Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 JAN, 2025 | 07:02 PM
image

(எம்.நியூட்டன்)

'கிளின் சிறிலங்கா' என்பது இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவது தான் நோக்கம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.  

தேசிய தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (17) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் யூனியன் கல்லுரியில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, அன்பை, பாசத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் பேச்சளவில் மாத்திரம் நிகழ்ந்திருக்கிறதே தவிர யதார்த்தபூர்வமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். ஆனால் தை பிறந்தால் வழி பிறந்ததா என்பதை தேடிப் பார்த்தால் எங்கள் நாட்டில் தை பிறந்தால் என்ன நடந்திருக்கும் தாட்டில் மாற்றம் எற்பட்டதா சிறுவர்களுக்கு மகிழ்சி ஏற்படுத்தப்பட்டதா என்று தேடி பார்த்தால் எதுவுமே இல்லை.

இந்த வருட தை பிறப்பு என்பது 75 வருடங்களுக்கு பிறகு நாங்கள் நீங்கள் எல்லோருமே கூட்டிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்ற நிலையில் நடைபெறுகின்றது. முதலில் எங்களுக்கு வழங்கிய ஆணைக்கு தலைவணங்கி நன்றி கூறுகின்றோம்.

நீங்கள் வழங்கிய மாற்றத்துக்கான ஆணையூடாக மாற்றத்தை ஏற்படுத்துவோம். எந்தவிதமான பந்தாக்களும் இல்லாமல் தான் நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். 

கிளின் சிறிலங்கா என்பது நாட்டையோ வீட்டையோ கிராமத்தையோ சுத்தப்படுத்துவதல்ல. எங்களுடைய இனம், மத மனங்களை சுத்தப்படுத்துவது தான் முதலாவது விடயமாகின்றது. சிதைந்து போயுள்ள மனங்களை சுத்தப்படுத்துவது தான் கிளின் சிறிலங்காவின் நோக்கம்.

இந்தப் பொங்கலிலிருந்து புதிய பாதையில் பயணிப்போம் என்பது எனது வேண்டுகோளாகும். அரசாங்கம் புதிய பாதையில் பயணிக்கிறது. ஜனாதிபதி புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 

இந்தப் பாதையில் நாங்கள் மாத்திரமல்ல. நீங்களும் பயணிக்க வேண்டும். உங்களைத் தான் நாங்கள் நம்பியிருக்கின்றோம். நீங்கள், நாங்கள் இணைந்து நாசமாக்கப்பட்டுள்ள இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/204273

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இது சிங்கள பௌத்த நாடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். 

இவர்களை வெளியே வைத்துக்கொண்டு கிளீன் என்பது இது சிங்கள பௌத்த நாடு எ என்பதை ஏற்றுக் கொண்டு வாழ பழகுதலே இவர்கள் தமிழருக்கு சொல்ல வரும் கிளீன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

ஒருவர் இது சிங்கள பௌத்த நாடு என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். 

இவர்களை வெளியே வைத்துக்கொண்டு கிளீன் என்பது இது சிங்கள பௌத்த நாடு எ என்பதை ஏற்றுக் கொண்டு வாழ பழகுதலே இவர்கள் தமிழருக்கு சொல்ல வரும் கிளீன். 

ஆக்குவார்.ஆக்குகின்றார்...ஆக்கிவிட்டார்...விரைவில்

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:
19 JAN, 2025 | 07:02 PM
image

(எம்.நியூட்டன்)

'கிளின் சிறிலங்கா' என்பது இன, மத மனங்களையும் சுத்தப்படுத்துவது தான் நோக்கம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.  

தேசிய தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (17) தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்று பின்னர் யூனியன் கல்லுரியில் அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன. அங்கு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, அன்பை, பாசத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகள் பேச்சளவில் மாத்திரம் நிகழ்ந்திருக்கிறதே தவிர யதார்த்தபூர்வமாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள். ஆனால் தை பிறந்தால் வழி பிறந்ததா என்பதை தேடிப் பார்த்தால் எங்கள் நாட்டில் தை பிறந்தால் என்ன நடந்திருக்கும் தாட்டில் மாற்றம் எற்பட்டதா சிறுவர்களுக்கு மகிழ்சி ஏற்படுத்தப்பட்டதா என்று தேடி பார்த்தால் எதுவுமே இல்லை.

இந்த வருட தை பிறப்பு என்பது 75 வருடங்களுக்கு பிறகு நாங்கள் நீங்கள் எல்லோருமே கூட்டிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கின்ற நிலையில் நடைபெறுகின்றது. முதலில் எங்களுக்கு வழங்கிய ஆணைக்கு தலைவணங்கி நன்றி கூறுகின்றோம்.

நீங்கள் வழங்கிய மாற்றத்துக்கான ஆணையூடாக மாற்றத்தை ஏற்படுத்துவோம். எந்தவிதமான பந்தாக்களும் இல்லாமல் தான் நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். 

கிளின் சிறிலங்கா என்பது நாட்டையோ வீட்டையோ கிராமத்தையோ சுத்தப்படுத்துவதல்ல. எங்களுடைய இனம், மத மனங்களை சுத்தப்படுத்துவது தான் முதலாவது விடயமாகின்றது. சிதைந்து போயுள்ள மனங்களை சுத்தப்படுத்துவது தான் கிளின் சிறிலங்காவின் நோக்கம்.

இந்தப் பொங்கலிலிருந்து புதிய பாதையில் பயணிப்போம் என்பது எனது வேண்டுகோளாகும். அரசாங்கம் புதிய பாதையில் பயணிக்கிறது. ஜனாதிபதி புதிய உலகத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 

இந்தப் பாதையில் நாங்கள் மாத்திரமல்ல. நீங்களும் பயணிக்க வேண்டும். உங்களைத் தான் நாங்கள் நம்பியிருக்கின்றோம். நீங்கள், நாங்கள் இணைந்து நாசமாக்கப்பட்டுள்ள இந்த நாட்டை முன்னேற்ற வேண்டும். அதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/204273

இவருக்கும் கிளீன் லங்கா பற்றிய முழுப் புரிதல் இல்லை என்று தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

RishiK   அவர்களே! முதலில் உங்கள் கிளீன் லங்கா பற்றிய முழுப் புரிலையும் எழுதுங்கள் அறிய ஆவலாக உள் ளோம்.🧐

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, RishiK said:

கிளின் சிறிலங்கா என்பது நாட்டையோ வீட்டையோ கிராமத்தையோ சுத்தப்படுத்துவதல்ல. எங்களுடைய இனம், மத மனங்களை சுத்தப்படுத்துவது தான் முதலாவது விடயமாகின்றது. சிதைந்து போயுள்ள மனங்களை சுத்தப்படுத்துவது தான் கிளின் சிறிலங்காவின் நோக்கம்

 

5 hours ago, RishiK said:

இவருக்கும் கிளீன் லங்கா பற்றிய முழுப் புரிதல் இல்லை என்று தெரிகிறது. 

அவர்களின் நோக்கத்தை தெளிவாக சொல்லி உள்ளாரே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.