Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ஆட்சி மீது குவியும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சி மீது குவியும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள்

-வேலவன்-

சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு. விலைவாசி ஏற்றம், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு மத்தியில் சிக்கிப் போயிருக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அது இன்று நெருக்கடிக்குள்ளேயே சிக்கியுள்ளது.

இதுவரை அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பில் நெருக்கடிகளைச் சந்திக்கவில்லையாயினும் அல்லது அது பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தையும் மற்றும் சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும் வரவு-செலவுத் திட்டம் என்று வருகின்றபோது அது அச்சமடையவே செய்கின்றது.

இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி குறித்துக் கொண்டுள்ள அச்சத்திலும் ஜே.வி.பி. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமா? என்பது குறித்தே மகிந்த ராஜபக்ச கவலையடைந்திருக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஏற்கனவே 17 பேர் ஆளும் கட்சிக்குத் தாவியுள்ள நிலையிலும் இ.தொ.கா. உள்ளிட்ட சிறிய கட்சிகள் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும் ஜே.வி.பி. மீதே மகிந்த அதிக நம்பிக்கை கொண்டுள்ளார் போலத் தெரிகிறது.

அதேவேளை ஜே.வி.பி. யை வெளியில் விட்டு வைத்திருப்பதும் மகிந்தவைப் பொறுத்து அதிகம் ஆபத்தானது தான். ஏனெனில் ஐ.தே.க. வுடன் ஜே.வி.பி. இணைந்து கொள்ளக் கூடியளவுக்கு நிலைமை ஏற்படுமாயின் ஏனையவர்களை மகிந்தவுக்கு எதிராகத்திருப்புவது சுலபம் என்பதே தென்னிலங்கையின் பொதுவான கணிப்பாக இருக்கின்றது.

இந்நிலையில் விலைவாசி உயர்வும் அரசாங்கத்தின் ஊழல் நடவடிக்கைகளும் ஜே.வி.பி.க்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும். ஏனெனில் நீண்ட காலத்திற்கு இவற்றைப் பற்றி எதுவித நடவடிக்கையும் எடுக்காது இருப்பது ஜே.வி.பி.க்கு முடியாத ஒன்றாகும்.

இப்பொழுது போர் குறித்து சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள மாயை காரணமாகவே இவ்விடயங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந் நிலைமை மாற்ற மடையுமானால் நிகழப்போவது என்ன? என்பது குறித்து ஜே.வி.பி. செயற்பட வேண்டியே இருக்கும்.

முன்னைய அரசாங்கங்கள் எல்லாவற்றையும் விட மகிந்த அரசாங்கம் பாரிய அளவில் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது. இதில் ஆயுத தளவாடக்கொள்வனவில் என்று மட்டுமல்ல, அரச நிறுவனங்கள் பலவற்றிலும் இடம்பெற்ற மோசடிகள் வெளிப்பட்டுள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்டோர் மகிந்த அரசின் பங்காளிகளாக இருக்கின்றனர்.

அதிலும் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொது நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்கள், நிர்வாக மோசடிகள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றது. இதில் பெருமளவான மோசடிகள் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதிலே இரண்டாவது அறிக்கை மொத்தம் 26 நிறுவனங்களில் 500 மில்லியன் நிதி மோசடி குறித்து தகவல் வெளியிட்டது. அதேவேளை இந்த அமைப்பு தொடர்ந்தும் பொது நிறுவனங்களில் கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றது.

ஆங்கிலத்தில் 'கோப்" எனும் சுருக்கப் பெயரால் அழைக்கப்பட்டுவரும் இந்த அமைப்பானது 30 அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் குழுவில் புதிய உறுப்பினராக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரனும், ஆலோசகரும் புதிதாக தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக இணைக்கப்பட்டவருமான பசில் ராஜபக்ச சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். அதாவது அவருக்கு மேலும் ஒரு பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர் இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்த அமைச்சர் ரோகித அபயகுணவர்த்தனவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது அந்த அமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி யிருக்கிறது.

'கோப்" எனும் இந்த அமைப்புதான் கண்டறிந்தவற்றைப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையாகச் சமர்ப்பித்திருக்கின்றது. மேலும் அது தனது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பின் பணி குறித்து ஏற்கனவே பசில் ராஜபக்ச அதிருப்தி கொண்டிருப்பதுடன் சில விமர்சனங்களையும் முன்வைத்திருக்கின்றார்.

மகிந்த சகோதரர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே இருக்கின்ற நிலையில் பசில் ராஜபக்ச இந்த அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வேடிக்கையானது தான்.

