Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை!

Yogeshwaran MoorthiUpdated: Saturday, February 8, 2025, 14:47 [IST]
 

erode east by election 2025 erode east election result 2025 annamalai 2025 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

Also Read

 

சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம்.. மத்திய அரசு பணிக்கு போகும் திவ்யதர்ஷினி ஐஏஎஸ் யார்?

இதனால் திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும்.

நிச்சயம் ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகமில்லாத தேர்தல். என்னை பொறுத்தவரை வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம்.

ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தான், மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை.

Recommended For You

 

புறமுதுகிட்டு ஓடிய எதிர்க்கட்சிகள்.. அதிமுக மக்கள் மனதை விட்டே மறைந்து வருகிறது.. ஸ்டாலின் அட்டாக்!

இந்த தேர்தல் களத்தில் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதேபோல் பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பெரியாரை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள்.

அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவிற்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது.

பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-has-spoken-a-bit-too-much-against-periyars-thoughts-says-bjp-state-president-annamalai-after-678343.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=678465-p8

டிஸ்கி

 தட் “வாங்கின காசுக்கு மேலாலயே கூவீட்டாண்டா கொய்யால” மொமெண்ட்

 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, goshan_che said:

 

டிஸ்கி

 தட் “வாங்கின காசுக்கு மேலாலயே கூவீட்டாண்டா கொய்யால” மொமெண்ட்

 

தலைப்பை பார்த்ததும், இதையே கமெண்டாக போட வந்தேன், நீங்களே போட்டு விட்டீர்கள்😃

அண்ணாமாலை தன் சக சங்கி சைமனுக்கு ஆதரவாக ஆதாரமெல்லாம் வெளியிடுகிறேன் என்றார், ஆனால் வழக்கம் போல் அவரும் வாய்ச்சொல் வீரராகவே இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் ஓவரா பேசிவிட்டார் என்றால் என்ன அர்ததம். கொடுத்த காசை விட ஓவரா கூவிற்றாண்டா கொய்யாலா என்று கூற வருகிறாரா அண்ணா மலை. 

சீமானை பொறுத்தவரை ஓவர கூவினா கூட காசு கிடைக்கும் என்று கணக்கு போட்டிருப்பார். தனது  தற்குறி தம்பிகளுக்கு அறிவு வளர்சசி அடைந்து  அவர்கள் தம்மை விட்டு போக முதலே  காற்றுள்ள போதே தூற்றி கொள்ள நினைக்கிறார்.

 அடுத்த பஜ்ச் தம்பிகள் கொஞ்சம் அறிவு உடையவர்களாக இருந்தால் என்னை தூக்கி வெளியில் போட்டாலும் போட்டுடுவாங்க, அதற்குள் உழைப்பதை உழைத்து விடுவோம் என்ற நப்பாசையில் ஒவரா கூவிற்றார் போல. 

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தன்னுடைய தம்பிகள் தன்னை விட்டு விலகிச் செல்லலாம் பிரபாகரன் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் கண்டிப்பாக பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளாராம்.
அப்போ தனது தலைவர் என்று இவர் சொல்வது

பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் விலகிச் செல்லலாம்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.