Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gazzette.webp?resize=300%2C192&ssl=1

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் குறித்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம் மற்றும் கனேடிய தமிழர் தேசிய அவை உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தமிழ் இளைஞர் அமைப்பு, எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு, ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பு, விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்பனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 222 தனிநபர்களின் பெயர் விபரங்களும் அடங்குகின்றன.

Athavan News
No image preview

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு...

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம...

  • கருத்துக்கள உறவுகள்

ம் ..... அவர்கள் இருந்த காலத்தில், அவர்களை அழிக்கிறோமென சொல்லி, முப்பது ஆண்டுகளும், பலகோடி ரூபாக்களும், பல நாடுகளின் உதவி, ஆலோசனைகளும் தேவைப்பட்டன. அவர்களை அழித்துவிட்டோமென விழா கொண்டாடி, இல்லாதவர்களுக்கு தடை விதிக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளின் தடையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு

22 FEB, 2025 | 05:16 PM

image

தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளின் தடையை நீடித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைப்புகளின் நிதி மற்றும் பொருளாதார சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 222 நபர்களின் பெயர் பட்டியலையும் அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Screenshot_20250222_152120_Drive.jpg

https://www.virakesari.lk/article/207360

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

NPP அரசியல். திகன கலவரம் போன்ற இனக்கலவரத்தை செய்த சிங்கள அமைப்புக்கள் எங்கே போனது....🤔

தடைப்பட்டியலில் தமிழ் முஸ்லிம் அமைப்புக்கள் மட்டுமே கருத்தில் கொள்ள பட்டுள்ளது.....

இதை பார்க்கும் சிங்கள இளைஞர்கள் என்ன நினைப்பர்....

அப்போ சிங்கள அமைப்புக்கள் நல்லவர்கள் என்றல்லவா புரிந்துகொள்வர்....

பொதுபல சேனா போன்ற அமைப்புக்களால் கோட்டா காலத்தில் இஸ்லாமிய பெண்கள் பரிதா & அபாயா போட்டு வெளியில் செல்லும் அச்சம் ஏற்பட்டிருந்தது....

இதை எல்லாம் சமத்துவம் பேசும் NPP மறந்துவிட கூடாது....

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்+

222 பேரின் பட்டியலைப் பார்த்தேன்... தேடப்படுபவர்கள் என்றிருக்கிறது.... இதில் அரிசியல்துறை, புலவாய்வுத்துறை என்பதிலிருந்து அறிக்கை விடுபவர்களின் பெயர்கள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தேன், தயாமோகன் என்பவரைத் தவிர ஒருவரின் பெயரையும் காணோம் (எனது கண்ணிற்கு தெரியாமல் மறைந்திருக்கிறதோ?).

தணிக்கை *************************************

குறிப்பாக தாங்கள் புலிகள் தானென்றும் சிங்கள அரசிற்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று பொதுவாக பொதுவெளியில் சொல்லித்திரியும்

  1. புலவர் (சிங்களம் சுடுதண்ணி குடித்த நாய் போன்று திரிந்த 2010/2011 ஆம் ஆண்டளவில் துவிட்டரில் தான் நீலவரியுடன் இருக்கும் நிழற்படங்களை வெளியிட்டிருந்தவர். அங்கிருந்துதான் நானே இவரின் படங்களை எடுத்தேன்!)

  2. செழியன் (இன்றளவும் முள்ளிவாய்க்காலிலிருந்து தலைவர் தப்பி வெளிநாட்டில் இருக்கிறார் என்று அவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கிறார், இறுதியாக 2024இல் கூறியிருந்தார்),

  3. ஜெயாத்தன்

போன்றோரின் பெயர்களைக் காணவில்லையே..... "துவாரகா" புகழ் அப்துல்லாவின் பெயர் முதற்கொண்டிருக்கும் போது இவர்களின் பெயர் விடுபட்டுள்ளதே? அது எப்படி திமிங்கிலம்?

பிற்குறிப்பு: 2009 மே வரை இவர்கள் செய்தவற்றை மதிக்கிறேன், என்றினும் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால் மேயிற்குப் பின்னர் இவர்கள் புலிகளின் பெயரில் நுங்குவண்டி ஓட்டுவது நிப்பாட்டப்பட வேண்டும்.🤬

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

விசேல் வர்த்தமானி அறிவித்தல் தமிழில்

https://documents.gov.lk/view/extra-gazettes/2025/2/2424-51_T.pdf

Edited by vanangaamudi

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.