Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதே போல் இன்னொரு விடயம் - பெண்கள் பாலியல் வன்கொடுமை வெளியே தெரிந்த அளவுக்கு கூட ஆண் சிறார்கள் மீது இவர்கள் செய்தது வெளி வரவில்லை.

கொழும்பிலும், இந்தியாவிலும், இலண்டனிலும் சில கதைகளை கேட்டபோது - நான் தெய்வாதீனமாக தப்பி கொண்டேன் என்பதும், படித்தவராக இருந்தும் என் பெற்றார் எவ்வளவு அப்பிராணிகளா இருந்துள்ளனர் என்பதும் உறைத்தது.

இராணுவம், இராணுவம்தான்.

ஆனால் அதிலும் கேடு கெட்டது இந்திய இராணுவம்.

இந்த விடயத்தில் இவர்கள் செய்த இந்தக் கொடுமைகள் அப்படியே மறைக்கப்பட்டன..................😌. இவை எதையும் நிரூபிக்க முடியாது தான், ஆனால் எங்களில் பெரும்பான்மையானவர்களுக்கே இப்படி எல்லாம் நடந்தன என்று இன்றுவரை தெரியாது...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எனக்கு டக்கென்று தெரிந்துவிட்டது!

எங்களை சுற்றி இருந்த விளையாட்டு திடல்கள்/மைதானங்களுக்கு நெற்கொழு, தீருவில், சிதம்பரா, நெடியகாடு, எள்ளங்குளம் என்றெல்லாம் பெயர்களை வைத்த நாங்கள் இதற்கும் ஒரு நல்ல பெயராக அப்பவே வைத்திருக்க வேண்டும்................

1 hour ago, கிருபன் said:

நான் முதன்முதலாக இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷன் செய்தது இந்திய இராணுவத்துக்குத்தான்! அந்தத் தொட்டாட்டு வேலையும் மொழிபெய்ர்ப்பு வேலையையும் செய்தேன். 😀

🤣.........

உங்களுக்கு பனை ஓலை, எனக்கு பனம்பாத்தி.............

பாடசாலையில் எனக்கு ஆங்கில வகுப்பில் ஆசிரியையாக வந்து இருந்து விட்டுப் போன குலசேகரம் டீச்சரே இதை மொழிபெயர்க்க கஷ்டப்பட்டிருப்பார்....................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

எனவே, கடி வாங்காமல் இருக்க ஒரே வழி, கடி நாய்/தெரு நாயைத் தவிர்ப்பது தான். அப்படித் தவிர்க்க முடியா விட்டால், பையப் பைய (கூலாக ஒரு பாட்டை முணுமுணுத்தபடி) சாதாரணமாக நடந்து போக வேண்டும்😂. திரும்பிப் திரும்பி பார்த்து வேகமாக நடந்தால், கடி வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.

தகவல்களுக்கு நன்றி.

மிக சிறந்த வழி ஒரு ஆட்டோவை பிடித்து போவதுதான் 🤣.

எனது பயண கட்டுரையில் எழுதி உள்ளேன் 500 மீட்டருக்கு கூட ஆட்டோ பிடித்து அவமானப்பட்டுள்ளேன்.

எந்த அவமானமும் ஓக்கே, ரேபீஸ் தொற்றோடு ஒப்பிடுகையில்.

#வீரம் அறவே கூடாது.


ஒரு கேள்வி

கரடியை கண்டால் எழும்பி நிற்க வேண்டும், நம் கைகளை உயர்த்தி நம்மை பெரிதாக காட்ட வேணும் என எங்கோ வாசித்தேன்.

அதேபோல் நேற்று ஒரு வனக்காவலர் புலி நிற்கும் மனிதனை தாக்குவது குறைவு, உட்கார்ந்த நிலையில்தான் தாக்கும் என்ற ஒர் வீடியோவும் பார்த்தேன்.

இதே “பெருபிக்கும் டெக்னிக்” நாயோடு வேலை செய்யாதா?

இல்லை எனில் ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2025 at 04:49, goshan_che said:

தகவல்களுக்கு நன்றி.

மிக சிறந்த வழி ஒரு ஆட்டோவை பிடித்து போவதுதான் 🤣.

எனது பயண கட்டுரையில் எழுதி உள்ளேன் 500 மீட்டருக்கு கூட ஆட்டோ பிடித்து அவமானப்பட்டுள்ளேன்.

எந்த அவமானமும் ஓக்கே, ரேபீஸ் தொற்றோடு ஒப்பிடுகையில்.

#வீரம் அறவே கூடாது.


ஒரு கேள்வி

கரடியை கண்டால் எழும்பி நிற்க வேண்டும், நம் கைகளை உயர்த்தி நம்மை பெரிதாக காட்ட வேணும் என எங்கோ வாசித்தேன்.

அதேபோல் நேற்று ஒரு வனக்காவலர் புலி நிற்கும் மனிதனை தாக்குவது குறைவு, உட்கார்ந்த நிலையில்தான் தாக்கும் என்ற ஒர் வீடியோவும் பார்த்தேன்.

இதே “பெருபிக்கும் டெக்னிக்” நாயோடு வேலை செய்யாதா?

இல்லை எனில் ஏன்?

பெரிதாக உருவத்தைக் காட்டிக் கொள்வது நாய்களைப் பின்வாங்க வைக்காது என நம்புகிறேன். இதன் காரணம், நாய், கரடி, புலி ஆகியவை வித்தியாசமான கூர்ப்புப் பாதையில் (evolutionary behavior) வந்தமையாக இருக்கலாம்.

