Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மியான்மர் நிலநடுக்கம்

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை மாலை மியான்மர் ராணுவம் வெடிகுண்டு வீசியதாக கூறப்படும் பகுதியில் சேதமடைந்த கட்டடங்களின் சில புகைப்படங்கள் பிபிசிக்கு அனுப்பப்பட்டுள்ளன

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரெபெக்கா ஹென்ஷ்கே

  • பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் சில பகுதிகளில் ராணுவம் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது.

இந்த தாக்குதல்கள், "அதிர்ச்சிகரமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என ஐ.நா சபை விவரித்துள்ளது.

நிலநடுக்கத்துக்குப் பிறகு மக்களை மீட்பதற்கு நாம் முயற்சித்துவரும் வேளையில் ராணுவம் "வெடிகுண்டுகளை தொடர்ந்து வீசுவது முற்றிலும் நம்ப முடியாததாக உள்ளது" என ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் டாம் ஆன்ட்ரூஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு மூலமாக அந்நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவம், தனது அனைத்து (தாக்குதல்) நடவடிக்கைகளையும் கைவிடுமாறு அவர் வலியுறுத்தினார்.

"ராணுவம் மீது செல்வாக்கு உள்ள எவரேனும் அதன் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டும்," என அவர் கூறினார்.

"ராணுவ ஆட்சியாளர்கள், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்," என்றும் அவர் கூறினார்.

தாக்குதலில் ஏழு பேர் பலி

நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நௌங்சோவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக, பிபிசி பர்மிய சேவை உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு குறைந்தது மூன்று மணிநேரத்துக்குள் உள்ளூர் நேரப்படி மாலை 03.30 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட முக்கிய பகுதியான சர்காயிங் பிராந்தியத்தின் வட-மேற்கு பகுதியில் உள்ள சாங்-யூ டவுன்ஷிப்பில் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றதாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கிளர்ச்சிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இக்குழுக்கள் ராணுவ ஆட்சியை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக போராடி வருகின்றன.

ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு (என்யூஜி), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் "தங்களை பாதுகாத்துக்கொள்ள எதிர் தாக்குதல்களை தவிர்த்து, இன்றிலிருந்து (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு வாரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக," அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

மியான்மர் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்காயிங்கில் 7.7 என்ற அளவில் பதிவான கடும் நிலநடுக்கம் அருகிலுள்ள நாடுகளிலும் உணரப்பட்டது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மற்றும் 241 கி.மீக்கு அப்பால் உள்ள தலைநகர் நேபிடோ ஆகியவற்றிலும் நிலநடுக்கத்தால் அழிவுகள் ஏற்பட்டன.

1,644 பேர் இதில் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என்றும் ராணுவ ஆட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் போர்

2021-ல் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்து, நான்கு ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் வீதிகளில் இறங்கி, மக்களாட்சியை நிறுவுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாதாரணமான அளவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், விரைவிலேயே ஜனநாயகத்துக்கு ஆதரவான குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களின் பெரும் எதிர்ப்பாக உருவெடுத்து, முழு அளவிலான உள்நாட்டுப் போராக மாறியது.

இந்த நான்கு ஆண்டுகளில் ஒருபுறம் ராணுவம், மற்றொரு புறம் கிளர்ச்சிக் குழுக்கள், ஆயுதக் குழுக்களுக்கு இடையே வன்முறை போராட்டம் தொடர்ந்து வருகிறது.

பெரும்பகுதிகளை இழந்த ராணுவம்

ராணுவம் இந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக, அவமானகரமான தோல்விகளை சந்தித்து, பெருமளவிலான நிலப்பகுதியை இழந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஏற்படும் எதிர்ப்பை எதிர்கொள்ள வான்வழித் தாக்குதல்களையே ராணுவம் பெருமளவில் நம்பியுள்ளது.

நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள சர்காயிங் பிராந்தியத்தின் பெரும்பகுதிகள் ஜனநாயகத்துக்கு ஆதரவான எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து நான்கு ஆண்டுகளாகியும் நாட்டின் கால்வாசி பகுதிகள் கூட ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என, பிபிசி நடத்திய புலன் விசாரணை மூலம் தெரியவந்தது.

கிளர்ச்சிக் குழுக்கள் மற்றும் எதிர்ப்பு குழுக்கள் நாட்டின் 42% நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள பகுதியில், பெரும்பாலான இடங்களில் சண்டை நடந்து வருவதாகவும் புலன் விசாரணை கூறுகிறது.

