Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் தேசிய இன விடுதலையின் எழுச்சி, புரட்சிக்கு வித்திட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

அறிமுகம் நிலவன் – ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் அறிவுச் சோலையில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள், ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் நடனம் மற்றும் நாடகங்கள் ஊடகவும் கட்டுரைகளின் வாயிலாக தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்ற போராளிக் கலைஞர். 2000 மேல் அரங்கம் கண்ட “சங்கநாதம் “ புகழ் பேபி ஆசிரியரின் மாணவர்கள் இவரும் ஒருவர் தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவர்.

சேயோன்:-  தமிழனின்  மரபுதழுவிய கலை பண்பாடு பற்றி உங்கள் பார்வை ?

நிலவன் :- தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர்கள் உலகம் போற்றும்  அளவிற்கு ஒரு சிறந்த பண்பாட்டைக் கொண்டவர்கள். தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழர்கள் என்பது மானுடத்தை மதிக்கும் இனமாக இருப்பது தான் தமிழுக்கான பெருமை. ‘தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள். உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள் தமிழர்கள். உலக மொழிகளான லத்தீன், லாவோஸ் போன்ற மொழிகள் போல பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மொழி, தமிழ் மொழிஆகும்.

அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஐம்பெரும் காப்பியங்களே. காதலுடன் கூடிய அன்பு, வீரம், விருந்தோம்பல், இயற்கை, மருத்துவம் ௭ன்னும் இனிய நற்சுவைகளினூடே அனைத்திற்கும் பழங்காலத்துப் படைப்பு கண்டவன் தமிழனே. உலகின் உயிர்வளம், இயற்கை வளம், சொல்வளம், போர்த்திறன், செயல் திறன், அரசியல் திறன் போன்றவற்றை தனது காப்பியங்களிலேயே கண்முன் நிறுத்தியவன் பழந்தமிழன்.

தமிழினம் பழமை வாய்ந்த இனம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்ற தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை மிகவும் பழமை வாய்ந்ததும், சிறப்பிற்குரியதுமாகும். தமிழர்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயிரை விடவும் மேலாக நேசிக்கின்றனர். உலகிற்கு வாழக் கற்றுக் கொடுத்த தமிழர்கள், இன்று அவர்கள் வாழும் இடத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பொழுது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேசமாக உருவெடுப்பது தமிழ்த் தேசியத்தின் தார்மீகக் கடமையாகும். அந்த அடக்கு முறைகளுக்கு  எதிரான தெளிவூட்டலை மக்களிற்கு ஏற்படுத்தி, மக்களின் போராட்டத்திற்கான உந்துதல் சக்தியை மக்களிடையே விதைத்து அவர்களை ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில்  தமிழ்மொழி, தமிழினம், தாய்நிலம் என்னும் அடிப்படை கருத்தமைவுக்கு ஏற்ப, எம் அடையாளங்களைக் காத்து, கலையெனும் ஆயுதத்தை தன்னகத்தே கொண்டது தான் கலைபண்பாட்டுக் கழகம் ஆகும்.

kalapanpaddukalam-300x208.png

சேயோன்:-  தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம் எமது தேசியத் தலைவர் மேதகு  வே. பிரபாகரன் அவர்களின் தேரடியான வழி காட்டலுக்குட்பட்டதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய பிரிவுகளில் ஒன்றாக இருந்த தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. இதனால் தான் குறுகிய காலத்துக்குள் பெறுமதியான பலவற்றை கலை பண்பாட்டுக் கழகம் நிறைவேற்றிவிட்டு நிமிர்ந்து நின்றது.

ஈழ விடுதலைப் போராட்டம்  தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர்த் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்கள் முன்னோக்கிய தமிழர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழனாக வாழ்ந்த ௭ம் இனம்  தனித்துவமாக வாழ்ந்த  வரலாற்று வழித்தடத்தில் வீரத்திலும், கலைகளின் வளர்ச்சியிலும், புரட்சிகரமான பண் பாட்டுப் பேணலிலும் முப்பது வருட தசாப்தம் தமிழ் மக்களுக்கான புலிகளின்  பொற்காலம்.

எம் தாயகத்தை  மீட்டெடுக்கும் பயணத்தில் விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பங்களிப்புக் கணிசமானது என எங்கும் பேசவைத்திட எம்மோடு இணைந்த கலைஞர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஓவியர்கள் ௭ன அனைவரும்  விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு ௭ன்பது  மகத்தானது. அவை அனைத்தையும் ௭ழுது கோள் கொண்டு விவரிக்க முடியாது. கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள்  கலைஞர்கள் என்றால் மிகையில்லை.

இயற்கை வளமும் மிகுந்த வனப்பும் கொண்ட  தமிழீழ மண் கலைகளிலும்,  பண்பாட்டிலும் தனித்துவம் மிக்கது. தமிழ் தேசிய உணர்வும் , தமிழ்மொழிப் பற்றும், தமிழர் பண்பாடும் ஒருங்கு கூடி சிறப்புமிக்க வீரவாழ்வு வாழ்ந்த வரலாறு தமிழீழ தேச மண்ணுக்கு மட்டுமே உண்டு.

மொழி என்பது ஒரு தாய்இனத்தின்  விளையும் பயிராகும். அதனால் அம்மொழிக்கு உயிருண்டு, உணர்வுண்டு,அவ் இனத்தின் அடையாளமாய் இருக்கவேண்டிய தேவையுமுண்டு.

 அதன் வளர்ச்சியே இன விடுதலையின் புரட்சி  எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா . என்று தமிழ் இனத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனை நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தது விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்.

இன அழிப்பு என்பது ஆண்டாண்டு காலமாக அதே நிலத்தில் வாழுகின்ற ஒரு பரம்பரை  இனத்தைக் சேர்ந்தவர்களை, இன்னொரு இனம்,சிறுமைப்படுத்தி கொலை செய்வது மாத்திரமல்ல. அவர்களின் இருப்பை, கலாசாரத்தை, வாழ்வியலை, நிலத்தை, நிலம் மீதான உரிமையை இல்லாமல் செய்வதும், இன அழிப்புத்தான்.

ஒரு இனத்தின் இருப்பு என்பது பண்பாடு மொழி,  கலைஇலக்கியம், இசை, நடனம், அரங்கியல், நாட்டுப்புறக்கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம்,  கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, பாரம்பரியஉணவு, கலாச்சாரஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சம்பிரதாய சடங்குகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். என்னும் பல ஒட்டு மொத்த விடயங்களிலும் தங்கியிருக்கிறது .

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை சுழலுக்கு ஏற்ப பல வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறித்து நிற்கின்றது. தமிழர் பண்பாடு காலம் காலமாக பேணப்பட்டு,  மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பினை கொண்டது.

பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும்.

ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்ந்த இலக்கியம் பயன்படுகின்றது. அதனை நாட்டுப் பாடல்களிலும் நாடோடி இலக்கியங்களிலும் பழமொழிகள், முதுமொழிகளிலும் இசையிலும் நாடகத்திலும் நாட்டியத்திலும் செந்தமிழ் – கொடுந்தமிழ் அமைப்பிலும் வளர்ச்சியிலும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கண்டிருப்பீர்கள் ஓவியம், சிற்பம் கட்டிடக் கலை முதலிய கலைகள் முதலியவற்றிலும் தமிழர் பண்பாட்டை காண முடிகின்றது. தமிழர் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறும். தமிழர் பண்பாட்டை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின்கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ௭னவே ௭ங்கிருப்பினும் ௭மது அடையாளங்கள் அழியாமல் பாதுகாப்போம்.

kalaipanpadu-kalakam-1-300x200.jpg

சேயோன்:-  போராட்ட காலத்தில் தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம் பற்றிய முக்கியத்துவம் தொடர்பில்  கூறுங்கள்?

நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தனிநாடு என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி விடுதலைப் போர் நகர்ந்து கொண்டிருந்த வேளையிலும், கலை பாண்பாட்டிற்கு என அதற்குரிய இடத்தில் இனத்தின் வேரான கலைகளும், பண்பாடும் வளர்ந்தன.  தமிழ் இனத் தேசியத் தலைவர்  தமிழர் கலை, பண்பாட்டிற்கு  கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.

தமிழீவிடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில்  கலை கலாசாரப் பிரிவை ஆரம்பித்து அதனூடாக  பண்பாட்டைப் பாதுகாத்தல் மற்றும் கலைகளை மேம்படுத்திட கலை இலக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றிற்கான பொறுப்புக்களை புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமைத்துவத்தினைக்  கொண்டு ஆரம்பித்திருந்தார் .

