Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3 07 APR, 2025 | 01:01 PM

image

வட கொரியாவில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக பியோங்யாங் சர்வதேச மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த மரத்தன் ஓட்டப்போட்டியில்  சுமார் 200 வெளிநாட்டு வீரர்களை  வட கொரியாவின் தலைநகர் வரவேற்றுள்ளது.

1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மரத்தன் ஓட்டப் போட்டி வட கொரியாவின் முதல் ஜனாதிபதி  கிம் இல் சுங்கின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நடத்தப்படுகிறது.

இறுதியாக 2019 ஆம் ஆண்டு மரத்தன் ஓட்டப் போட்டி நடைபெற்றது. அதில் 950 வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொவிட்-19 தொற்று பரவியமையை அடுத்து வட கொரியா மரத்தன் ஓட்டப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், வடகொரியா மீண்டும் போட்டியை நடத்த கடந்த ஆண்டு முதல் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மட்டுமே அதன் தலைநகருக்குள் அனுமதித்தது.

தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போலவே, ஓட்டப்பந்தய வீரர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுலா குழுவின் ஒரு பகுதியாக நாட்டிற்குள் நுழைய வேண்டியிருந்தது.

போட்டி  நிகழ்வின் பிரத்தியேக பங்காளராக திகழும் பீஜிங்கை தளமாகக் கொண்ட பயண நிறுவனமான கோரியோ டூர்ஸ், பீஜிங்கிற்குச் சென்று திரும்புவதற்காக 2,195 யூரோக்களுக்கு விமான பயணம் உட்பட ஆறு நாள் மரத்தன் சுற்றுப்பயணங்களை வழங்குகிறது.

"பியோங்யாங் மரத்தன் மிகவும் தனித்துவமான அனுபவமாகும், ஏனெனில் இது உள்ளூர் மக்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது" என அந்த நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மரத்தன் ஓட்டப்போட்டி கிம் இல் சுங் மைதானம், ஜப்பானிய ஆட்சியை எதிர்ப்பதில் கிம் இல் சுங்கின் பங்கை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட வெற்றி வளைவு, மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கான குடியிருப்பு மாவட்டம் என கூறப்படும் “ மிரே எதிர்கால விஞ்ஞானிகள் வீதி ”உள்ளிட்ட நகரத்தின் அடையாளங்களைக் கடந்து வீரர்களை அழைத்துச் சென்றுள்ளது.

ஓட்டப்போட்டி வீரர்கள் தங்கள் பந்தயத்தைத் ஆரம்பித்து முடிக்கும் வரை அரங்கம் பார்வையாளர்களால் நிரம்பியிருப்பதை இணையத்தில் வெளியாகியுள்ள படங்கள் காட்டுகின்றன, அவர்களில் பலர் தங்க நிற காகிதக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்கிறார்கள்.

"எங்கள் மக்களின் கண்கள் என் மீது இருந்ததால், நான் சோர்வாக உணரும் போதெல்லாம் சிரமங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது." என வட கொரிய ஓட்டப்பந்தய வீரரான பாக் கும் டோங், ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பந்தய முடிவுகள் குறித்து பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை. வட கொரியா 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் குறைக்க மட்டுமே திட்டமிட்டிருந்தது.

பெப்ரவரி மாதத்தில் தொலைதூர, கிழக்கு நகரமான ரேசனுக்குள் சில மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது, ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு அந்த சுற்றுலாப் பயணிகள் வருகையை நிறுத்தியது.

https://www.virakesari.lk/article/211368

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.