நாய், காட்டு விலங்கான ஓநாய்களில் இருந்து வந்தது. ஓநாய்கள் கூட்டமாகச் (pack) சேர்ந்து வேட்டையாடுபவை. பெரிய இரை விலங்கையும் சுற்றி வளைத்து தாக்கும் ஓநாய் மூதாதையரின் பழக்கம் நாய்களில் "உருவம் பெரிதானாலும் பரவாயில்லை" என்ற பயமின்மையை பதித்திருக்கக் கூடும்.

புலி, தனியாக வேட்டையாடும். நிச்சயமாக தனக்கு சேதமில்லை என்று உறுதியான இடங்களில் மட்டுமே தாக்கும் (அதுவும் பதுங்கி, இரைக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தாக்கும்).

கரடி வேட்டையாடும் விலங்கல்ல. ஆபத்தை எதிர் கொண்டால் தாக்கும், மற்றபடி சத்தம் உட்பட்ட வேறு அச்சுறுத்தல்களில் இருந்து விலகிச் செல்லும்.

இது என் ஊகம் தான், இதற்கு ஆதாரங்கள் எவையும் என்னிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

பெரிதாக உருவத்தைக் காட்டிக் கொள்வது நாய்களைப் பின்வாங்க வைக்காது என நம்புகிறேன். இதன் காரணம், நாய், கரடி, புலி ஆகியவை வித்தியாசமான கூர்ப்புப் பாதையில் (evolutionary behavior) வந்தமையாக இருக்கலாம்.

நாய், காட்டு விலங்கான ஓநாய்களில் இருந்து வந்தது. ஓநாய்கள் கூட்டமாகச் (pack) சேர்ந்து வேட்டையாடுபவை. பெரிய இரை விலங்கையும் சுற்றி வளைத்து தாக்கும் ஓநாய் மூதாதையரின் பழக்கம் நாய்களில் "உருவம் பெரிதானாலும் பரவாயில்லை" என்ற பயமின்மையை பதித்திருக்கக் கூடும்.

புலி, தனியாக வேட்டையாடும். நிச்சயமாக தனக்கு சேதமில்லை என்று உறுதியான இடங்களில் மட்டுமே தாக்கும் (அதுவும் பதுங்கி, இரைக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தாக்கும்).

கரடி வேட்டையாடும் விலங்கல்ல. ஆபத்தை எதிர் கொண்டால் தாக்கும், மற்றபடி சத்தம் உட்பட்ட வேறு அச்சுறுத்தல்களில் இருந்து விலகிச் செல்லும்.

இது என் ஊகம் தான், இதற்கு ஆதாரங்கள் எவையும் என்னிடம் இல்லை.

ஆதாரம் தேவையில்லை. நீங்கள் சொல்லுவது makes perfect sense. நன்றி 🙏.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விலங்கானாலும் மனிதனின் பயம் கண்களில் தெரிவதை சுலபமாகப் படித்து விடும் ........ மனதில் தைரியத்துடன் எதிர்கொண்டால் கையில் சிறு தடியுடன் அவற்றை எதிர்கொள்ளவோ ,தாக்குப் பிடித்து தப்பிக்கவோ முடியும் ........!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2025 at 13:31, ரசோதரன் said:

இந்திய ராணுவத்தின் மணம். அந்த மணம் அல்லது வாடை எங்கேயிருந்து அவர்களின் மேல் வருகின்றது

மாலை தீவு எம்.பிக்கள் இருவர் பல பதிவுகள் போட்டது ஞாபகம் வருகின்றது

15 வருடங்களுக்கு முதல் அவுஸில், இப்பொழுது இருக்கும் சனத்தொகை போன்று இந்தியர்கள் இருக்கவில்லை .ஒரு நாள் வட இந்திய தொழிலாளி ஒருவர் எமது தொழிற்ச்சாலையில் வேலைக்கு வந்தார் ..ஏனைய நாட்டு தொழிலாளிகள் எல்லாம் வித்தியசமாக் அவரை பார்த்தனர் ..சற்று நேரத்தில் எனையோர் என்னிடம் வந்து நீ அவனுக்கு கிட்ட போய் பார்...என சொன்னார்கள் ...உண்மையிலயே அவர் நின்ற இடம் வித்தியாசமான வாடை வந்தது உண்மை தான் ....அவர்கள் வைக்குமொரு வித எண்ணைய் மற்றும் சல்வை செய்யாத உடைகள் என நினைக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2025 at 10:02, ரசோதரன் said:

இந்த விடயத்தில் இவர்கள் செய்த இந்தக் கொடுமைகள் அப்படியே மறைக்கப்பட்டன..................😌. இவை எதையும் நிரூபிக்க முடியாது தான், ஆனால் எங்களில் பெரும்பான்மையானவர்களுக்கே இப்படி எல்லாம் நடந்தன என்று இன்றுவரை தெரியாது...................

அவர்களுக்கு(இந்திய இராணுவத்துக்கு) பலாலியிலும்,கொழும்பிலும் நினைவு தூபி உண்டு ...இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க போராடியவர்கள் என்ற செய்தி தான் அடுத்த தலமுறையினருக்கு (சிங்கள,தமிழ்)தெரிய வரும் . ,கடத்தப்படும்.....

1971 ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சியின் பொழுது அதை அடக்க வந்த இந்திய இராணுவத்தினர் எவரும் பாதிப்படயவில்லை போலும்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.