Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29.jpg?resize=750%2C375&ssl=1

தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை.

கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி  தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்தே இச்சாதனையை படைத்துள்ளார்.  இவருக்கு தங்கப் பதக்கத்துடன் ரூபா 650,000  ரொக்கப் பரிசுடன் வர்ண தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

3வது தடவையாக ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியினால் கொழுந்து பறிக்கும் போட்டி இன்று (01)  ரதல்ல பிரதேசத்தில் நடைபெற்று பின்னர் பரிசு வழங்கும் நிகழ்வு ரதல்ல விளையாட்டு மைதானத்தில நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரத அதிதியாக வேறலிஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. மொஹான் பண்டித்த கே மற்றும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ரொஷான் ராஜதுரை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கொழுந்து பறிக்கும் போட்டியில் ஹேலிஸ் பெருந்தோட்ட கம்பனியின்,  கௌனி வெளி  பெருந்தோட்ட கம்பனி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி, ஹொரண பெருந்தோட்ட பெருந்தோட்ட  கம்பனி ஆகியவற்றின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 60 தோட்டங்களைச் சேர்ந்த 50 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்..

இவர்களுக்கு போட்டிக்காக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இற்றேரத்தில் தரமுள்ள  அதிக கிலோ கொழுந்தை பறிப்பவர்களுக்கே முதல் 3 இடங்கள் வழங்கப்பட்டன.  அதற்கமைய 3 பெருந்தோட்ட கம்பனிகளிலிருந்தும் வெண்கல பதக்கத்தை பெற்று 3 ஆம் இடத்தை, கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. மாரியாய்,  தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் வீரையா வனிதா மற்றும் ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் P. சந்ரலேகாவும் பெற்றுக் கொண்டனர். அத்தோடு  வெள்ளி பதக்கத்தை பெற்று 2ஆம் இடத்தை,  களனிவெளி பெருந்தோட்ட கம்பனியின்  சுப்பிரமணியம் கோமதி, தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின்  தர்மலிங்கம் பூமணி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின் K. கவிதா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்க பதக்கத்தை , கௌனி வெளி பெருந்தோட்ட கம்பனியின் M. இந்திராகாந்தி,தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் எந்தனி இரேஷா ராஜலெட்சுமி, ஹொரண பெருந்தோட்ட கம்பனியின்  சுகுமாறன் ராஜலெட்சுமி ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

Athavan News
No image preview

தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி - 15 நிமிடங்களில் 8 kg க...

கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி  தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15 நிமிடங்களில் 8 kg க...
  • கருத்துக்கள உறவுகள்

15 நிமிடத்தில் 6 இலட்சத்து ஐம்பதினாயிரத்தை வென்றமை கனவு போலுள்ளது - அந்தனி இரேஷா ராஜலட்சுமி

Published By: VISHNU

03 MAR, 2025 | 02:30 AM

image

 ‘நான் இருபது  வருடங்களுக்கு மேல் கொழுந்து பறித்தல் தொழிலோடு இணைந்துள்ளேன். இம்முறை இடம்பெற்ற கொழுந்து பறித்தல் போட்டியில்  நான் வெற்றி பெற்றமையை  மிகவும் பெருமிதமாக உணர்கிறேன். எமக்கான போட்டி நேரம் 15 நிமிடங்கள். குறித்த நேரத்தில் நான்  இரண்டு பிரிவுகளில் வெற்றியீட்டி  ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பணப்பரிசை வென்றுள்ளேன். 15 நிமிடத்தில் இவ்வளவு தொகை பணப்பரிசை நான் வென்றமையை கனவு போல் உணர்கின்றேன். பல வழிகளிலும் என்னை ஊக்குவித்த எனது தோட்ட முகாமையாளர், ஊழியர்கள் மற்றும் தோட்ட கம்பனிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறுகிறார் கிரேட் வெஸ்டர்ன் தோட்டத்தைச் சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலட்சுமி என்ற பெண்மணி. 

20250301_144913.jpg 

ஹேலீஸ் குழுமத்தின், களனிவெலி ,ஹொரண பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தலவாக்கலை தேயிலை பெருந்தோட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் ,   சிறந்த  கொழுந்து பறிப்பாளர்களுக்கான போட்டி நிகழ்வு சனிக்கிழமை முதலாம் திகதி ரதல்ல பெருந்தோட்டத்தில் இடம்பெற்றது.  அதில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் அவ்வாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

20250301_090920.jpg

இப்போட்டியில் அறுபது தோட்டங்களைச் சேர்ந்த ஐம்பது பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பதினைந்து நிமிடங்களில்  அதிக எடை கொழுந்து மற்றும் சிறந்த  கொழுந்து கொய்தல் செயன்முறையில் கீழ் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  வெற்றியாளர்களை தீர்மானிக்கும் குழுவினராக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விளங்கினர்.

20250301_104441.jpg

இவ்வருடம் இப்போட்டியில்  தலவாக்கலை  பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் வரும் கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச்  சேர்ந்த அந்தனி இரேஷா ராஜலட்சுமி  வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதுடன்  அவர் மொத்தமாக  ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா  ரொக்கப்பரிசையும் சிங்கர்   ஒலியிசை  உபகரணத்தையும் பெற்றுக்கொண்டார்.  இந்நிகழ்வுகளில் ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான்  பண்டிதகே  மற்றும் ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ரொஷான் ராஜதுரை,  முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர். 

20250301_103358.jpg

ஹேலிஸ் குழுமமானது    ஒவ்வொரு வருடமும் சிறந்த கொழுந்து பறிப்பாளர்களுக்கான போட்டியை நடத்தி ஊழியர்கள் மற்றும் கொழுந்து பறிக்கும் தொழிற்றுறையோடு இணைந்திருப்பவர்களை   ஊக்குவிக்கும் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/208115

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலை பறிக்கும் தொழிலாளிகள் இவ்வாறான நரி வேலைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் ..... இது சொந்த செலவில் வைக்கும் சூனியமாகவும் மாறலாம்

தேயிலை பறிக்கும் சராசரி நேரத்தை வைத்து இனி வரும் நாட்களில் அவ்வ்வளவு தேயிலை பறிக்க வேண்டும் என்று வந்து நிற்கும் இந்த முதலாளி முதலைகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.