அதாவது இந்த அமைப்புப் புதிதாக அமைக்கப்படும் போது பசில் ராஜபக்ச ஓர் உறுப்பினராக இணைக்கப்பட்டிருப்பின் அது வேறு விடயம் ஆனால் 'கோப்" தனது விசாரணைகளை நடத்தி இரு அறிக்கைகளை வெளியிட்ட பின் அதிலும் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் மகிந்த சகோதரர்கள் மீது சுட்டிக்காட்டப்படுகின்ற நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் வேடிக்கையானது. ஆனால் இவ்வாறு பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டிருப்பது ஏன்? என்ற விடயமும் கூட இப்போது வெளிப்பட்டுவிட்டது.

அவர் மகாவலி அமைச்சு தொடர்பான கோப்பின் விசாரணையின் போது தலையீடு செய்திருக்கிறார். இந்த விசாரணையின் போது ஆணைக்குழு உறுப்பினர்களான அமைச்சர் குசைன் பைலா, டிலான் பெரேரா ஆகியோர் அவருக்கு விளக்கமளிக்க முற்பட்டபோதும் அதனையும் மீறி மகிந்த சிந்தனை பற்றி அந்த ஆணைக்குழு விசாரணையின் போது பசில் ராஜபக்ச உரையாற்றியிருக்கிறார்.

இதனால் ஆணைக்குழுவின் தலைவர் விஜயதாச ராஜபக்ச வெளியேறிவிட விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டன. பாராளுமன்ற ஆணைக் குழுவின் அறிக்கை மகிந்தவுடன் இணைந்து கொண்டுள்ள ஐ.தே. கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட மீதும் குற்றம் சாட்டுகின்றது.

இவர் மீது 10 மில்லியன் ரூபா மோசடி செய்ததான குற்றச்சாட்டை இந்த ஆணைக்குழு முன்வைத்துள்ளமையை அடுத்து அதனை எதிர்க்கட்சி பிடியாகப் பிடித்துக்கொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிலிந்த மொறகொட மீது கொண்டு வந்துள்ளது.

இதற்கு ஆதரவாக ஜே.வி.பி வாக்களித்தே ஆகவேண்டுமென ஐ.தே.க வாதிடுகிறது. ஏனெனில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஆணைக்குழுவில் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர். இவ்வாறான ஆணைக் குழுக்களின் அறிக்கைகள் ஊழல் புரிந்தவர்கள் மீது பெரும் தாக்கம் எதனையும் இதுவரை காலமும் விளைவித்ததில்லை. தொடர்ந்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டதுமில்லை.

ஆனால் விலைவாசி இன்று விசம் போல் ஏறியுள்ள நிலையில் யுத்தம் மட்டும் தான் இதற்குக் காரணமல்ல என நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்ற ஐ.தே.க எடுக்கும் முயற்சி ஆட்சியாளர் மீது தாக்கத்தை விளைவிக்கின்றது.

பசில் போன்றோர். ஆணைக்குழுவைக் குழப்ப முயல்வது மேலும் இதனை மோசமாக்கும். அத்துடன் யுத்த தளவாடக் கொள்வனவில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் இது வலுச்சேர்க்கும். மகிந்த அரசாங்கம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிக்க முடியாத நிலையை அடைந்திருக்கிறது. இதன் காரணமாகப் பொருளாதார ரீதியான பின்னடைவை சர்வதேச ரீதியில் சந்திக்கக் கூடும். ஆனால் 'யுத்த வெற்றி" என்ற மாயையில் சிக்கிக்கொண்டுள்ள சிங்கள மக்களில் கணிசமானோருக்கு அது பெரிதாகத் தெரிவதில்லை.

ஆனால் விலைவாசி ஏற்றம் என்பதும் இதற்கு ஊழல் ஒரு காரணமாக இருப்பதும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை காலப் போக்கிலாவது ஏற்படுத்தும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியாயினும் ஐ.தே.க.வாயினும் ஆட்சியதிகாரத்தை இழக்க விலைவாசி ஏற்றமே காரணமாக இருந்திருக்கின்றது.

இம்முறை ஆட்சியையே பெரும் பிரயத்தனத்தில் கைப்பற்றிய மகிந்த ராஜபக்ச இது பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. குறைந்தது ஊழல் மோசடிகளையாவது தவிர்த்துக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து விடுபடவோ முயற்சி செய்யவில்லை. இது சிங்கள மக்களையும் அவர் உதாசீனம் செய்வதை அல்லது அவர்களை ஏமாற்றிவிடலாம் என நம்புவதையே சுட்டிக் காட்டுகின்றது.

இந்த மோசடிகள் ஊழல்களுக்கெல்லாம் அதிகளவில் ஆயுதக் கொள்வனவில் நடைபெறுவதாக மகிந்த ஆட்சிமீது குற்றம் சாட்டப் படுகின்ற நிலையில் அனைத்துச் சுமைகளையும் சுமக்க வேண்டியவர்களாக சிங்கள மக்களே உள்ளனர். அவர்கள் விரைந்து இதனை உணர்ந்து கொள்ளாவிடின் சிங்கள தேசத்தை எவரும் மீட்க முடியாத நிலையே ஏற்படும்.

நன்றி: ஈழநாதம் (20.10.07)

tamilnaatham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.