Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நான்கு தூதுவர்களையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நியமித்துள்ளார்.

 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி உத்தியோகபூர்வ நியமனங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. 
நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகராக டபிள்யூ.ஜி.எஸ் பிரசன்னவும், கட்டாருக்கான தூதுவராக ஆர்.எஸ்.கான் அசார்ட், ரஷ்யாவுக்கான தூதுவராக எஸ்.கே.குணசேகர, குவைத்துக்கான தூதுவராக எல்.பி.ரத்நாயக்க மற்றும் எகிப்திற்கான தூதுவராக ஏ.எஸ்.கே.செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச சந்தை வாய்ப்புகள் 

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, இராஜதந்திரிகளின் திறன்களில் நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன்,  இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் அந்தந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் அவர்களின் தேவையை சுட்டிக் காட்டியுள்ளார்.

புதிய இராஜதந்திரிகள் ஐவர் ஜனாதிபதியால் நியமனம் | President Appoints Five Diplomats

வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் பணிபுரியும் இலங்கையர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையின் இராஜதந்திரிகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளை, நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும், இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி திஸாநாயக்க கூறியுள்ளார்.

 

https://tamilwin.com/article/president-appoints-five-diplomats-1736236461

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு

January 7, 2025  01:32 pm

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய நியமனங்களை பெற்ற இராஜதந்திரிகளிடம் இருந்து அவ்வாறானவற்றை எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது.

இங்கு உரையாற்றுகையிலே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி செயற்படுமாறும்  அந்த நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கு முன்னின்று  பாரபட்சமின்றி நியாயமாக செயற்படுமாறும் ஜனாதிபதி புதிய இராஜதந்திரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இலங்கைப் பணியாளர்கள் தொழில்புரியும் மத்திய கிழக்கு, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இராஜதந்திர சேவைகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதுடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் பணியை  இராஜதந்திர சேவையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டு வருவது தூதுவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பு எனவும், அதற்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 04 தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர் ஒருவரையும் நியமித்தார்.

இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த   அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

கத்தார் நாட்டின் தூதுவராக  - ஆர்.எஸ்.கான் அசாத்

ரஷ்ய தூதுவராக - எஸ்.கே.  குணசேகர 

குவைத் தூதுவராக - எல்.பி.ரத்நாயக்க

எகிப்திய தூதுவராக - ஏ.எஸ்.கே.செனவிரத்ன

நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக - டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=198411

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இராஜதந்திர சேவையில் 20 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த   அதிகாரிகள் இவ்வாறு இராஜதந்திர சேவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி,

கத்தார் நாட்டின் தூதுவராக  - ஆர்.எஸ்.கான் அசாத்

ரஷ்ய தூதுவராக - எஸ்.கே.  குணசேகர 

குவைத் தூதுவராக - எல்.பி.ரத்நாயக்க

எகிப்திய தூதுவராக - ஏ.எஸ்.கே.செனவிரத்ன

நியூசிலாந்து உயர்ஸ்தானிகராக - டபிள்யு.ஜீ.எஸ். பிரசன்ன  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன மத பேதம் இல்லை என்கிறார்கள்?

ஆனாலும் சகல உயர் பதவிகளுக்கும் சிங்கள மக்களே நியமிக்கப்படுகிறார்கள்.

தமிழரில் ஒரு ராஜதந்திரி கூடவா இல்லை.

முஸ்லீம் நாட்டுக்கு என்றபடியால் ஒரு முஸ்லீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.