Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

09 Mar, 2025 | 10:07 AM

image

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (42)இ தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த‌ டேனியல் ஜேம்ஸ் (23) ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (27) சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண் இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

உள்ளூர் இளைஞர்கள் அட்டகாசம்: அப்போது அங்கு வந்த உள்ளூர் இளைஞர்கள் 3 பேர் அவர்களிடம் 'பெட்ரோல் இருக்கிறதா? இல்லையென்றால் ரூ.100 கொடுங்கள்' என‌ கன்னடத்தில் கேட்டுள்ளனர். அதற்கு பங்கஜ் பாட்டீல் 'இல்லை' என பதிலளித்துள்ளார். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் சுற்றுலா பயணிகளிடம் இருந்த கிடாரை பிடுங்கிக்கொண்டு ''பணம் தராவிட்டால் அதனை கால்வாயில் போட்டுவிடுவோம்'' என மிரட்டியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த இளைஞர்கள் 3 ஆண்களையும் கற்களால் தாக்கி கால்வாயில் பிடித்து தள்ளி விட்டனர். இஸ்ரேலை சேர்ந்த 27 வயது பெண்ணையும் சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான‌ பெண்ணையும் மலையடிவாரத்துக்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்த 3 செல்போன்கள் ரூ.9,500 ரொக்கம் 1 லேப்டாப் ஆகியவற்றையும் பறித்து சென்றுள்ளனர்.

கால்வாயில் இருந்து தப்பித்த பங்கஜ் பாட்டீல் அமெரிக்காவை சேர்ந்த டேனியல் ஜேம்ஸை சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளார். ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் நீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து பங்கஜ் பாட்டீல் கங்காவதி போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அங்கு வந்த போலீஸார் பாதிக்கப்பட்ட 2 பெண்களையும் 2 ஆண்களையும் மீட்டு கொப்பல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சனாப்பூர் கால்வாயில் 6 மணி நேரம் தேடியதை தொடர்ந்து பிபாஷ் குமார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொப்பல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2 பேர் கைது: இதனிடையே கொப்பல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசித்தி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ''இந்த சம்பவம் குறித்து விடுதி உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் பாலியல் வன்கொடுமை கொள்ளை கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 2 பெண்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 2 ஆண்களும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கங்காவதியை சேர்ந்த சாய் மல்லு (27)இ சேத்தன் சாய் (26) ஆகிய 2 பேரை கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்துள்ளோம்'' என்றார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/208670

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் இஸ்ரேலை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம், தடுக்க வந்த நபர் கொலை - என்ன நடந்தது?

கர்நாடகா பாலியல் வல்லுறவு , Karnataka rape, இஸ்ரேல் சுற்றுலா பயணி பாலியல் வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, வெளிநாட்டுப் பயணி தாக்குதல்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

8 மார்ச் 2025

கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணி உள்பட இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு, அவர்களைக் காப்பாற்ற வந்த ஒருவரைக் கொலை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் பிபிசிக்கு அளித்த தகவலின்படி, இஸ்ரேலை சேர்ந்த 27 வயது சுற்றுலாப் பயணி, 29 வயது உள்ளூர் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தார்.

இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என 3 ஆண்களும் உடன் சென்றிருந்தனர்.

மார்ச் 6ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு ஐந்து பேரும் ஹம்பி அருகே உள்ள சனாபூரில் இருக்கும் துர்கையம்மன் கோவிலுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் எங்கு கிடைக்கும் எனக் கேட்டதாக பாதிக்கப்பட்ட உள்ளூர் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு வழி காட்டிய பின்னர், குற்றம் சாட்டப்படும் மூவரில் ஒருவர் சுற்றுலாப் பயணிகளிடம் 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்ததைத் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

"அவர்கள் மூன்று ஆண்களையும் கால்வாயில் தள்ளினர். மூன்றாவது நபர் என்னை ஒரு கல்லால் தாக்கினார். எனக்கு ரத்தம் வழியத் தொடங்கியது. மூவரில் இருவர் என்னை கால்வாயின் பக்கமாக இழுத்துச் சென்று எனது உடைகளைக் கிழித்தனர். அதே போல் அவரையும் (இஸ்ரேல் சுற்றுலா பயணி) இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்," என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கன்னடமும் தெலுங்கு மொழியும் பேசியதாக புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.

ஒருவர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் பயணி உட்பட இருவர் பாலியல் வல்லுறவு – இரண்டு பேர் கைது

பட மூலாதாரம்,Getty Images

கால்வாயில் தள்ளப்பட்டவர்களில் வெளிநாட்டவர் உள்பட இருவர் கரையேறிய நிலையில், ஒருவர் சடலமாக இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது மற்றும் ஒருவரைக் கொலை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"கைது செய்யபட்ட இருவரும் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த கொத்தனார்கள். மூன்றாவது நபரைத் தேடி வருகிறோம். அவரும் ஒரு கொத்தனார்தான்," கொப்பல் காவல் கண்காணிப்பாளர் ராம் எல் அரசிடி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

"கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டுள்ளோம். கொலை முயற்சி வழக்குடன், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளைச் சேர்த்துள்ளோம்," என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

"பெண்கள் பணத்தைப் பறிப்பதற்காகத் தாக்கப்பட்டிருக்கலாம். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் கொப்பலின் கங்காவதி தாலுகாவை சேர்ந்தவர்கள்," எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cd0n7r5z1vgo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.