Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
31 JAN, 2025 | 11:12 AM
image

(எம்.நியூட்டன்)

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் தலைமையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்குபற்றலுடன் இன்று (31) நடைபெற்று வருகிறது.  

மும்படையினர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், துணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வழமைக்கு மாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

IMG_20250131_100159_1.jpg

IMG_20250131_100338.jpg

https://www.virakesari.lk/article/205399

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இந்தக் கூட்டத்தில், அர்ச்சுனா இராமநாதன் கலந்து கொள்ளவில்லையா. 😎

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வரும் ஜனாதிபதியிடம் 20 விடயங்களை முன்வைத்தார் கயேந்திரகுமார் எம்.பி!

655993783.jpg

ஜனாதிபதி தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்கான விடயத்தானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட செயலருக்கு வழங்கியுள்ளார். 

இருபது முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயத்தானங்களை அபிவிருத்தி குழு கூட்ட நிகழ்சி நிரலில் சேர்ப்பதற்காக இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

- யாழ். போதானா மருத்துவமனையின் மகப்பேற்று விடுதி உடனடியாக அமைக்கப்படல்.

- யாழ். போதனா மருத்துவமனையில் அதிகளாவான நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது. பல விடுதிகளில் அவ்வப்போது நோயாளர்கள் கட்டில்கள் இல்லாத நிலையில் நிலங்களில் படுக்கின்ற நிலைமை சீர் செய்யப்படல். 

- யாழ் பண்ணையில் அமைந்துள்ள காச நோய் சிகிச்சைப் பிரிவில் அடிப்படை வசிதிகள் மேம்படுத்தப்படல் வேண்டும். மயிலட்டியில் அமைந்திருந்த காசநோய் பிரிவை அந்த இடத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மயிலிட்டியில் இயங்கிய காசநோய் மருத்துவமனை தற்காலிகமாக கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் இயங்குகிறது. ஆனாலும் அங்கு ஆளணிகள் எதுவும் நியமிக்கப்படவில்லை உடனடியாக ஆளணி நியமனம் செய்யப்படல் வேண்டும். 

- பண்ணையில் உள்ள மார்பாக சிகிச்சை நிலையத்திற்கென நிரந்தரமான எக்ஸ்றே றேடியோ கிறாபர் இல்லை. நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும். தற்போது திங்கள் புதன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே வருகின்றார்.

- பண்ணையிலுள்ள மார்பாக சிகிச்சை நிலையத்தில் பரிசோதனைக்காக பெறப்படும் சளிமாதிரிகளை பாதுகாப்பாக களஞ்சியபடுத்துவதற்கான குளிர்சாதனப் பெட்டிகள் பெரும் பற்றாக்குறையாக உள்ள நிலையில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் ஐந்து நாட்களுக்குள் சோதனை செய்யப்படல் வேண்டும். ஆனால் உரிய கருவிகள் இன்மையால் ஒரு வருடங்களாக சேமிப்பில் உள்ள நிலை காணப்படுகின்றது. இந்நிலை சீர் செய்யப்படல் வேண்டும்.

- யாழ் மாவட்டத்தில் பெருமளவான இளையோர் போதைப் பொருள் பயன்பட்டிற்கு அடிமையாகியுள்ள நிலையில் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வளித்து மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்படல் .

- யாழ் மாவட்டத்தில் கடற்தொழில்படகுகளை பாதுகாப்புக்கான கல்லணைகளை பின்வரும் பகுதிகளில் அமைத்தல்.

- பருத்தித்துறை மூர்க்கம், முனை, கொட்டடி கடற்கரை, சுப்பர்மடம். இன்பர்சிட்ட கடற்கரை, சக்கோட்டை கடற்கரை, திக்கம் கடற்கரை, கொத்தியால் கடற்கரை, றேவடி கடற்கரை, ஆதிகோவிலடி கடற்கரை, தொண்டமனாறு கடற்கரை, பலாலி கடற்கரை.சேந்தான்குளம், மாதகல் கடற்கரை ஆகிய இடங்களில் படகுகள் தரித்துநிற்கும் இடங்களில் படகுகளைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புக் கல்லணைகள் அமைக்கப்படல் வேண்டும்.

- இறக்கப்படும் நுழைவு வாண்கள் நீண்டகாலமாக ஆழப்படுத்தப்படாமையினால் படகுகள் சேதமடைகின்றன. படகுகள் சேதமடைவதனை தடுக்கும் வகையில் குறித்த இடங்கள் உடனடியாக ஆழப்படுத்தப்படல் வேண்டும்.