கலை உணர்வை வெளிப்படுத்துவோர்க்கு  அவ்வுணர்வை ஊட்டும் பெருமையுடன் கூடிய தகுதிநிலை ௭ன்றும் உரித்தானது. தமிழர்களின் பெருமைகள்,மற்றும் கலைகளின் பங்கும்  அந்தக் கலைகள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சிறப்புகளை கொண்டது. மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும்  கலை கலாசாரப் பணிகள் ஊக்குவிப்பு பிரிவுகளாக மகளீரையும் இணைத்து முக்கியமாக கலாசார துறைக்கு உரிய அனைத்து பணிகளையும் இன விடுதலை நோக்குடன் தனித்துவமாக கலைஞர்களையும், போராளிகளையும், பார்வையாளர்களையும் ஒருங்கிணைக்கின்ற வகையில் பாரியளவு ஈடுபாடு கொண்டிருந்தனர்.

விடுதலைப்போராட்டத்தில் விடுதலை சார்ந்த கருத்தியல்களை மக்களின் பக்கம் நின்று சொன்னது  இன விடுதலைக்கான கலைகளே ஆகும்.  கூத்தும்,  வீதி நாடகங்களும்  எழுச்சிப் பாடல்களும்  ஒவ்வொரு தமிழனின் வீட்டுப் படலையையும் தட்டியது. அவர்களின் முற்றத்தில் நின்றுகொண்டு தமிழர்களின்  சுயநிர்ணய உரிமை பற்றி பேசியது.

மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக , கதைகள், சிறுகதைகள்,நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் மொழிசார் கலையும் நுண்கலை, பயன்கலை, பருண்மக்கலை, கவின் கலை, நிகழ்த்து கலைகள் என மொழிசாரா கலைகளும் தம் வடிவங்களில் வேறுபட்டிருப்பினும் மனிதனது இயங்கியலும் அதனுடன் தொடர்புடைய அவனது வாழ்வியலுமே தமிழ் தேசியப் படைப்புக்களை தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன.

ஒருகாலத்தில் கலைகள் வெறுமனே மகிழ்வளிப்புக்களுக்கு மட்டுமே என்ற கருத்தியல் நிலவி வந்திருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளால் எமக்கேயான நாட்டின் எல்லையை நிர்ணயிப்பதற்கு வீரர்களை அனுப்பியது.  எழுத்துக்கள் இலக்கியப்போர்கள் புரிந்தன. ஒவ்வொரு சமரின் வெற்றியிலும் எழுச்சி பாடல்கள் ஓங்கி ஒலித்தன.

தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றி நின்ற கலைகள் இந்திய மற்றும் பௌத்த சிங்களப் ஏகாதிபத்தியத்தின்  இராணுவத்தினால்  தமிழர் தாய் நிலத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து கொண்டிருந்த வேளையில் சிறு அணியாக முன்னெடுத்து வந்த தமிழீழ கலை கலாச்சாரப் பிரிவுகள் 1989 தொடர் 1990களின் பின்னாளில் ஆல மரமாய்  பல விழுதெறிந்து  தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் மாபெரும் வீச்சோடு தனது இனவிடுதலைப் பயணத்தை தொடர்ந்தது.

இக்கலைகளின் மைய மற்றும் பாடுபொருளாக இருப்பது புராண, இதிகாசக் கதைகளே. கிராமங்கள் தோறும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இக்கலைகள் எடுத்துரைத்தன. கண்ணகி, கோவலன் கதைகளை கற்றுக் கொடுத்தது. சிந்துநடைக் கூத்துக்களும் மக்கள் வாழ்வியலுடன் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. போர்க்கால வரலாற்றை காத்தவராயன் கூத்தாகவும் சமூகத்தின் பண்பாட்டை வீதிதோறும் எடுத்துரைத்தது. எளிமையான நடையாலும், பேச்சு வழக்கினாலும் கதைகளை புரியவைத்து மக்களை ரசிக்க வைத்தது.

இன விடுதலைக்கான பரப்புரைகளையும், உண்மையையும், நீதியையும், தர்மத்தையும், நேர்மையையும், பலவித திறமைகளையும் தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கட்டிக்காத்த நாட்டுப்புற ஆட்டக்கலைகள் பறையிசை, தெருக்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம்,, கும்மியாட்டம் போன்ற பரம்பரைக் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் மாவட்டங்கள்,  பிரதேசங்கள் தோறும் நிகழ்ச்சிகளில் பல பண்பாட்டுடன் கூடிய  அரிய கலைகளைப் படைப்புக்கள்  நமது நாட்டுப்புற கலைகள் நீதியை முன்னெடுத்துச் சென்று போராட்ட வரலாற்றைக்  கற்றுக் கொடுக்கும் ஆசானாக இக்கலைகள் விளங்கின.

கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் நுண்கலைக் கல்லூரிகள் இருந்தன. அங்கு ஆடல், பாடற் பயிற்சிகளும் இசைக் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியும், ‘புலிகளின் குரல்’ – வானொலியும் கிளிநொச்சியில் சிறப்பாக இயங்கின. தமிழின உணர்வைத் தட்டி எழுப்புகின்ற இனிய தமிழ்ப்பாடல்களும், ஆடல்களும், நேர்காணல்களும் ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டன. அறம் நீதி தவறாத எம் தேசியத் தலைவனை  உலகிற்கு எடுத்துக் காட்டியது. அறத்தை வலியுறுத்தியது. விருந்தோம்பலை வீடுதோறும் கொண்டுபோய்ச்  சேர்த்தது. இன விடுதலையையும் அரசியலையும் இன அழிப்பு வடிவங்களையும் கற்றுக் கொடுத்து தாய் நாட்டின் மேல் கொண்ட காதலையும், வீரத்தையும் சுட்டிக்காட்டி. வாழ்க்கை வரலாற்றினை எடுத்து இயம்பியது. தாய்நாட்டின் காவல் தெய்வத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. வீரத்தில் சிறந்த போராளிகளை உருவாக்கி  உலகறியச் செய்ததும் இந்த கலைபண்பட்டுக் கழகமே ஆகும்.

kk-300x295.jpg

சேயோன்:- இன விடுதலைப் போராட்டத்திற்கு உரம் ஏற்றியதில் வீதி நாடகங்களின் பங்களிப்பு எவ்வாறு காணபட்டது ?

நிலவன் :- கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம். அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம் பிடித்து விடுவதும் தான் வழமை அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் அரசியல் உணர்வும், பரந்துபட்ட சிந்தனையும் அமைந்த நாடகங்கள் ஏராளம். விடுதலைப் போராட்டக் காலத்தில் இவை வீறுணர்ச்சியை ஊட்டின. வீர வரலாற்றையும் விடுதலை உணர்வையும் பேசுபொருளாக்கியது.

நாடகம், தமிழ்மக்களின் உழைப்போடும் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றித்து வளர்ந்தது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் மக்கள்   தம் உணர்வுகளோடு கண்டு களித்தனர். உள்ளத்தில் உணர்ச்சியைத் தூண்டி ஒலி, ஒளி இணைவில் காட்சிப்படுத்திக் காட்டுவது கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாவது மட்டுமல்ல பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் இன்புற்றனர். மனித வாழ்வை மனிதர்கள்முன் மனிதர்களால் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கவின்கலை நாடகம். தமிழர்கள் ஊரின் நடுவே, தேரோடும் வீதியிலும் தெருவோரங்களிலும்  அரங்குகளை அமைத்தனர். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளை உடல் வழி, குரல்வழி மூலமாக வெளிப்படுத்தி நடிப்பின் மூலம் மக்களுக்கான அரங்காக

வீதி நாடகம் என்பது நவீன காலத்தில் (1995 இற்குப்பின்) உருவானது. வீதியில் சென்று செய்வது எல்லாமே வீதி நாடகம் அல்ல. அதற்கென்று ஒரு அரசியல் இருக்கிறது. ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்று பின்னணி இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். தமிழீழ தேசம் ௭ங்கும் ௭ம் இனத்திற்கு நடந்த அவலங்களை தெருவில் போய் நாடகமாக போடுவது, நாட்டைக் காக்க பிரச்சாரம் செய்வது, சமூக மாற்றத்திற்கான ஒரு உந்துதலை உருவாக்குவது என தேச விடுதலைக்காக வீதி நாடகங்கள், மக்கள் மத்தியில் ஒரு செய்தியை சொல்வதற்கும் மக்களுக்கு அரசியல் தெளிவுடன் கூடிய அறிவுரை சொல்வதற்கும் என்று ஒரு ஊடகமாக இருந்து வந்துள்ளது .

வீதிநாடகம் என்பது மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை ஆட்சியாளர்களுக்கு, அதிகார மையங்களுக்கு தெரிவித்து, மக்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு வேலை. மக்களுடன் பேசி, மக்களை வழிப்படுத்தி மக்களுக்கு இன விடுதலை  உணர்வை புகட்டி விழிப்புணர்வை ஊட்டுகிற  எல்லோருக்குமான கலை வடிவமாக வீதி நாடகங்களை கலை பண்பாட்டுக் கழகத்தினர் முன்னெடுத்தார்கள்.

