Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Simrith   / 2025 மார்ச் 05 , பி.ப. 06:37 - 0     - 13

facebook sharing button

twitter sharing button

print sharing button

whatsapp sharing button

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியதுடன் இது இலங்கையின் வடபகுதி சமூகங்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரத்நாயக்க, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க இந்திய மத்திய அரசும் தமிழக நிர்வாகமும் தங்கள் சொந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"வடக்கு மக்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த வாழ்வாதாரம் அவர்களிடமிருந்து பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.

இந்தியா இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கியிருந்தாலும், இந்த முக்கியமான பிரச்சினையை தீர்க்கத் தவறியது ஒரு கேள்வியை எழுப்புகிறது என்று அமைச்சர் கூறினார்.

"இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு உதவி செய்திருந்தாலும், இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் வடக்கின் மக்களுக்கு உதவத் தவறினால், இது உண்மையில் உதவியா என்ற கேள்வி எழுகிறது," என்று அவர் கூறினார்.

உள்ளூர் மீனவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் போராட்டங்களை எடுத்துரைத்த அமைச்சர், தெற்கத்திய சமூகங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் வடக்கில் உள்ள மீன்பிடி சமூகங்கள் பொருளாதார ரீதியாகப் போராடி வருவதாகக் கூறினார். "மன்னாரில் உள்ள மீனவர்கள், முன்பு ஒரே நாளில் சம்பாதித்ததை ஐந்து நாட்கள் கடலில் எப்படிச் செலவிடுகிறார்கள் என்பது பற்றி என்னிடம் கூறியுள்ளனர்," என்று அமைச்சர் கூறினார்.

"மக்களுக்கு உதவுவது என்பது வெறும் வெள்ள நிவாரணத்தை விநியோகிப்பதல்ல; அவர்கள் சுயமாக நிற்க வாய்ப்புகளை உருவாக்குவதாகும்" என்று ரத்நாயக்க கூறினார். "இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று அமைச்சர் கூறினார். 


Tamilmirror Online || ”இந்தியா விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”

  • கருத்துக்கள உறவுகள்

மோதி வருகிறார். அவரிடமே தீர்வுக்கு வழியை கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் சட்டவிரோத மீன்பிடியை இந்தியா தடுக்க வேண்டும்! - அமைச்சர் பிமல்

Published By: Vishnu

05 Mar, 2025 | 08:43 PM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இந்தியாவுக்கு இருந்தால் இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்திய சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினை இந்தியா வழங்க வேண்டும். இந்திய பிரதமரின் விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு  மற்றும்  சமூக வலுவூட்டல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு  மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவான மீனவர்கள் உள்ளார்கள். அத்துடன்  மீன்பிடி மற்றும் அதனுடனான தொழில்களில் அதிகளவானோர் ஈடுபடுகிறார்கள். வடக்கு பகுதியில் வாழும் மீனவர்கள் கஷ்டமான வாழ்க்கை முறைமையில் தான் உள்ளார்கள். கடற்றொழிலை மேம்படுத்துவதை போன்று அந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் அதற்கான பொறுப்பு கடற்றொழில் வளங்கள் அமைச்சுக்கு உண்டு.

வரவு - செலவுத் திட்டத்தில்  வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் அதனுடான  இணை கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. வடக்கில் அதிகளவான  கடற்றொழிலுடன் தொடர்புடைய வளங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் தெற்கில் உள்ள மீனவர்களை காட்டிலும் வடக்கில் உள்ள மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் கஸ்டப்படுகிறார்கள்.

இந்திய மத்திய அரசிடமும், தமிழ்நாடு  அரசிடமும்  விசேட கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் இலங்கையர்கள் படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் போது   அவுஸ்திரேலிய அரசாங்கம் ' படகு ஊடாக அவுஸ்ரேலியாவுக்கு  வர வேண்டாம்' என்று  பல விளம்பரங்களை அழுத்தமாக வெளியிட்டது. அத்துடன் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.

மீன்பிடி கைத்தொழிலை தவிர்த்து வடக்கு மக்களுக்கு வேறு  எந்த கைத்தொழில்களும் கிடையாது. வடக்கு மக்களின் ஒரே ஜீவனோபாயத்தை இல்லாதொழிக்க  இடமளிக்க வேண்டாம் என்று  இந்திய அரசிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள சட்டங்களை செயற்படுத்துங்கள்.  இவற்றை செயற்படுத்தாமல் வடக்கு மக்களின் நலன்புரி பற்றி பேச முடியாது.