- கொத்தியால் கடற்கரையில் படகுகள் தரிப்பிடத்தில் அகழப்பட்ட மண்ணை அப்புறப்படுத்த நடவடிகை எடுத்தல்:

- வல்வெட்டித்துறை கிழக்கு கிராமிய கடற்தொழில் அமைப்பினருக்குச் சொந்தமான படகுகள் தரித்து நிற்கும் பகுதியிலிருந்து அகழப்பட்ட மண் கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ளது. மண்ணை அகற்றுவதற்கான திணைக்களங்கள் இன்னமும் வழங்கவில்லை. எனவே குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அண்மையிலுள்ள பொது அமைப்புக்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படல் வேண்டும்.

-  இந்திய மீனவர்களால் வலைகள் படகுகள் சேதமாக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும்.

- கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட விவசாய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படல் வேண்டும்.

- யாழ் குடாநாட்டில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு காணி வழங்கவும் வீடுகள் கட்டிக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி போதாமலுள்ள நிலையில் நிதியை அதிகரிக்க வேண்டும். 

இவ்வாறு இருவது கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு செயலாளரான மாவட்ட செயலருக்கு அனுப்பியுள்ளார். (ப)

 

https://newuthayan.com/article/யாழ்._வரும்_ஜனாதிபதியிடம்__20_விடயங்களை_முன்வைத்தார்_கயேந்திரகுமார்_எம்.பி!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் ஆரம்பமாகியுள்ளது

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது

குறித்த கூட்டத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்

இதேவேளை இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கான 20 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய விடயதானங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபனுக்கு வழங்கியுள்ளார்

மேலும் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலும், பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் இரு சிநேகபூர்வ சந்திப்புகளிலிலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20250131-WA0006-600x338.jpg

IMG-20250131-WA0007-600x338.jpg

IMG-20250131-WA0008-600x338.jpg

IMG-20250131-WA0009-600x338.jpg

IMG-20250131-WA0013-600x338.jpg

IMG-20250131-WA0015-600x338.jpg

IMG-20250131-WA0016-600x338.jpg

IMG-20250131-WA0021-600x338.jpg

IMG-20250131-WA0023-600x338.jpg

https://athavannews.com/2025/1419128

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர : கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

31 JAN, 2025 | 03:44 PM
image
 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

  • மக்களின் நிலங்கள் மக்களிற்கு வழங்கப்படவேண்டும், வடக்கில் காணப்படும் காணி பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றது.
  • நிலங்களை மக்களிற்கு மீள வழங்க நடவடிக்கை
  • பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பிராந்திய மக்களிற்கு நன்மையை குறிப்பிடத்தக்க அபிவிருத்தி திட்டங்களிற்காக முழுமையாக விடுவிக்கப்படும்.
  • தமிழ் இளைஞர்களிற்கு பொலிஸ் சேவையில் மேலும் வேலைவாய்ப்பு
  • பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறையில் கைத்தொழில் பேட்டைகள்

போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/205436

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை பிராந்திய மக்களிற்கு நன்மையை குறிப்பிடத்தக்க அபிவிருத்தி திட்டங்களிற்காக முழுமையாக விடுவிக்கப்படும்.

M._A._Sumanthiran.jpg

சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்:   
பலாலியில் உள்ள ஜனாதிபதி மாளிகை முன்பு போய் இப்பவே ஒரு போட்டோ எடுத்து வைக்க வேணும். அதனை முழுமையாக விடுவித்த பின் நம்ம சனத்தின்ரை காதிலை  பூ  வைத்து அறிக்கை விட பிரயோசனப் படும்.

ஆனால்...  என்ன செய்தாலும், சனம் எனக்கு வோட்டு போட மாட்டேன் என்று 
அடம்  பிடிக்கிறதை நினைக்கத்தான் விசராய்  கிடக்குது.   
animiertes-traurig-smilies-bild-0041    animiertes-traurig-smilies-bild-0043    animiertes-traurig-smilies-bild-0017

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

தமிழ் இளைஞர்களிற்கு பொலிஸ் சேவையில் மேலும் வேலைவாய்ப்பு

தமிழ் உயர் அதிகாரிகளை உருவாக்கி மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வையுங்கள் சுதந்திரமாக மக்களுடன் உரையாட விடுங்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.