தாயகத்தில் நடை பெற்ற சிறந்த ஒரு கலை வடிவம் தான்  இந்த வீதிநாடகம். நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம், எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு. உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் பல நூற்றுக் கணக்கான  மேடைகள் கண்ட வீதிநாடங்களால் “ஜெயசிக்குறு சண்டியன்” வீதி நாடகம்   1000 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டது. அதே போல் “வெள்ளைப்புறா சிவப்பானதேன்” வீதி நாடகம் 500 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டது. இது போன்று பல வீதி நாடகங்கள்  அரங்கம் கண்டது. இதில் குடும்பத்துடன் விடுதலைக்கான கலைப் பணியைச் செய்த  எமது தேசியக் கலைஞர்கள் இரவு பகல் மற்றும் வெய்யில் மழை பாராது மேலும் அவர்கள் செய்த அர்ப்பணிப்புகளை  இலகுவில் சொல்லிவிட முடியாது.

யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் நிறையப் பொறுப்புக்கள் போராளிக் கலைஞர்களில் தங்கிவிட்டது. என்னதான்  நேரமில்லாப் பிரச்சனை,பொருளாதாரம், மற்றும் ஆளணி நெருக்கடிகள் இருந்தாலும் எழுச்சிப்பாடல்கள் வெளிவருவது நிற்கவேயில்லை. அதுதான் போராட்டத்தை வாழ்வித்தது. அதுதான் முக்கிய பரப்புரை ஆயுதம். இதற்கிடையில் இசைத்தட்டு வெளியிடாமல் வீதி நாடகங்களாக நிறையப் பாடல்கள் மக்கள் மத்தியில் உருவாயின. பழைய நாட்டுப்புற மெட்டுக்கள் வீதி நாடகங்கள் வழியாக மீண்டும் மக்களிடம் சென்றன.  கவிஞர்கள், பாடகர்கள் என போராளிக் கலைஞர்கள் பலர் இதுவரை களத்தில் வீரச்சாவடைந்து விட்டார்கள். இவர்களில் சிலர் கரும்புலிகள்.

தமிழீழ இன  விடுதலைப் போருக்கான விடுதலைக் கலைப் பயணத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும். இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும்  இருக்க வேண்டும்.

jj-262x300.jpg

சேயோன்:-  தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் இன விடுதலையினை பறை சாற்றிய  சங்கநாதம் நிகழ்வு பற்றி கூறுங்கள் ?

நிலவன் :- தமிழீழக்  கலை பண்பாட்டுக் கழக ஆதரவில் கலையரசி பேபி வேலுப்பிள்ளை அவர்களினால் 1994 ம் ஆண்டு உருவாக்கப் பட்டதே சங்கநாதம். கலையரசி   பேபி ஆசிரியரின்   நெறியாள்கையில் தாயக எழுச்சிப் பாடல்களுக்கு சிறப்புமிக்க தொகுப்பாளரின் வர்ணனையுடனும் , பாடலின் கருத்தமைவுக்கு ஏற்ப காட்சிப்படுத்தலுடனும், பாத்திரத்திற்கேற்ப உடை, ஒப்பனை மாற்றங்களுடனும் பலதிறம் கொண்ட தேசியக் கலைஞர்களும், போராளிக் கலைஞர்களும்  பங்காற்றி அரங்கம் கண்ட நிகழ்வணியே சங்கநாதம்.

சங்கநாதமானது தமிழர் தாயக நிலப்பரப் பெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிறந்த கலைக்குழுவாகத் திகழ்ந்தது. இவர்களின் கலைப்படைப்பானது, தமிழீழ வரலாற்றில் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி மனதை எழுச்சி கொள்ளவைக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருந்தது . இவர்களின்  ஆற்றுகை நிகழ்வு  எந்த இடத்தில் நிகழ்ந்தாலும் அங்கு மக்கள் காட்டாறு வெள்ளமெனத் திரளும் அளவுக்கு ஆளுமை மிக்க ஒரு கலைப்படைப்பாகவே இருந்தது. சங்கநாத ஆடல் வேள்வி தேசிய எழுச்சி உணர்வுடன் 2000 இற்கும் அதிகமான அரங்குகளைக் கண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசியக் கலைஞர்களின் அயராத உழைப்பும், தரம் வாய்ந்த நடிப்பும், பாத்திரத்திற்கேற்றவாறான  நடிகர்களின் தெரிவும், நெறியாளரின் சிறந்த  நெறிப்படுத்தலுமே சங்கநாதத்தின் தனிப்பெரும் சிறப்புகளாக அமைந்தன. கலைப்படைப்பின் வளர்ச்சிக்காக பல பரிசில்களையும் சான்றிதழ்களையும், தேசியத்தின் தங்க விருதுகளையும் பெற்றுக் கொண்டார்கள். பல தேசியக் கலைஞர்கள் பல்துறை ஆளுமைகளைக் கொண்ட,  வரலாற்றுக் காவியக் காலத்தின் சிறந்த கலைஞர்களாக இன்றும் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

tt-2-300x200.jpg

சேயோன்:-  விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில் எழுச்சியினை உருவாக்கியதில் எழுச்சிப் பாடல்களின் பங்கு இருந்துள்ளது பற்றிக் கூறுங்கள் ?

நிலவன் :- ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே எழுச்சிப் பாடல்களும் வரத் தொடங்கிவிட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில் எழுச்சியினையும், பல்வேறுபட்ட மாற்றங்களையும்,ஏற்படுத்திய பெருமை தமிழீழ எழுச்சிப் பாடல்களாக அன்று வீசிய காற்று எம் தேசமெங்கும் எழுச்சிக் காற்றாக நிமிர்ந்தெழுந்தது. கலை பண்பாட்டுப் கழகத்தின் பணியில்   போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன. மிகமிக நேர்த்தியான இசையமைப்புடனும் சிறந்த குரல் வளத்துடனும் அருமையான மெட்டுக்களுடனும் நிறையப் பாடல்களை கலைபண்பாட்டுக் கழகம் வெளியீடு செய்து வந்தது.

இதுவரை எழுச்சிப் பாடல்களாக வெளிவந்த மூவாயிரக் கணக்கான பாடல்களில் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்ட பாடல்கள் ஏராளம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த ஒருவனுக்கு / ஒருத்திக்கு எழுச்சிப் பாடல்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. போராட்டத்தின் மிகமிக முக்கியமான ஆயுதங்களிலொன்று இந்தப் பாடல்கள்.

எமது போராட்டத்தின் தொடக்கப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன. அப்போது திரையிசையில் முன்னணியிலிருந்த பாடகர், பாடகிகளைக் கொண்டே இவ்விசைத் தட்டுக்கள் வெளிவந்தன. புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் ஆகியோரோடு பல கவிஞர்கள் அப் பாடல்களை எழுதியிருந்தார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் தாயகத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன.

kalaipanpaddu-kalakam2-300x179.jpg

சேயோன்:-  தமிழீழ இசைக்குழுவின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- தமிழீழ இசைக்குழு மீன்பாடும் தேன் நாடாம் மட்டுநகரில் உருவாக்கம் பெற்று. தமிழீழத்தின்  நிலப்பரப்பெங்கும் தமது இசைநிகழ்வை நடாத்தினார்கள். விடியலுக்காக தம்முயிர் தந்த மாவீரர்களின் ஈகங்களை, போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் – தியாகங்களை, மக்களின் போராட்ட பங்களிப்புக்களை, இவர்கள் இசையூற்றில் செதுக்கி உங்கள் காதோரம்  தவழ்ந்த  போராளிகளின், தமிழீழக் கலைஞர்களின் உழைப்பினால் வார்த்தெடுக்கப்பட்ட தமிழீழ எழுச்சிப் பாடல்களை வரலாற்று தேவை உணர்ந்து உலகம் முழுவதும் சிதறுண்டு வாழும் எம் உறவுகளின் வாசல் நோக்கி தமிழீழ மண்ணின் வீரத்துடன் தேசக்காற்றாய் வீசச்செய்தார்கள்.

விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள் எனப்படுபவை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் அல்லது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி வெளியிடப்படும் ஈழப்போராட்ட பாடல்கள் ஆகும். முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்ய வேண்டிய நிலை. இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுத்தார்கள்.  அதிகமான பாடல்கள் வெளிவந்ததுடன் மிகமிக அருமையான பாடல்களும்  வெளிவந்தன. அவற்றுள் மென்மையான மெட்டுக்களுடன் உணர்வுபூர்வமான பாடல்களும்அமைந்தன.

