையூரில் வசித்து வந்தோம். அங்கு பிரச்சினைகள் அதிகரித்தமையினால் நாச்சிக்குடாவில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தோம். பிள்ளைகளின் கல்விக்காகவும் நாட்டுப் பிரச்சினை அதிகரித்து செல்வதனால் உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் படகு மூலம் தமிழகம் செல்ல தீர்மானித்தோம்.

புதன்கிழமை இரவு எமது குடும்பத்தினர் அனைவருமாக ஏழு பேர் படகில் ஏறி தமிழகம் நோக்கி புறப்பட்டோம். பல மைல் தூரம் பயணித்திருப்போம். காலை 6 மணியிருக்கும் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரின் பல படகுகளைக் கண்டோம். படகுகள் எமக்கு அருகில் வந்தபோது வெள்ளைக் கொடிகளை காண்பித்ததுடன் கைகளையும் மேலே தூக்கி காட்டினோம். எம்மீது தாக்குதல் நடத்த வேண்டாமெனவும் கதறினோம்.

ஆனால் இவற்றினை பொருட்படுத்தாது கடற்படையினர் எம்மீது தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் எமது மாமனாரும் இரு பிள்ளைகளும் துடிதுடித்து மரணித்தனர்.மாமாவும் மரணமானார்.

எனது கணவர் தாக்குதலையடுத்து படகில் இருந்து கடலில் குதித்தார். அவருக்கு என்ன நடந்ததென தெரியவில்லை. எனது இரு பிள்ளைகள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாலைச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் மரண விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றில் அவசரகாலச் சட்ட விசேட விதிகளின் பிரகாரம்

தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்ற வேளை பேசாலைக் கடற்பரப்பில் கடற் படையினரின் சூட்டுக்கு இலக்காகி உயிரி ழந்தவர்களின் மரண விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்திலேயே இடம்பெறும்.

வழமையாக நீதிமன்ற நீதிவானால் நடத் தப்படும் மரண விசாரணைக்குப் பதிலாக, அவசரகாலச் சட்ட விசேட விதிகளின் கீழ் இந்த மரணங்கள் குறித்த விசாரணை மேல் நிதிமன்றத்தில் இடம்பெறுவுள்ளது.

இந்த ஏற்பாட்டின் பிரகாரம்

மன்னார் நீதிமன்ற நீதிவான் இன்று காலை வைத்தியசாலையில் சடலங்களைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத் தரவிடுவார்.

பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப் படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம் பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்துவார். பின்னர் சம்பந்தப்பட்டவர் களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வார்.

அந்த வாக்குமூலங்களையும், மன்னார் ஆஸ்பத்திரி வைத்திய அதிகாரி சமர்ப்பிக் கும் பிரேதபரிசோதனை அறிக்கையையும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

அந்த நீதிமன்றத்திலேயே மரண விசா ரணைகள் இடம்பெறும்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.