இதன்போது எழுந்து உரையாற்றிய  தமிழ் முற்போக்கு  கூட்டடணியின் தலைவர் மனோ கணேசன்,  உங்களின் கருத்து மிகவும் முக்கியமானது, இந்திய பிரதமர்  எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். ஆகவே  தயவு செய்து பேச்சுவார்த்தையில்  ஒழுங்கில் இந்த விடயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

வடக்கு மக்களுக்கு இது பாரியதொரு பிரச்சினை. எமது சொத்துக்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள். யுத்தம் முடிந்து 15  வருடங்கள் ஆகி விட்டது.இந்தியா உதவி செய்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள்  நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய  பிமல் ரத்நாயக்க, இது பாரதூரமான பிரச்சினை. அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்தினால் நிறுத்த முடியும். இந்திய அரசாங்கம்  இலங்கைக்கு  பல உதவிகளை செய்கிறது.  வடக்கு மக்களின்  இந்த பிரச்சினைக்கு  தீர்வு காணாமல்  வழங்கும் உதவிகள் உண்மையானதாக அமையாது.

இந்திய மீனவர்களின்  எல்லை மீறல் செயற்பாடு நாளாந்த பிரச்சினையாகவே காணப்படுகிறது. இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்க வேண்டும். இந்திய அரசாங்கம் இந்த  பிரச்சினைக்கு  உடன் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

https://www.virakesari.lk/article/208391

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் : இந்தியாவுடன் முரண்பட நாங்கள் இடமளிக்கப்போவதில்லை : சீனாவின் தலையீடும் உள்ளது - செல்வம்

05 Mar, 2025 | 05:34 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எமது கடல் எல்லைக்குள் இந்திய மீன்பிடிப் படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும். இந்த பிரச்சினையை காரணமாகக்கொண்டு இந்தியாவுடன் முரண்படுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. இதில் சீனாவின் தலையீடும் இருந்து வருகிறது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாகாப்பு மற்றும் சமூகவலுவூட்டவ் அமைச்சு மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

போர்க்காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் எமது மீனவர்களின் வாழ்க்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

இந்திய மீனவர்களின் இழுவைப்படகு பிரச்சினை அங்கு பூதாகரமாக வெடித்திருக்கிறது.மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்கு காப்புறுதி திட்டம் ஒன்று கூட இதுவரை இல்லாமல் இருக்கிறது.அதனால் மீனவர்கள் தங்களின் உடமைகளை இழக்கும்போது அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இந்தியாவை பகைத்துக்கொள்ளாமல் இந்திய டோனர்கள் கடல் எல்லைக்குள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுத்தால், அவர்களின் பிரச்சினைக்கு மாற்று திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக எமது மீனவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்ப்பாக நாங்கள் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்ககை சந்தித்து கலந்துரையாடியபோது, ஆழ் கடல் மீன்பிடி முறையை அறிமுகப்படுத்தினால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என நாங்கள் ஆலாேசனையாக தெரிவித்திருந்தோம்.

அதனால் அரசாங்கம் இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாட தமிழ் நாட்டு மற்றும் இந்திய மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுங்கள். அதற்கு நாங்கள் எமது ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறோம். அப்போது இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க வருவதற்கான வழி முறையை நாங்கள் தெரிவிப்போம்.

அதனால் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் முல்லைத்தீவு அல்லது மன்னாரில் மீன்பிடி வளாகத்தில் மீன்பிடி துறைமுகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன் மூலம் மீனவர் பிள்ளைகளுக்கு கடல்சார் கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதன் மூலம் மீனவர் சமூகத்தின் கல்வி நிலையில் முன்னேற்றத்தை மேற்கொள்ள முடியும். அதேநேரம் கடற்றொழில் நடவடிக்கையை முன்னேற்ற அமைச்சர் எடுக்கும் நடவடிக்கையை செயற்படுத்த வேண்டுமானால் அங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியமாகும். ஊழல் அற்ற அதிகாரிகள் இருக்கவேண்டும். அதனால் அங்குள்ள நீண்கால அதிகாரிகளை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம் இந்திய இழுவைப்படகை வைத்துக்கொண்டு இந்தியாவுடன் நாங்கள் முரண்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இந்த விடயத்தில் சீனாவின் தலையீடும் இருந்து வருகிறது, சீனா இன்று வடக்கிலே எமது மீனவர்களுடன் எந்த அர்த்தத்தில் நாடுகின்றனர் என கேட்கிறேன்.

நிலங்களை கைப்பற்றுவதும் வளங்களை ஆக்கிரமிப்பதுமே சீனாவின் சிந்தனை. அதனூடாக வடக்கிலே எந்த நடவடிக்கையையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. வடக்கில் இந்தியாவை தவிர வேறு ஒரு நாடு மூக்கை நுழைவிப்பதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/208362

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.