Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் மீன்பிடிப் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

திங்கட்கிழமை (27) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த இந்திய மீன்பிடிப்படகுகள் பெருமளவானவை வடக்கு கடற்பளை கட்டளை தலைமையகத்தினால் கண்காணிக்கப்பட்டன. குறித்த மீன்பிடிப்படகுகளை நாட்டின் கடல் எல்லையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பினை வடக்கு கட்டளைக்குரிய கப்பல்கள் முன்னெடுத்திருந்தன.

இதன் போது சட்ட விரோதமாக மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் ஒரு மீன்பிடிப்படகுடன் கைது செய்யப்பட்டனர். இந்திய மீன்பிடிப்படகினை கடற்படையினர் கைது செய்யவிருந்தபோது, அப்படகு கடற்படையின் சட்டப்பூர்வ உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல், தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. இதனால் குறித்த படகில் சில கடற்படையினர் இறங்கியுள்ளனர்.

இதன் போது தமது படகிற்குள் கடற்படையினர் ஏறுவதை தடுப்பதற்காக, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதோடு குறித்த இந்திய மீனவர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர். கடற்படையினருக்குள்ள அதிகாரத்துக்கமைய அவர்கள் குறித்த படகில் இறங்கிய போது இந்திய மீனவர்கள் குழுவாக அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

கடற்படையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கடற்படை வீரர் ஒருவரிமிருந்த துப்பாக்கியையும் அவர்கள் பறிக்க முயற்சித்துள்ளனர். இதன் போது அந்த துப்பாக்கி இயங்கியதாலேயே இரு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் கடற்படையினரால் காயமடைந்த மீனவர்கள் இருவருக்குள்முதலுதவியளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த மீனவர்கள் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதோடு, கடற்படையால் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இதன் போது கைப்பற்றப்பட்ட மீன்பிடிப்படகுடன் எஞ்சிய 11 மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு நேற்று செவ்வாய்கிழமை காலை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலடி கடற்வள ஆய்வாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன்படி நடவடிக்கைகளை தடுத்து  வடக்கு கடல் பிராந்தியத்தில் கடல் வளத்தின் பாதுகாப்பிற்கும், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கை கடற்படை தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. 

இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது - கடற்படை விளக்கம் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காயமடைந்த இந்திய மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் சந்தித்தார்

ditorial   / 2025 ஜனவரி 28 , பி.ப. 05:37 - 0      - 19

facebook sharing button
twitter sharing button
print sharing button
email sharing button

image_a4bd3e0224.jpg

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக, செவ்வாய்க்கிழமை (28)  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.

இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்தார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.

இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.

கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளார். குறித்த மீனவர்களை நாட்டுக்கு  அனுப்புவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tamilmirror Online || காயமடைந்த இந்திய மீனவர்களை இந்திய துணைத்தூதுவர் சந்தித்தார்

  • கருத்துக்கள உறவுகள்

இவனுகள் திருந்த வாய்ப்பே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.