இப்பாடல்கள்பலதரப்பட்ட வடிவங்களைக் கொண்டன. கள வெற்றியைக் கொண்டாடும் பாடல்கள், வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் பாடல்கள், படுகொலைகளை நினைவுகூரும் பாடல்கள், இடப்பெயர்வுச் சோகங்களைச் சொல்லும் பாடல்கள், ௭திரிக்கு அறைகூவல் விடுக்கும் பாடல்கள் என்று அனைத்துக் கூறுகளுமுண்டு. பொப்பிசைப் பாடல்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன. ஈழத்தின் இயற்கை வனப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன.

k-300x169.jpg

ஈழத்து எழுச்சிப் பாடல்களில் பங்காற்றிய கலைஞர்களில் பெரும்பான்மையானோர்  தொழில் முறைக்காக இதில் ஈடுபட்டவர்களல்லர். இவர்களில் நிறையப்பேர் போராளிகள். பாடல் எழுதுபவன், இசையமைப்பவன், பாடுபவன் என்று அனைவருமே போராளிகளாக இருந்து பங்காற்றிய நிறையப் பாடல்களுள்ளன. இவற்றில் பங்குகொண்ட பொதுமக்கள் கூட தன்னலமற்ற மக்கட்போராளிகளே. இந்தக்கூறுகள் இயல்பாகவே இப்பாடல்களுக்கான வலுவை அதிகரிக்கின்றன.

1990 களில் தமிழீழத்தில் இருந்தே இப்பாடல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழீழ தேசியக் கவிஞரான புதுவை இரத்தினதுரை, மாமனிதர் கவிஞர் நாவண்ணன் , மேஜர் சிட்டு, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள் போன்ற கவிஞர்களின் உருவாக்கத்திலும் எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு , ஜெயா சுகுமார், வசீகரன்,செங்கதிர் கணேஸ்,குட்டிக்கண்ணன், திருமலைச்சந்திரன், நிரோஜன், திருமதி பார்வதி சிவபாதம், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா, கானகி, மாங்கனி, பிரியதர்சினி போன்ற இன்னும் பல  பாடகர்களின் பங்களிப்புடனும் ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்தினர் இப்பாடல்களில் பெரும்பாலானவற்றை இசையமைத்து வெளியிட்டுள்ளனர்.

இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் பொருட்டு   தமிழீழ மகளீர் கலை பண்பாட்டுக்கழகத்தினரால், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் வந்துதித்த  தமிழீழ மகளீர் இசைக்குழு அனைத்து மகளீர் படையணிகளிலுமுள்ள இசைத்துறையில் ஆர்வமான போராளிகளை இனங்கண்டு  அவர்கள்குறுகிய காலத்தில் தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் ஒழுங்கமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டு 160 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டு வந்ததுடன், அந்தந்த மகளீர் படையணிகளுக்கும் சென்று தங்களுடைய இசைத்திறமையைக் காண்பித்து இசை நிகழ்வுகளையும் நடாத்தி அவர்களையும் மகிழ்வித்தனர்

tt-1-300x195.jpg

தமிழீழ  கலைபண்பாட்டுக்கழக ஆதரவில் கலையரசி பேபி வேலுப்பிள்ளை அவர்களினால் 1994 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே சங்கநாதம். பேபி வேலுப்பிள்ளை அவர்களின் நெறியாள்கையில் தாயக எழுச்சிப் பாடல்களுக்கு சிறப்புமிக்க தொகுப்பாளரின் வர்ணனையுடனும் , பாடலின் கருத்தமைவுக்கு ஏற்ப காட்சிப்படுத்தலுடனும், பாத்திரத்திற்கேற்ப உடை, ஒப்பனை மாற்றங்களுடனும் பலதிறம் கொண்ட தேசியக் கலைஞர்களும் போராளிக் கலைஞர்களும்  பங்காற்றி அரங்கம் கண்ட நிகழ்வணியே சங்கநாதம்.

சங்கநாதமானது தமிழர் தாயக நிலப்பரப் பெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிறந்த கலைக்குழுவாகத் திகழ்ந்தது. இவர்களின் கலைப்படைப்பானது, தமிழீழ வரலாற்றில் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி மனதை எழுச்சி கொள்ளவைக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருந்தது . இவர்களின்  ஆற்றுகை நிகழ்வு  எந்த இடத்தில் நிகழ்ந்தாலும் அங்கு மக்கள் காட்டாறு வெள்ளமெனத் திரளும் அளவுக்கு ஆளுமை மிக்க ஒரு கலைப்படைப்பாகவே இருந்தது. சங்கநாத ஆடல் வேள்வி தேசிய எழுச்சி உணர்வுடன் 2000 இற்கும் அதிகமான அரங்குகளைக் கண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசியக் கலைஞர்களின் அயராத உழைப்பும், தரம் வாய்ந்த நடிப்பும், பாத்திரத்திற்கேற்றவாறான  நடிகர்களின் தெரிவும், நெறியாளரின் சிறந்த  நெறிப்படுத்தலுமே சங்கநாதத்தின் தனிப்பெரும் சிறப்புகளாக அமைந்தன. கலைப்படைப்பின் வளர்ச்சிக்காக பல பரிசில்களையும் சான்றிதழ்களையும், தேசியத்தின் தங்க விருதுகளையும் பெற்றுக் கொண்டார்கள். பல தேசியக் கலைஞர்கள் பல்துறை ஆளுமைகளைக் கொண்ட,  வரலாற்றுக் காவிய காலத்தின் சிறந்த கலைஞர்களாக இன்றும் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

j-221x300.jpg

சேயோன்:-  தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலத்தில் வெளிச்சம் இதழின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது?

நிலவன் :- “வெளிச்சம் இதழ்” தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. 1990களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலத்திலிருந்து இந்த இதழ் வெளியானது.

ஈழத்தில் இருந்து வெளியான ஒரு காத்திரமான இதழாக இந்த இதழ் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளது. தரமான சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் தாங்கி வெளிவந்ததோடு தமிழீழ விடுதலை போராட்டம், போராளிகள் நினைவுப் பகிர்வுகள் என்பனவற்றை தாங்கி வெளியானது. படைப்புகளின் கருப்பொருள் பெரும்பாலும் போருடன் தொடர்பு கொண்டதாக அமைந்தது.

தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளைத் தாங்கிய வண்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது ‘வெளிச்சம்’ இதழ். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினாற் பிரசுரிக்கப்பட்டு வந்த இந்தக் கலை இலக்கிய ஏட்டிற்குத் திரு.கருணாகரன் அவர்கள் ஆசிரியராகவும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர்.

இந்த இதழின் வருகை தமிழ் மக்கள் இடையே ஒரு விடுதலை எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த இதழ் வாயிலாக வெளிவந்த பல படைப்பாளிகள் இன்று சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். அன்றைய சூழலில் அரசியல் வேலைப் பழுவுடன் எழுத்தாளர்கள் பத்தி எழுத்துகளை எழுதுவது மிகவும் சிரமமாக இருந்த காலத்திலும்  புதுவை இரத்தினதுரை அவர்களின் அன்புத் தொல்லைக்கும் அழுத்தத்திற்கும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆகவே, வெளிச்சத்திற்கு எழுதுவதெனத் தீர்மானித்தே பலர் எழுத ஆரம்பித்தார்கள் .

ஆயினும் எதை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது. இளைஞர் பரம்பரையை – குறிப்பாக மாணவ சமூகத்தைப் புதிதாக, புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஏதாவது எழுதுங்கள் என்று பணித்தார்.  முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திருத்தியமைத்து, செப்பனிட்டு, சிலவற்றை விரிவாக்கம் செய்து இத்தொகுதியில் மறுபிரசுரம் செய்கிறார்.

இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை. அரசியல், சமூகவியல், உளவியல், பொருளியல், மெய்யியல், வரலாற்றியல், மானிடவியல் போன்ற பல்வேறு அறிவியற் பரப்புக்களை இவை ஊடுருவி நிற்கின்றன. இவ் விபரணங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் மனிதன். ஆகவேதான் மனிதன் பற்றியும், மனித மனம் பற்றியும், மனித உணர்வு பற்றியும், மனிதத்துவம் பற்றியும், மனித வரலாறு பற்றியும், மனித விடுதலை பற்றியும், ஆழமான விசாரணைகள் செய்த சிந்தனையாளர்கள் சிலரின் புதுமையான பார்வைகளை இக் கட்டுரைகள் வாயிலாக அறிமுகம் செய்தார்கள் . இந்த எழுத்துக்கள் யாரையாவது புதிதாகச் சிந்திக்கத் தூண்டும் என்ற நம்பிக்கையினையும்  கொண்டிருந்தது .

அன்றைய போர்ச் சூழலில், அந்த நெருக்கடியான கால கட்டத்தில் எழுதத் தூண்டிய விடயங்களைக் கணினியில் அச்சடித்து, பக்கங்களை கணினியில் வடிவமைத்து, மிகவும் பொறுமையுடன் பலமணி நேரத்தை எழுத்துப் பிழை பார்ப்பதில் செலவிட்டு அரும்பணி ஆற்றிய முழுமையான உருவாக்கத்திற்காக உழைத்தார். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், “வாசல் ஒவ்வொன்றும்” போன்ற சிறுகதைத் தொகுப்புக்களும் “செம்மணி” போன்ற கவிதைத் தொகுப்புக்களும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியீடு செய்த அதே வேளை வெளிவந்த “வெளிச்சம்” இதழும்  கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடுகளில் மிக முக்கியமானதாகும்

சேயோன்:-  பொருளாதாரத் தடையினை எதிர்கொள்ளும் நிலையிலும் அறத்தைப் பற்றியே போர்கால கலை இலக்கியங்கள் பேசியிருக்கின்றன அவை பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- “இலங்கை நாட்டுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் தமிழ் மக்கள் தமது தாயகம், தேசியம், தன்னாட்சி, என்ற அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து நகர்ந்த, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின்  பலத்த அழிவையும் இழப்பையும் சந்தித்தபோதும், அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் தேவையையும் வலியுறுத்தியே எங்கள் போராட்டம் காணப்பட்டது.

