Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 DEC, 2024 | 02:05 PM
image
 

சீன அரசாங்கத்தினால் "சீனாவின் சகோதர பாசம்" என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன. 

சீன தூதுவர் H.E.Qi Zhenhong திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இப்பொதிகளை வழங்கி வைத்தார். 

திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சீனத்தூதுவர் H.E.Qi Zhenhong மற்றும் அவரது குழுவினர், அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுகுணதாஸ், ஆளுநரின் செயலாளர் அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

download__6_.jpg

download__5_.jpg

download__7_.jpg

download__8_.jpg

https://www.virakesari.lk/article/202448

  • கருத்துக்கள உறவுகள்

அட்ரா சக்கை!தமிழர் விரோத இந்தியா புழுங்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான உதவிகள் தொடரும்

இலங்கைக்கான உதவிகள் தொடரும்

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சீன நாட்டு அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுனர் இலங்கைக்கான சீன தூதுவரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் கலந்துகொண்துடன் சீனதூதரகத்தின் பிரதம அரசியல் பிரிவிற்கான அதிகாரி குயின் லிஹோன்,மேலதிக அரசாங்க அதிபர்களான சிறிக்காந்த், முகுந்தன் மற்றும் தூதரக அதிகாரிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  770 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டன.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://tamil.adaderana.lk/news.php?nid=197997

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புலவர் said:

அட்ரா சக்கை!தமிழர் விரோத இந்தியா புழுங்கட்டும்.

இலங்கையில்... வெள்ளம் வந்தது, இந்தியாவுக்கு தெரியாது போலை இருக்கு. 😀
தெரிந்திருந்தால்... அள்ளிக் கொட்டியிருக்கும். 
சீனாக்காரனின் சுறு சுறுப்பு... இந்தியரிடம் இல்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

புழு , பூச்சியோடு குடுக்காமல் இருந்தால் சரி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.