மியான்மர் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,மியான்மர் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டடம்

வான்வழி தாக்குதல்களில் ராணுவத்தின் கை ஓங்கியுள்ளது. வான்வழி தாக்குதல்களை முறியடிப்பதில் எதிர்ப்பு குழுக்களுக்கு போதாமை உள்ளது.

எவ்வித பாரபட்சமும் இன்றி, ராணுவத்தால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் பள்ளிகள், மடங்கள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மிக மோசமான வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 170 பேர் கொல்லப்பட்டனர்.

ராணுவம் தங்கள் நாட்டு மக்களுக்கு எதிராகவே போர் குற்றங்கள் மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களை புரிவதாக, அந்நாட்டில் நிலவும் வன்முறைகள் குறித்து விசாரிக்கும் ஐ.நா. அமைப்பு எச்சரித்துள்ளது.

ரஷ்யா, சீனா ஆதரவு

ரஷ்யா மற்றும் சீனாவின் உதவியால், ராணுவத்தின் வான்வழி தாக்குதல்கள் தொடர்கிறது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்வினையாக ஐ.நா. ராணுவத்துக்கு எதிராக ஆயுதத்தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ள போதிலும், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ராணுவத்துக்கு அதிநவீன ஜெட் விமானங்கள் மற்றும் அவற்றை எப்படி இயக்குவது என்ற பயிற்சியையும் வழங்கியுள்ளன.

ரஷ்யா மற்றும் சீனா மியான்மருக்கு தற்போது உதவிகளையும் மீட்பு குழுக்களையும் அனுப்பியுள்ளன. ஆனால், பிரிட்டனை சேர்ந்த பர்மிய செயற்பாட்டாளர் ஜூலி கின், "எங்களின் அப்பாவி மக்களை கொல்வதற்கு கொடூரமான ஆயுதங்களை ராணுவத்துக்கு வழங்கிய இந்த நாடுகளின் அனுதாபத்தை நம்புவது கடினமானது." என தெரிவித்தார்.

மியான்மர் நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மியான்மர் ராணுவ தலைவர் மின் ஔங் ஹ்லேய்ங் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்

உதவிக் குழுக்களின் அச்சம்

நிலநடுக்கத்துக்காக அனுப்பப்படும் உதவிகளை உள்நாட்டுப் போருக்கு ராணுவம் ஆயுதமாக பயன்படுத்தக்கூடும் என்றும் பரவலாக கவலை எழுந்துள்ளது.

எதிர்ப்பு குழுக்கள் தீவிரமாக இயங்கிவரும் பகுதிகளில் உதவிகளை மறுக்கும் வழக்கத்தை மியான்மர் ராணுவம் நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது.

ஐ.நாவின் டாம் ஆன்ட்ரூஸ் பிபிசியிடம், கடந்த காலங்களில் நிவாரண பணிகளின்போது, ராணுவம் உதவிகளை தடுத்து, தன்னார்வலர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

"ராணுவ நிர்வாகம் உண்மையை வெளிப்படுத்தாது என்பதே, கடந்த காலங்களில் ஏற்பட்ட மானுட பேரழிவுகள், இயற்கை பேரழிவுகளில் இருந்து எங்களுக்கு தெரிந்தது. மனிதநேய உதவிகள் எங்கு அதிகம் தேவைப்படுகிறதோ அங்கு அவற்றைத் தடுக்கும் வழக்கத்தையும் ராணுவம் கொண்டுள்ளது," என்றார் அவர்.

"உதவிகளை அவர்கள் ஆயுதமாக்கிக் கொள்வார்கள். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு உதவி பொருட்களை அனுப்பிவிடுவார்கள், தங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்கு அனுப்ப மறுத்துவிடுவார்கள்.

"எங்கெல்லாம் அதிக உதவிகள் தேவைப்படுகிறதோ, அங்கு வழிகளை மறித்து, அவற்றை கொண்டு செல்வோரை கைது செய்வார்கள், கடந்த காலங்களில் இயற்கை பேரிடர்களுக்கு உதவிப்பொருட்கள் கொண்டு செல்வதில் அவர்களின் அணுகுமுறை இப்படித்தான் இருந்தது.

"இந்த பேரிடரிலும் இப்படித்தான் நடக்கும் என நான் அஞ்சுகிறேன், அப்படித்தான் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg7292j0djpo

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கிழமை போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.