1990ஆம் ஆண்டு  விடுதலைப் புலிகளின் போராட்டம்  வீச்சுடன் எழுச்சியடைகின்ற போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக அல்லது போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமித்திருந்தன. தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலை கானங்களை இசைக்கும் அவ்வேளையில் ஏராளமான மக்கள் கூடுவர். மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு அன்று இருந்தது. அக்காலகட்டம், பொருளாதாரத் தடை கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்டிய வேளை  மேடை ஒழுங்கு நிகழ்வுகள் ௭ல்லாம் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக் குழுக்களோ, பெரிய மேடை நிகழ்வுகளோ நடாத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்படும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.

மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன. அப்போது தான்

இதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை.

செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது  காண்போர், கேட்போர் அல்லது படிப்போர் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி  மேலும் மேலும் காணுமாறும் கேட்குமாறும் படிக்குமாறும் ஓர் ஆர்வத்தைத் தூண்டி, இன விடுதலையின் முக்கியத்துவத்தினையும் , தேவையினையும் மக்கள் மனங்களில் விதைத்தவர்களும் அதை அறுவடை செய்வதற்கு மக்களைத் தயார்ப் படுத்தியவர்களும் பெரும்பங்கு வகித்தவர்கள். போராளிக் கலைஞர்கள். தமிழீழ இன விடுதலைப் போராட்டத்தின் வழியாக அறத்தையே பெருக்கிப் பேரிலக்கியங்கள் அனைத்தும் பெரும் அறப்பிரச்சார ஆக்கங்களே. போர்கால இலக்கியங்களும் அறத்தைப்பற்றியே பேசுகின்றன .

மின்சாரமோ. தொழில்நுட்ப  வசதிகளோ   எதுவும்   இல்லாத   நிலையிலும்   தமிழீழ   மக்களின்   போராட்ட   உணர்வுகளை    வெளிப்படுத்தும்   வீடியோத்   திரைப் படங்கள்   தமிழீழத்தில்   தயாரிக்கப்பட்டன.  இத்திரைப்படங்கள்   தமிழீழக்  கலைஞர்களின்   திறமைகளை   வெளிக்  கொணர உதவியது .  மக்களின்  போராட்ட  உணர்வுகளை  மேலும் வளர்க்கவும்  உதவியது.

புலம்பெயர்ந்து  வாழும்  நம்  மக்களிடையேயும்  இவ்வீடியோத்   திரைப்படங்கள்   பெரும்   வரவேற்பைப்   பெறத்   தொடங்கின. திரைப்படங்கள்  வெளிப்படுத்தும்  தாய் மண்ணின்   போராட்ட   நிகழ்வுகளும்,   மக்களின்  உறுதியான   போராட்ட  பங்களிப்பும்   புலம்பெயர்ந்து   வாழும்    மக்களிடையே   புத்துணர்ச்சியையும்     புதுத்தென்பையும்   ஏற்படுத்தியமை குறிப்பிடத்க்கது.

mm-300x195.jpg

 சேயோன்:-   தமிழீழ விடுதலையின் எழுச்சியில் போராளிக் கலைஞர்கள் பங்கு பற்றி கூறுங்கள்?

நிலவன் :- தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாகப் பல்வேறு கலைப் படைப்புக்களிலும் களத்திலும் போராளிக் கலைஞர்களின் தேசப் பணி ௭ன்பது மிகவும் சிறப்புடையது. எமது தாயக விடுதலையின் ஆரம்பம் முதல் 2009 மே முள்ளிவாய்க்கால் வரை தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைஞர்கள் மற்றும் போராளிக் கலைஞர்களின் கலைப்படைப்புகள் அதிமுக்கிய எழுச்சிக் கருவியாக இருந்துள்ளது என்றால் அது மிகையாகாத உயரிய அர்ப்பணிப்பாகும் .

ஓர் இனத்தின் விடுதலைப் போரில் கலையும் ஒரு போர்க் கருவியே என்பதனை உணர்ந்து தம்மைத் தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகத்துடன் இணைத்து விடுதலைக்கு உரமூட்டிய இக் கலைஞர்கள் வரிசையிலே ௭மது விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்த போராளிக் கலைஞர்கள் பலரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். அவர்களின் அந்த மீள முடியா நினைவுகளை கனத்த இதயத்துடன் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

புறநானூற்றை விஞ்சிய வீரம் படைத்த போராளிக்  கவிஞர்களின் படைப்புக்கள் வரலாற்றின் பக்கங்களில் முழுமையாகப் பதியப் படாவிடினும் களமாடி வீரச்சாவடைந்த கலைஞர்களை உலகம் ஒருபோதும் மறவாது. போர்க்களக் கலை இலக்கியப் படைப்புக்களின் பெருமைக்கு  அவர்களின் படைப்புகளே சாட்சியங்களாக பகிர்கின்றன.

விடுதலை வேட்கைமிகு கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்கள் பௌத்த சிங்கள இனவாத  இன அழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்து  உயிருக்குப் போராடும் நிலையிலும் நாம் வாழவேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டவர்களாகவும் தமது மனோ தைரியத்தையும் விடுதலைவேட்கையையும் கைவிடாத வீர உணர்வும் தைரியமும் மிக்கவர்களாகவும் தம்மை இனங் காட்டுவதோடு  தமது சுயத்தையும் நம்பிக்கையையும் இழக்காதவர்களாகவும் போராளிக் கலைஞர்கள் மிளிர்கின்றார்கள்.

இசையினால் எமது உணர்வைத் துடித்தெழ வைத்த இக் கலைஞர்களின் விடுதலை கானங்கள் என்றும் எமது மண்ணின் விடுதலைக்கான கதவுகளை அசைக்கும் என்ற நம்பிக்கையுடனும், எமது தேசம் விடுதலை பெற நாமும் அயராது உழைப்போம் என்ற உறுதியுடனும் செயற்படுவோம்

i-1-300x300.jpg

 சேயோன்:-   விடுதலைப்  போராட்டத்தில்  தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பங்கு பற்றி கூறுங்கள் ?

நிலவன் :- தமிழீழ  விடுதலைப்  போராட்டம்  முனைப்புப்  பெற்ற ஆரம்ப  காலகட்டங்களில், ஆற்றுகைத்தளம், அரங்கக் கலை எனும் வடிவத்தையும் தாண்டி இன்று திரைக்குள் நின்று பேச ஆரம்பித்துள்ளது. கால மாற்றம், நவீன உலகம், சினிமாவின் தாக்கம், தொலைக்காட்சியின் வரவுகளில்  கலைகளையும், கலைஞர்களையும், கதைக் கருவினையும் கட்டிக்காத்து. அன்றைய நிதர்சனப் படைப்புக்கள் எஞ்சியுள்ள காண்பிய ஆவணங்களாகவும் வரலாற்றைச் சொல்லிநிற்கும் படைப்புக்களாகியும் விட்டன.

