Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பாலியல் நோய்கள் அதிகரிப்பதாக எச்சரிக்கை

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் கூறினார்.

கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி

“குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.”

15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு பிரதான காரணமாகும்.

பல இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்கள் மூலம் கூட்டாளர்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

எல்லோரும் சமூக ஊடகங்களைப் பற்றி நினைப்பதில்லை, ஆனால் இளைஞர்கள் பல்வேறு உறவுகளை உருவாக்க சில டேட்டிங் பயன்பாடுகள் உள்ளன.

அது மட்டுமல்லாமல், சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர். இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன” என்றார்.

-(3)

 

http://www.samakalam.com/இலங்கையில்-பாலியல்-நோய்க/

 

  • கருத்துக்கள உறவுகள்

அறிகுறியே இல்லாமல் பால்வினை நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், எந்த ஒரு முறையற்ற உறவும் பால்வினை நோய் பரவுதலின் தொடக்கமாக இருக்கும்.

அதே போல் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை முழுமையாக சரி செய்யாவிட்டால் அவர்கள் யாருடன் உறவு கொண்டாலும் நிச்சயம் அது மற்றவர்களுக்கு பரவும்.

பால்வினை நோய்களை எப்படி தடுப்பது?

சிறந்த தற்காப்பு முறை முறையான ஆணுறைகளை பயன்படுத்துவது தான். அதே போல் Comprehensive Sexual education மூலம் 11 வயது ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பால்வினை நோய்கள், கர்ப்பம் தரித்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தேவையற்ற கர்ப்பங்களையும், பால்வினை நோய்கள் பரவுவதையும் தடுக்க முடியும்.

15 வயது முதல் 49 வயது வரையிலான ஆண் பெண் இருபாலரும் பால்வினை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். முறையான பாலியல் கல்வி மூலம் பால்வினை நோய்கள் பரவுவதை நிச்சயம் தடுக்க முடியும்.

இன்றும் உலக அளவில் பெண்களை அதிகம் பாதிக்க கூடியது கர்ப்ப வாய் புற்றுநோய். இந்த நோயினால் வருடத்திற்கு 3 லட்சம் பெண்கள் இறக்கிறார்கள். 5 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். வளரும் நாடுகளில் இது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதனால்11 வயது முதல் 15 வயது பெண் குழந்தைகளுக்கு human papillomavirus தடுப்பூசியை நிச்சயம் போட வேண்டும். இதனால் நோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2025 at 19:45, கிருபன் said:

அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் கூறினார்.

இந்த வயதில் கல்வி முக்கியம் ,ஆனால் கலவிக்கு மனம் ஆசைப்படும் ..இதை புரிந்தவன் வெற்றி பெறுவான்..நல்ல புத்தகத்தை திறவுங்கள் காற்று வரும் கதைவையும் திறவுங்கள் ...கதவுக்கு தாழ்பாள் போடாதீர்கள் 
புத்தன் ஜீ ஆனந்தா🤣

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு -  சுகாதார அமைச்சு 

30 MAR, 2025 | 09:24 AM

image

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர். இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/210580

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2025 at 13:54, putthan said:

இந்த வயதில் கல்வி முக்கியம் ,ஆனால் கலவிக்கு மனம் ஆசைப்படும் ..இதை புரிந்தவன் வெற்றி பெறுவான்..நல்ல புத்தகத்தை திறவுங்கள் காற்று வரும் கதைவையும் திறவுங்கள் ...கதவுக்கு தாழ்பாள் போடாதீர்கள் 
புத்தன் ஜீ ஆனந்தா🤣

எங்கேயோ கேட்ட குரல் .........

அந்த குரல் ரஞ்சிதா மரத்தடியில் ஞானம் பெற்றது போல

புதன் ஜீ ஆனந்தா ரம்சிகா மரத்தடியில் ஞானம் பெற வாழ்த்துகிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
On 30/3/2025 at 01:23, ஏராளன் said:

கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர்.

https://www.virakesari.lk/article/210580

கிடடதட்ட ஒரு குறித்த பெண்ணிடம் இருந்து 5 ஆண்களுக்கு தொற்றியிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 106 பெண்களிடம் இருந்து 718 ஆண்களுக்கு தொற்றி இருக்கிறது எனும் கணக்கின் பிரகாரம்.

( இது கடந்த வருட தோற்று அறிக்கை இதற்கு முன்னைய வருடங்களில் தொற்றுக்குள்ளாறவர்களும் பரப்பி இருப்பார்கள் என்பது எனக்கும் தெரியும் அப்போதைய வருட கணக்கும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்)

முன்பு ஒரு எயிட்ஸ் பற்றிய திரியில் பலகாலம் முன்பு நெடுக்காலபோவான் பெண்கள்தான் கிருமி காவிகள் என்று எழுதி இருந்தார். அதில் அவரை பலரும் திட்டி தீர்த்து இருந்தார்கள் அப்போது எனக்கும் அவரது பெண்களுக்கு எதிரான கருத்துக்களில் உடன்பாடுகள் இருந்ததில்லை. இப்போது பார்த்தால் தலைதான் சரியாக இருந்து இருக்கிறாரோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.