Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2

01 MAR, 2025 | 03:42 PM

image

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடு அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவன செய்துள்ளார்.

ஆவண கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த  சம்பந்தப்பட்ட பெருமளவான நிலப்பகுதியை அனுமதியின்றி இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக முற்றாக அழித்துள்ளார்.

சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையும் குறித்த நபர் தொடர்ந்து அனுமதியின்றி காடுகளை அழித்துள்ளார்.

இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த நபர் குத்தகைக்கு காணியை பெறுவதற்கு கடிதம் தந்துள்ளதாகவும், காடுகளை அழிப்பதற்கு தாம் அனுமதியளிக்கவில்லை என்றும், குறித்த பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்தினுள் இருப்பதால் தம்மால் அனுமதி கொடுக்க முடியாதென்றும் அவ்வாறு அவர் காடுகளை அழித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/207986

  • கருத்துக்கள உறவுகள்

காட்டினை அழித்த சம்பந்தப் பட்ட நபர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு... என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

காட்டினை அழித்த சம்பந்தப் பட்ட நபர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு... என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

இது நான் அங்கு நின்றபோது கண்ட அனுபவம்...அலுவலகத்தில் புகார் கொடுக்கப்படும் ..அந்த புகார் பைலில் போடுவதற்கு ஒருமாதம் எடுக்கும்...அததி ஒரு கிளாக் பொருப்பெடுக்க 2 கிழமை ...அதன்பிறகு..மேல் கிளக் ,கீழ் கிளாக் என்றுபோய்..6 மாதத்தின்பின்தான் ..அலுவல்ரிடம் போய் சேரும்...அப்ப புகார் கொடுத்தவர் அங்கு நிற்கமாட்டார்... கடைசியில் பைல் ..அலுமாரிக்குப்போய் ..நின்மதியாய் நித்திஐ கொள்ளும்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.