1986-1987  காலப்பகுதிகள்  வரை  போராட்ட  வடிவங்களும்  விளக்கங்களும் மக்களூடே  செலுத்தப்படுவதற்கும். மக்களை  போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதற்கும்.  கருத்தரங்குகள்.  வீதியோர  நாடகங்கள் (தெருக்கூத்து) நாடகங்கள்  போன்ற  ஊடகங்கள்  பயன் படுத்தப்பட்டன. காலப்போக்கில்  மக்கள்  தென்னிந்திய ஒளிப்பதிவு  படங்கள் மீது  அதிக நாட்டம் கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில்  எமது போராட்ட  சிந்தனைகளை மக்கள்  மனதில் பதிய வைப்பதற்கு  நாமும்  அவ்வகையான ஒரு  ஊடகத்தை  அதாவது  ஒளிப்பதிவு படம் என்ற ஊடகத்தை  பயன்படுத்த வேண்டிய  அவசியம் ஏற்பட்டது. இதன் ஆரம்ப கட்டமாக அரியலைப்  பிரதேசத்தில்  முதன் முதலாக ஒரு போராட்ட சிந்தனையூட்டமுடைய ஒரு திரைப்படம்  தயாரிக்கும்  வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்களப் படப்பிடிப்பு பிரிவினால் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்யும் பல நிகழ்படங்களாகும். இவ்வாறான பல நேரடிக் காட்சிகள் அமையப்பெற்று பின்னர் கோப்புக் காட்சிகளுடன் எமது மண்ணின் கதை … மக்களின் கதை.. விடுதலைப்போரை  நிதர்சனம் நிறுவனத்தினர் பல குறும்படங்களையும் முழு நீளத்திரைப்படங்களையும்  தயாரித்தார்கள்.  இதில் பல போராளிக் கலைஞர்களினதும், தேசியக் கலைஞர்களினதும் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அந்த வகையிலே புதுவை இரத்தினதுரை அவர்கள் தமிழீழத்திரைப்படங்களுக்குப் பாடல்களும், படங்களுக்கான தணிக்கை  தொடர்பான செயற்பாடுகளையும், ஒளிவீச்சில் கவிதைகளை ௭ழுதி  கவியரங்கங்களுக்கு தலமை தாங்கி, நிகழ்வுகளை நெறிப்படுத்தி, குறும்பட முழு நீளத்திரைப்படப் பாடல்கள் ௭ழுதி,மற்றும் மாவீரர்கள் நமது மண்ணின் அவலங்களை  நமது  மக்களின் அல்லல்களை ஆற்றல் மிகு  கவி இலக்கியங்கள் ஊடாகவும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தார்.ஆயுத போராட்ட நிகழ்வுகள் பற்றியும்,  இராணுவ அடக்கு முறைகள் பற்றியும், தெளிவாக எடுத்துக் காட்டி  ஒளிவீச்சு முலம்  வெளிப்படுத்தினார். இதனால் மக்களிடையேயும்  குறும்படங்கள் மற்றும்  முழு நீளத்திரைப் படங்கள்   பெரும்   வரவேற்பைப்   பெறத்   தொடங்கின. திரைப்படங்கள்  வெளிப்படுத்தும்  தாய் மண்ணின்   போராட்ட   நிகழ்வுகளும்,   மக்களின்  உறுதியான   போராட்ட  பங்களிப்பும்  மக்களிடையே   புத்துணர்ச்சியையும்     புதுத்தென்பையும்   ஏற்படுத்திய பெருமை இரத்தினதுரைக்கே ௭ன்பது குறிப்பிடத் தக்கது.

கலைகளில்  மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ஒரு தேசத்திற்கும் பின் நிற்காமல் முன் நின்ற பொற்காலம் தமிழர் நாம் எம்மை ஆண்ட விடுதலை புலிகள் காலம். போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள். அக்காலச் சமாதான காலச்செயற்பாடுகள், தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படிப் பலவற்றை உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்து கொண்டு உலகில் ஊடகங்களின் வலிமை உணர்ந்து எமக்கான ஊடகம் மட்டுமே ௭ன்றும் எம் தரப்பான தமிழர் உண்மைகளை சொல்லும் என்பதே திண்ணம்.

சேயோன்:-  முத்தமிழ் விழா நிகழ்வு பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை அவர்கள்  இருந்தார். கவிதைகள் , சிறுகதைகள் , நாடகங்கள் போலல்லாது ஈழப்போராட்ட இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு மிகக் காத்திரமானது. இப் பாடல்கள் தனியே போராட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், போர்க்கள சாதனைகள், தமிழின வரலாறு , தமிழர்களின் வீரம், பாரம்பரியம், தமிழர் தேசம் , இனவழிப்பு , போர்தந்த வடுக்கள், மாவீரரர்கள் போன்ற பல்வேறு விடயங்களைப் பாடுபொருட்களாகக் கொண்டு பாடப் பட்டுள்ளன. இப்பாடல்கள் மக்களுக்கு விடுதலை உணர்வினை ஊட்டி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட உந்துசக்தியாக இருந்துள்ளதுடன் சிறந்த போர்க்கால இலக்கியங்களாகவும் திகழ்வதற்கு அவை இசைவடிவில் கேட்போரின் இதயத்தைத் தொட்டு விடும் அழகான ஆழமான கருத்துக்களையும் அழகிய மொழி நடையையும் கொண்டுள்ளமையும் காரணிகள் எனலாம்.

கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன.  1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல்திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவையும் நினைவில்க் கொள்ளலாம்.

i-3-236x300.jpg

சேயோன்:-  கலை பண்பாட்டுக்கழகம் நடாத்திய மானுடத்தின் தமிழ்கூடல் நிகழ்வு பற்றிக் கூறுங்கள்?

நிலவன் :- யாழ்ப்பாணத்தில் மானுடத்தின் தழிழ் கூடல் -2002 மலர்ந்தது. கலை, இலக்கிய ஊடகங்கள் சார்ந்த ஒரு கருத்தியல் தளத்தை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற அந்நிகழ்வு (2002) தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மானுட விடுதலை நோக்கிய இலக்கை, மானுடத்தின் பாலான பற்றுறுதியை, மானுட நேசிப்பை சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லிய நிகழ்வாக அமைந்திருந்து.

மானுடத்தின் தமிழ்கூடல் – 1 மானுடத்தின் தமிழ் கூடல் II ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஒய்ந்து விடாத நிலையில் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் எம் மனங்களைவிட்டு நீங்காத நிலையில் …

மானுடத்தின் தமிழ் கூடல் II எங்கள் தலை நகரென நீண்ட காலமாக நம்பி வருகின்ற, இன்றும் உறுதியுடன் நம்பிக் கொண்டிருக்கின்ற திருகோணமலை மண்ணில் விழா நடைபெற்றிருப்பது விழாவின் முக்கியத் துவத்தைஇரட்டிப்பாக் கின்றது. இசை, நடன, நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணம்,  மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை, வவுனியா என ஈழத்தமிழர் தேசத்தின் பல பகுதிக் கலைஞர்களும் ஒன்று திரண்டு தங்கள் ஆற்றல் களை வெளிப் படுத்தியிருந்தனர். இவ் விழாவை தமிழ் தேசத்தின் கலை ஆளுமைகளின் சங்கமமெனவும் கூறலாம்.

இதனை பிறிதொரு வகையில் அரசியல் சார்ந்து சொல்வதானால் மொழியின் மீதான உதாசீனப்படுத்தலிலிருந்து எழுச்சி கொண்ட ஒரு இனத்தின் கலைஞர்கள் தங்கள் தேசத்தின் தலைநகரில் ஒன்று திரண்டு தம் தேச மொழியின் ஆற்றல்களையும், கலைகளின் வீரியத்தையும் சர்வதேசத்திற்கும் பகிரங்கப்படுத்திய நிகழ்வாக ஐந்து நாட்களாக இடம் பெற்ற இவ்விழாவில் வாத்திய இசை, தமிழிசைப் பாடல்கள், நடனம், நாடகம் எனப் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஈழத்தமிழரின் வாழ்வின் வலியையும், வலிமையையும் பற்றிப் பேசிய இந்நிகழ்வு இப்படியும் ஒரு வரவேற்பை செய்யலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தது.

விழாவில் இடம்பெற்ற நாடகங்களைப் பொறுத்தவரையில் சிங்கள நாடகங்கள் தவிர்ந்த ஏனைய சகல நாடகங்களும் சமகால ஈழத்து தமிழனின் வாழ்வை அதன் உண்மை நிலையில் நின்று தரிசிப்பனவாக அமைந்திருந்தன. வன்னி மக்களின் வாழ்வின் வலிகளையும், துயரங்களையும் அவற்றை எதிர் கொண்ட வாறு மேலெழும் அவர் களினின் வலிமையையும் கோடிட்டுக் காட்டுவதாக புதுவை அன்பனின் “கரைதேடும் ஒடங்கள்” நாடகம் அமைந்திருந்தது.

இதேபோன்று எம்.பி.ரவீந்திராவின் “நெருப்புக்குள் வாழ்வு” எஸ்.பாலாவின் “இரத்த நதியில் பூத்த வெள்ளை ரோஜா” ஆகியன ஈழத்தமிழர்கள் எதிர் கொண்ட பேரினவாத ஒடுக்கு முறைகளையும், பேரினவாத அநாகரிகங்களையும் வெளிப்படுத்திய ஆற்றுகைகளாக அமைந்திருந்தன.

அதே போன்று தர்மசிறி பண்டார நாயக்காவின் ரோஜனத்துப் பெண்கள் யுத்த காலத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் வதைகளையும், வலிகளையும் தத்ரூபமாக சித்தரித்த ஆற்றுகையாக திகழ்ந்தது.

 தமிழ் தேசத்திற்கான தனித்துவமான கலைவடிவத்தை உருவாக்கிக் கொள்ளுதல், சமகால நிகழ்வுகளைக் கலைகளினுாடாக பதிவு செய்தல்,

திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பினையும் , புரிந்துணர்வு ஒப்பந்தத் தின் பின்னரும் விகாரை கட்டுமானம் , விகாரை புனரமைத்தல் என்றபேரில் நில அபகரிப்பு தொடர் வதையும் கண்டிக்கும் வகையில் கருத்துரைகளை அலங் கரித்திருந்தனர்.

