Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு

மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு.

‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை இணையதளத்தில் தேடிய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரிலேயே 17 வயது மாணவி ஒருவர் இவ்வாறு தனது உயிரை மாய்த்து செய்துகொண்டுள்ளார்.

கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவி இந்தி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராக இருந்து இருக்கிறார்.

நேற்று அதிகாலை மாணவியின் தாய் அவரது படுக்கை அறைக்கு சென்ற போது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குடும்பத்தினர் மாணவியை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் , அவர் ஏலவே உயிரழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மாணவி கல்லால் செய்யப்பட்ட கத்தியால் கை, கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் பொலிஸார் மாணவியின் செயல் குறித்து விசாரித்தபோது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

மாணவி படிப்பில் சிறந்து விளங்கிய போதும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாக இருந்து உள்ளார். மேற்கத்திய கலாசாரத்திலும் அதீத ஆர்வம் காட்டி உள்ளார். நாட்கள் செல்ல செல்ல செல்போனில் மூழ்கிய மாணவி, ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார். வெளிநாட்டு கலாசாரம் பற்றியும் ஆன்லைனில் அதிகம் தேடிப்பார்த்து இருக்கிறார்.

இதையடுத்து மாணவிக்கு விபரீத சிந்தனைகள் உருவாகின. ‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை தெரிந்து கொள்வதில் மாணவி அதீத ஆர்வம் காட்டினார். இதனை ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் அவர் ஆன்லைனில் கற்காலத்தில் மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்தும் கல்லால் செய்யப்பட்ட கத்தியை ஆர்டர் செய்தார். அந்த கத்தியால் தான் அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். மாணவி கத்தியை பயன்படுத்தி கையின் மணிக்கட்டு பகுதியில் 5 முறை அறுத்து உள்ளார். இறுதியில் அவர் கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆன்லைனில் தேடிப்பார்த்து தன் உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே மகளை இழந்த மாணவியின் பெற்றோர் மீள முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாக்பூர் தன்தோலி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்துள்ள பிளஸ்-2 மாணவியின் வீட்டில் இருந்து ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட கடிதத்தை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதம் 4 பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் மரணம் மீதான ஈர்ப்பு, வெளிநாட்டு சித்தாந்தம், நாசிசம், ரஷிய கலாசாரம், மெட்டா பிசிக்ஸ் பற்றி மாணவி குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1418737

  • கருத்துக்கள உறவுகள்

" ஒரே மகள் " எத்தனை பாஷை தெரிந்து  என்னென்ன வசதி இருந்து என்ன பயன் ....பெற்றார் கவனிக்காமல் விட்டுவிடடார்கள் போலும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.