Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14515723s-m-ranjith.jpg?resize=650%2C375

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுள்ளது .

மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது

இவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்ததுடன் அவர்கள் சட்டவிரோதமாக ரூ. 100,000 பணத்தைப் பெற்று ஊழல் குற்றத்தைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427141

  • கருத்துக்கள உறவுகள்

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

https://thinakkural.lk/article/316753

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவரின் மைத்துனிக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Published By: DIGITAL DESK 3 02 APR, 2025 | 11:16 AM

image

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது மைத்துனி சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (2) 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஆணைக்குழு  ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முன்னெடுத்த நீண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ்.எம் ரஞ்சித் சமரகோன் வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக செயற்பட்ட போது அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய ஷாந்தி சந்திரசேன முறையற்ற விதத்தில் இலாபமீட்ட இடமளித்தமை, எரிபொருள் கொடுப்பனவு சம்பளத்துடன் வழங்கப்பட்ட நிலையிலும் எரிபொருள் கொள்வனவு வவுச்சரின் ஊடாக 26,000,00 ரூபாவுக்கும் அதிகமான தொகையை வழங்கியமை, அவ்வாறு வழங்குவதற்கு அரச அதிகாரிகளைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தமது தீர்ப்பை அறிவித்த நீதிபதி சந்தேகநபர்களுக்கு எதிரான முறைப்பாட்டின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கமைய இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய ஊழல் குற்றத்தை இழைத்தமைக்காக சந்தேகநபர்கள் இருவரையும் குற்றவாளிகளாக தீர்மானித்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தண்டனையை அறிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/210890

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

எஸ்.எம். குமாருக்கு

32 minutes ago, ஏராளன் said:

எஸ்.எம். ரஞ்சித்

குமாரா? ரஞ்சித்தா?

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித் குமார வாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

குமாரா? ரஞ்சித்தா?

2 hours ago, satan said:

ரஞ்சித் குமார வாக இருக்கலாம்.

4 hours ago, ஏராளன் said:

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எஸ்.எம் ரஞ்சித் சமரகோன் வட மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக செயற்பட்ட போது அவரது தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய ஷாந்தி சந்திரசேன முறையற்ற விதத்தில் இலாபமீட்ட இடமளித்தமை, எரிபொருள் கொடுப்பனவு சம்பளத்துடன் வழங்கப்பட்ட நிலையிலும் எரிபொருள் கொள்வனவு வவுச்சரின் ஊடாக 26,000,00 ரூபாவுக்கும் அதிகமான தொகையை வழங்கியமை, அவ்வாறு வழங்குவதற்கு அரச அதிகாரிகளைத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

அவரின் முழுப்பெயர் எஸ்.எம் ரஞ்சித் சமரகோன் என்று உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

488644746_1104771874999003_8740359635273

488035454_1104771878332336_5784896295987

488248013_1104771924998998_1517271849643

488043850_1104771918332332_6223542824849

ராஜபக்‌ஷ, ரணில் ஆகியோருடன் கூட்டு கட்சிகளில் இருந்த, முன்னாள் வடமத்திய முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தினி சந்திரசேன ஆகியோருக்கு லஞ்ச குற்றசாட்டில் பதினாறு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் தண்டனையை அனுபவிக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் இவை.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

Former NC CM S.M. Ranjith sentenced to 16 years in prison

April 2, 2025 at 9:57 AM

maxresdefault-2.jpg

Former Chief Minister of North Central Province S.M. Ranjith and his former secretary Shanthini Chandrasena were each sentenced to 16 years of rigorous imprisonment, for corruption charges brought by the Bribery Commission.

The Bribery Commission alleged that first accused S.M. Ranjith while serving as the North Central Province Chief Minister had made arrangements to allocate fuel for the official vehicle of his private secretary Shanthi Chandrasena, despite her fuel allowance being already added to her salary.

S.M. Ranjith is the brother of former Minister S.M. Chandrasena, while Shanthini Chandrasena is Chandrasena’s wife.

She served as the private secretary to Chief Minister Ranjith during his tenure from 2012 to 2014.

The Bribery Commission filed a case against Shanthini Chandrasena for allegedly obtaining fuel worth Rs. 2,680,528 and Rs. 5,379,623 through vouchers during this period.

Both she and Ranjith have also been charged with influencing provincial councilors to release two additional vehicles, in addition to the Chief Minister’s two official cars and security vehicle. (Newswire)

https://www.newswire.lk/2025/04/02/former-nc-cm-s-m-ranjith-sentenced-to-16-years-in-prison/

Samarakoon Mudiyanselage Ranjith known as S. M. Ranjith is the fifth Chief Minister of the North Central Province of Sri Lanka.[1][2][3] He belongs to the Sri Lanka Freedom Party and part of the United People's Freedom Alliance.

https://en.wikipedia.org/wiki/S._M._Ranjith

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14515723s-m-ranjith.jpg?resize=650%2C375

பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்தார் முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர்!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்தது. .

மேலும், பிரதிவாதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதுள்ளது

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1427287

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.