ஊடகங்களின் பகைசார் பினையும் , பொறுப் புணராமையையும் தமிழ்த் தேசத்தின் கலைகளின் வளர்ச்சிப்போக்கு குறித்தும், போராட்ட காலத்தில் அவை ஆற்றிய பங்களிப்புக்கள் குறித்தும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளர் சி. இளம்பரிதி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் கெளசல்யன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.எழிலன் , திருகோணமலை மாவட்ட மகளிர் அணி அரசியல் பொறுப்பாளர் செல்வி. காருணியா ஆகியோரது சிறப்புரைகள் போராட்டம் குறித்தும், மாவீரர்களின் தியாகங்கள் குறித்தும், மக்களின் அயராத பங்களிப்பு குறித்தும், ஆழமான பார்வைகளை முன்னிறுத்தின. குறிப்பாக இறுதி நாளன்று சிறப்புரை ஆற்றிய விடுதலைப் புலிகளின் மூத்த உறுப் பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள் சமாதானத்திற்கான காலகட்டம் குறித்து பல உண்மைகளை முன்னிறுத்தினார். அறநெறிகளை வலியுறுத்துவதற்கும் வன்முறை தேவைப் படுகின்றது என்ற கருத்தை முன்னிறுத்தி தமிழரின் இராணுவ பலம் குறித்தும் , அந்தப் பலத்தின் அவசியப் பாடு குறித்தும் பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இறுதியில் விடுதலைப் புலிகளின்  பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் சில நிமிடங்களில் கனதியானதொரு உரையை ஆற்றியிருந்தார். இப்போது கேட்பதைத் தராவிட்டால் இதுவரை கேட்டுவந்ததைத் தர வேண்டிவரும் என்ற கருத்தே அவரின் பேச்சின் ஆணிவேராக இருந்தது.

புரிந்து கொண்ட இனவாதச் சக்திகள் விடுதலையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே போலிப் பிரச்சாரங்களை கையாண்டன. இந்நிலமைகள் கட்டுடைந்திருக்கிறது. போலிப்பிரச்சாரங்களையும், விம பெயரிலான கொச்சைப் படுத்தல் களையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் விடுதலைப்போராட்டம் தொடர்பாகவும் புதிய புரிதலுக்காக திறந்து விட்டிருக்கிறது. இந்த வகையில் இசை,நடன, தமிழ்த் தேசத்தைப் பொறுத்த வரையில் ஒரு கட்டுடைப்பு தொழிற்பட்டிருகின்றது எனத் துணிந்து கூறலாம்.

விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் கலை, சங்கங்களை போற்றுவதோடும் பேணிப் பாதுகாப்பதோடு சுருக்கிக் கொண்டவர்களல்ல. மாறாக சக தேசமான சிங்கள உயரிய கலைகளைப் போற்றும், மதிக்கும், உயர் பண்பு என்ற உண்மை விழாவினூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவர்களல்ல.. எப்பொழுதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல எனக் கலைகளை துணையாகக் கொண்டு தெளிவாகச் சொல்லப் புலிகளை இவ்வாறான விழா மூலம்  சிங்கள மக்கள் விடுதலைப் புலிகள் குறித் தும் , விடுதலைப் போராட்டம் குறித்தும் வரித்துக் கொண்டிருக்கும் தவறான புரிதல்களை திருத்திக் கொள்வதற்கும் அல்லது மீள் பரிசீலனை செய்வதற்கும் இவ்விழாவினுாடாக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

கலை, பண்பாட்டுக் கழகத்தின் இசை, நடன, நாடக விழா ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஏறக்குறைய கால் நூற்றாண்டிற்குப் பின்னர் கலையை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களில் பெருந் திரளானவர்களை ஒரிடத்தில் திரட்டி தமிழ் தேசியத்தின்பால் உணர்வு நிலையில் ஒன்று படுத்திய ஒரு அம்சமே. தமிழீழ தேசியக் கொடி காற்றிலே அசைந்து வீர வரலாற்றை பறைசாற்ற ஒட்டு மொத்த மானுடத்தின் தமிழ் ஈழத்தமிழர் தேசிய வித்திட்டிருப்பது பதித்திருக்கிறது.

இனவாதத்திலும், நில ஆக்கிரமிப்பினாலும் சூழப்பட்டு நிமிர முடியாமல் வாழும்தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை, ஒரு புதிய உணர்வு நிலையைப் பாய்ச்சியிருக்கிறது. கலை, ஒரு புதியஅசை வியக்கத்திற்கான வித்தைப் பதித்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம் நடாத்தும்  இசை, நடன, நாடக விழா அரசியல் தொடர்பில் புதிய பார்வைக் கோணங்களுக்கு இனவாத அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் ஒரு புதிய அசைவியக்கத்திற்கான  மேலாக சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்கு முறைக்குள்ளும் எழுந்து நிற்கும் ஒரு தேசிய இனத்தின் கலை, பண்பாட்டுக்கழகத்தின் இசை, நடன, நாடகவிழா  கலை இலக்கியங்கள் கொண்ட மானுடத்தின் தமிழ்கூடல் ஒரு பேசும் பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

kl-300x294.jpg

சேயோன்:-  தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பாகப் புலம்பெயர் தேசத்தில் இளைய தலை முறையின் ஈடுபாடு  எவ்வாறு காணப் படுகிறது?

நிலவன் :- எமது தாயகத்திற்கான விடுதலைப்போரும் விடுதலைப்போருடன் பிணைந்த எங்கள் வாழ்வியலையும் எந்தப் பண்நாட்டுக் கலைஞனாலும் செதுக்கி விடமுடியாது . வீரத்தின் கதைகளும் வலிகளின் குமுறல்களும் வன்முறைகளின் வதைகளும் அறிந்தவர்கள் நாம். மண்ணையும், மரபையும் காப்பது ௭மது கடமை. நமது கலைகள் பற்றியும், அவற்றின் சிறப்புக்கள் குறித்தும், இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லிக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம் .

தமிழ்மொழியைக் கற்பதோடு, தமது பண்பாட்டு விழுமியங்களைக் காப்பதற்குக் கலைகள் ஏதுவாக அமைந்துள்ளன. தேசிய கட்டமைப்புக்களின்  நிர்வாகங்களின் கீழ் இயங்கிவரும் நுண்கலை வகுப்புகளில் பரதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கலை ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருகின்றனர். இக்கலைகளோடு தமிழர் மரபுவழிக் கலைகளான கும்மி, கோலாட்டம், காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், விடுதலைப் பாடல் போன்ற கலைகளையும் பயின்று வருகின்றனர். அதே வேளை தேசிய நிகழ்வுகளையும் , தமிழர் திருநாளான பொங்கல் விழா, வாணி விழா, நத்தார் விழா போன்ற பல நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடாத்தி வருகின்றனர்.

தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள்விழா  கனடா , பிரித்தானியா , அவுஸ்ரேலியா, சுவிஸ் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளிலும்  (புலம்பெயர்நாடுகளில்) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழர் கலை கலாச்சாரப் பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக் கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழர் பண்பாட்டைப் பாரம்பரியக் கலைகளின் மூலம் வெளிக்­ கொணரும் விதத்தில் நடந்த கலைப் போட்டி­ நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களின் கலைத்திறமையை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாகவும், கலை ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரும் மேடையாகவும்  போட்டி நிகழ்வுகள் அமைவதோடு தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும், இளைய தலை முறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வைப் பேணவும், தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் இசை நடனப் போட்டியும் அமைகின்றது. இந்  நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்துவரும் விருந்தினர்கள், நடுவர்கள், கலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், போட்டியாளர்கள், அணிசெய் கலைஞர்கள், எமது சக அமைப்புக்களின் பொறுப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், கலை ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வருகின்றார்கள்.

Photo-13V-300x199.jpg

சேயோன்:-   தமிழ் இனத்தின் ஒப்பற்ற  தலைர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  கலை இலக்கியம்,  பண்பாடு பற்றி சிந்தனைதகள் பற்றிக் கூறுங்க?

நிலவன் :- கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்ட வேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

 இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கியக் கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்.

போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது.

விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்.

எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்.

மொழியும் , கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது; (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன. தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது.

எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரனாக நிற்க வேண்டும்.

மொழி, கலை, கலாச்சாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்குத் தூண்களாக விளங்குகின்றன. ஒரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன.

பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை, கலாசாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும், எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும்.

எமது மொழியில், எமது கலைகளில், எமது பண்பாட்டில், எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசமும் நேசமும் தேசியப் பற்றுணர்வாகப் பரிணாமம் பெறுகின்றன.

கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள்.

நான் கலை இலக்கியங்களை மதிப்பவன். கலை இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன்.

மக்களிடையே விழிப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும், விடுதலை உணர்வையும் தூண்டிவிடும் கலை இலக்கிய ஆக்கங்களே எமது இலட்சியப் போருக்கு உரமேற்றுவதாக அமையும். இத்தகைய கலை- இலக்கியப் படைப்புக்களே தேசிய எதிர்ப்பியக்கத்திற்கு உரமூட்டுவதாக அமையும்.

