Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும் பரவாயில்லை கட்சி தனது கட்டுப்பாட்டில் இருகக வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி சிதைந்ததாலும்> அழிந்தாலும்
பரவாயில்லை> கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க
வேண்டும் என்பதே சுமந்திரனின் நிலைப்பாடு
என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும்>
சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான
சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அலுவலகத்தில் 31ம் திகதி
அன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு
தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது>
வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை
தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு
கூட்டத்தில் சீ.வி.சிவஞானம் தலைவராக
தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி சுமந்திரன் தரப்போடு
முரண்பட்ட பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க ஒரு மோசமான
செயற்பாடு. மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்து தனக்கு சார்பான செயற்பாடுகளை
முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளில் சுமந்திரன்
மும்முரமாக இருந்துள்ளார்.
மாவை சேனாதிராசா அவர்களை
மாற்றவேண்டும் என்றால்> அல்லது அவர் ராஜினாமா
செய்துள்ளார் என்றால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட
தலைவராக சிறிதரன் இருககின்றார்.
அவரை தலைவராக தெரிவு செய்வதுதான்
ஒரு அறநெறிக்கு உட்பட்தாகும். அதை விடுத்து அதைப்பற்றி எதுவுமே பேசாமல் இன்றைக்கு
சி.வி.கே.சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றார்.
இது தமிழரசு கட்சியில் சுமந்திரன் பிரிவினருக்கு எதிராக இருக்கின்றவர்களை அகற்றி> சிறிதரனை
தனிமைப்படுத்துகின்ற ஒரு நடவடிக்கை உள்வாரியாக இடம்பெறுகின்றது என்றே நான் நினைக்கின்றேன ;.
இன்னும் கொஞ்சக்காலத்தில் சிறிதரன் தனிமைப்பட்டுப் போக சிறிதரனுக்கு எதிராக ஒரு ஒழுக்காற்று
தீர்மானத்தை நிறைவேற்றி அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கூட பறிக்கக்கூடிய ஒரு நிலை
இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
குறைந்தது ஆறு மாதத்திற்குள் சுமந்திரன் சிறிதரனை கட்சியிலிருந்து நீக்கி அல்லது தேசிய
பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சத்தியலிங்கத்தை பதவியிலிருந்து இராஜினாமா செய்யச்சொல்லி
தான் அதற்கூடாக பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றது என்று நான்
நினைக்கின்றேன்.
இன்னொரு பக்கமாக சுமந்திரன் ஊடக பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏற்கனவே
சிறினேசன் அவர்கள் ஊடக பேச்சாளராக இருக்கின்றார். அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும்
இருக்கின்றார்.
தற்போது புதிதாக கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்றும்> பாராளுமன்றத்தின் ஊடக
பேச்சாளராக சிறிநேசன் இருப்பாரென்றும் கூறப்படுகிறது. ஒரு கட்சிக்கு ஏன் இரண்டு ஊடக பேச்சாளர்கள்?
ஒரு கட்சிக்கு ஒரு ஊடக பேச்சாளர் போதுமானதே.
சுமந்திரனுக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக
நான் நினைக்கின்றேன். தமிழரசு கட்சியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மாவை சேனாதிராசா
தான் என சாணக்கியன் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்கள்.
மாவை சேனாதிராசாவில் விமர்சனங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இந்த போக்குகள்
எல்லாவற்றிற்கும் மூல காரணம் சுமந்திரன் தான் என்பது இன்றைக்கு வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.
இதிலே தமிழரசு கட்சி என்பது ஒரு பாரம்பரிய கட்சி> அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது> அதற்கு
வடக்கு கிழக்கு கட்டமைப்பு இருக்கிறது. அது பலவீனப்பட்டு செல்வது தமிழ் அரசியலை பலவீனப்படுத்துவது
தமிழ் அரசியலை பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும்.
ஆகவே தமிழரசு கட்சியை பாதுகாக்கின்ற நடவடிக்கையை கட்சிக்காரர்கள் செய்வார்கள் என்று
நான் நினைக்கவில்லை. எனவே வெளியிலிருந்து மக்கள் ஒரு பலமான அழுத்தத்தை கொடுப்பதன ; ஊடகவே
இதனை முன்னேற்றமுடியும் என நான் கருதுகின்றேன்.
அதிலிருந்து நாம் தவறுவோமாகவிருந்தால் ஒரு குறுகிய காலத்திலேயே இலங்கை தமிழரசு கட்சி
வடக்கிலே இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகக்கூடி ஒரு சூழல் வரலாம் என்பதே எனது நிலைப்பாடு.
இந்தப் போக்கை தமிழ் மக்கள் அனுமதிக்கப்போகிறார்களா என்பதுதான் எனது கேள்வி.
இதில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு விடயம் இது ஒரு கொள்கைப் பிரச்சினை. தமிழரசு கட்சியும்
தமிழ் தேசிய அரசியலும் இதுவரை பின்பற்றிய அரசியலை கைவிட்டு இன்னோர் அரசியலை கொண்டு
செல்வதற்காக குறிப்பாக இறைமை அரசியலை கைவிட்டு ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் ஒரு
அரசியலை கொண்டு செல்வதற்கும்> இணக்க அரசியலை கொண்டு செல்வதற்க்காகவும் சுமந்திரன் இந்த
வேலையை செய்கிறார்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் ஏன்பதே எனது
நிலைப்பாடாகும் என்றார்.

https://uthayannews.ca/wp-content/uploads/2025/01/Jan_3_2025.pdf

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்குள் இடையில் வந்து பூந்த கோடரிக்காம்புகளை அதிகாரம் செலுத்த விட்டது யார் தவறு? ஏன் அவர்கள் தவறு விடும்போது, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரே குரலாய் அவரை முறியடிக்க முடியவில்லை? இனியாவது எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து, வெளிநடப்பு செய்யுங்கள், நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து ஒழுங்காற்று நடவடிக்கை எடுங்கள். அவருக்கு தெரியும், கட்சிக்குள் பிணக்கு இருப்பதை வெளியில் தெரிவிக்கவோ, கட்சிக்கு களங்கம் ஏற்படவோ உறுப்பினர்கள் விரும்பமாட்டார்கள், அதனால் தான் என்ன செய்தாலும்  கட்சியின் நலன் விரும்பிகள் மௌனம் காப்பர். சுமந்திரனுக்கு கட்டுப்பாட்டு, கட்சி ஒழுங்கு என்று ஒன்றும் கிடையாது, வந்தேறி. அதனால் அவர் உளறிக்கொண்டு, கட்சியை இரண்டுபடுத்திக்கொண்டு திரிவார். அவர் வாய்க்கு வந்தபடி மற்றவர்களை விமர்ச்சிப்பார், தன்னை யாராவது விமர்ச்சித்தால்; ஒழுங்காற்று நடவடிக்கை என்பார். இந்தளவுக்கு, மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இவ்வளவு அதிகாரம் செலுத்த ஏன் விடுகிறீர்கள்? சாணக்கியன் அடுத்தது. சிங்களகட்சியில் நின்று வெல்ல முடியாதவர் இடையில வந்து பூந்து, சும்மா படங்காட்டிக்கொண்டு அவர் அடுத்த முதலாளி. ரொம்ப துள்ளினால் அடுத்த தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்படுவார். 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து, அர்ச்சுனாவின் இரட்டை வேடம் கலையுது. ஒருபக்கம் நான் தமிழேண்டா! மறுபக்கம் அனுராவுக்கு எடுத்துக்கொடுப்பு. வெகுவிரைவில் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் அறிகுறிகள் தெரிகின்றன.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.