நாம் சுதந்திர மனிதர்களாக, எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருந்தால்தான், கல்வி உட்பட சகல, சமூக அமைப்புக்களையும் ஒரு உன்னதமான வளர்ச்சிப்போக்கில் உயர்நிலைக்கு நகர்த்திச் செல்ல முடியும்.

இளமையிலிருந்துதான் ஒருவனை முழுமையாக வளர்க்க முடியும். முழுமை எனும் பொது அறிவும், ஆற்றலும், அறநெறிப் பண்புகளும் கொண்ட நிறைவான மனித வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றேன்.

எமது மொழியும் – கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றில்,விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை; எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக நிற்பவை.

சமூகப் புரட்சி என்பது கலாசார மறுமலர்ச்சியை உள்ளடக்கக் கூடியதாக முன்னெடுக்கப் படவேண்டும் என்பதே எனதுகருத்து.

கலாசாரம் உயர்நிலை எய்தும் பொழுதே ஒரு இனம் மகிமை பெறுகின்றது; மனிதவாழ்வு உன்னதம் பெறுகின்றது. மனிதம் வளர்ச்சி பெறுகின்றது. காலத்தின் மூச்சாக வாழ்வியக்கம் அசைகின்றது. அந்தக் காலத்தையும் அந்த வாழ்வாக அவிழும் மனித இன்னல்களையும் விளைச்சல்களையும் நுட்பமாகச் சித்திரிக்கும் கலை – இலக்கியங்கள் உன்னதமானவை.

எமது பண்பாடுதான் எமது தேசத்தின் உயிர் எமது இனத்தின் ஆன்மா. தான் பிறந்த மண், தான் வாழ்ந்த சூழல், தான் வாழும் ;காலம் என்ற ரீதியில் வாழ்க்கையே ஒரு கலைஞனது படைப்புத் தளமாக அமைகின்றது; வாழ்வின் புறநிலை உண்மைகளை மூலப்பொருளாக எடுத்துக் கலைப்பொருள் படைப்பவனே சிறந்த கலைஞன்.

பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை – கலாச்சாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும் எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றிவிக்கும்.

கலாச்சாரம் என்ற கோலத்தில் எமது சமூக வாழ்வில் ஊடுருவி நிற்கும் பிற்போக்கான பண்புகளை, வழக்குகளை,கருத்தோட்டங்களை நாம் இனங்கண்டு களைதல் அவசியம்.

கல்வி எனும் மூலாதார உரிமையைப் பறித்தெடுத்து, தமிழீழத்தின் கல்வித்துறையைச் சிதைத்துவிட, சிங்களப் பேரினவாதம் நீண்டகாலமாகவே முயன்று வருகின்றது.

எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது; எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமானது. நீண்ட காலமாகவே, எமது கல்விவாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான் இதனால் தமிழரின் கல்வி பாரதூரமான அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அறிவின் அதி உயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை; தன்னலமும் தற்பெருமையும் அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகிறது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக, பண்பான மனிதராக ஆக்கிவிடுகிறது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயரிய நோக்குகளையும் இலக்குகளையும் மாணவ சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தப் புரிந்துணர்வை வளர்த்து, மாணவரிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரிய சமூகம் முயற்சிக்க வேண்டும்.

கலைத்துறையில் சர்வாதிகாரம் இருக்கக்கூடாது; அப்படி இருந்தால் அது வளராது. கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்து விட எதிரி முனைகிறான். இனத் தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்.

kll-236x300.jpg

சேயோன்:- இளம் கலைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது ?

நிலவன் :- தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் பண்பாட்டு வடிவம் ஈழத் தமிழரிடையே சமூக மாற்றத்துக்கான வன்மையான கலை அரங்கினை வளர்ப்பது. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தனது மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தனது மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்கச் செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான் உறங்கிக் கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது. தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூகப் பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும் எந்தத் துறை சார்ந்த கலைஞர்களாக இருந்தாலும், அதில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பும் உணர்வும், உழைப்பும், படைப்பிலும் வாழ்விலும் உண்மையும், நேர்மையும், மேலும் மேலும் வளரத் துணை புரியும் என்பதை உணருங்கள். ஏன் என்றால் தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைகள் வாயில்களாக அமைகின்றன. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் எனில் முதலிலே நாங்கள் கை வைக்கின்ற இடங்கள் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பது . கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கின்றன.

தமிழ் மக்களின் பழக்கவழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பொருளாதார நிலையை வெளிப் ப்படுத்தும் விதமாகக் கலைகள் அமைகின்றன. தமிழ் இனத்தின் மொழியையும், அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அழித்தால் தமிழ் இனம் தானேகவே அழிந்துவிடும் என்பதற்கு உட்பட்டே தமிழர் தாயகம் முழுவதும் பண்பாட்டு இனஅழிப்பு நடவடிக்கைகள் எமது மண்ணில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது. எமது இனத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்! என்பதனைக் காலம் உணர்த்தி நிற்கின்றது

ii-300x196.jpg

சேயோன்:-  இளந் தலைமுறையினரிடம் எழுச்சி உருவாக்கம் பற்றிய உங்கள் கருத்து?

நிலவன் :- ஈழத்தில் வாழும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறைக்குள் அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளி மக்களின் இயல்பான வாழ்வை முடக்கிப் போராட்டங்களை ஒடுக்கும் அடக்குமுறைத் தனம் மிக்க அரசியல் புத்தியுடன் ஆக்கிரமிப்பு அரசியல் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றார்கள். உலக வல்லாதிக்கக் கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத அரசுகளின் சதிவலையில் அகப்பட்டவர்களாக இருக்காது தமிழ் இன அழிப்புக்கு நீதி தேடும் போராட்டத்தில் எம்மைப் போன்று அடக்கு முறைக்கு எதிராகப் போராடும் பிற இன மக்களோடு கைகோர்த்து நாம் பன்னாட்டு அரங்கிலே அநீதிக் கெதிரான மாபெரும் அணியாகத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னிறுத்த வேண்டும்.

தமிழர், தமிழீழம் என்ற எல்லைக்கோடுகளை புலத்தில் இளைய தலைமுறையினர்   ஒன்றிணைந்து பன்னாடுகள் தழுவிய ஓர் ஒருங்கிணைவு, ஒருமித்த கூட்டு இலக்குகளிற்காக “தமிழீழம்” என்ற கொள்கையை முன்னிறுத்தி ஓர் தேசமாக எண்ணிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். துறைசார் திறன் கொண்ட ஆளுமைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்தியாக இருக்கின்ற எமது இளம் தலைமுறையினரை நாம் முன்நிறுத்திச்   செயற்பட வேண்டும். ஒரு தலைமுறை மாற்றமும்,   எமது நீநிகோரும்  போராட்ட வடிவத்தின் மாற்றமும், காலத்தின் தேவை என்பதைக் களத்திலும், புலத்திலும் உள்ள தமிழ் தேசியத் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களே எம் இனத்தின் எதிர்காலம் என்பதையும் புரிந்துகொண்டு இளையோர்களிற்கு வழிவிட்டு வரலாற்றுக் கடத்தலுடன் “எமது போராட்ட வடிவமாக இளந் தலை முறையினரிடம் குறிக்கோள் மாறாத அற எழுச்சியினை உருவாக்க வேண்டும்”.

புவிசார் அரசியலின் அடிப்படையில் பல்துருவ அதிகார மையங்களாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. இப் புவிசார் அரசியலில், சக்திமிக்க சர்வதேசப் பிராந்திய அரசுகளின் நலன்களைக் கொண்ட பரிமானங்கள் தமிழீழ விடுதலைப் பயணத்தில் தற்பொழுது சவால்கள் மிகுந்த இக் காலப்பகுதியாக உருவெடுத்துள்ளது. எமது இனத்தின் விடுதலை வரலாற்றையும் , தியாகங்களையும் , பண்பாட்டையும் ,அடையாளங்களையும், பாதுகாத்து தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து  வகுக்கப்பட்ட “தமிழீழம்” தனிநாடுத் தீர்வுத்திட்டம் நோக்கிய மக்களின் தொடர்ச்சியான நிலைப்பாட்டைக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக சமர்க்களம் கண்டு வித்தாகி விதையுண்டவர்கள் மாவீரர்கள்.  தமிழீழ மக்களின் விடுதலை வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் தமிழீழத் தனியரசு ஒன்றே வழி என்ற மக்கள் கட்டளையைத் தலைமேற்கொண்டு, விடுதலைக் குறிக்கோளில் உறுதியான நம்பிக்கையுடன் வரலாறாகிப் போன பல்லாயிரம் மாவீரர்களை நெஞ்சிலேந்தி அனைவரும்  தமிழராய் ஒன்றிணைய வேண்டும். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.”  “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும் “ என்று சொன்ன திலீபனின் அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும். தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் மக்கள் விழிப்போடு  ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நன்றி

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

https://www.uyirpu.com/?p=19204

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.