Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2 08 APR, 2025 | 04:51 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

முறையற்ற  சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு  அரசாங்கம் எடுக்கும்  சிறந்த  தீர்மானங்களுக்கு  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில  தொழில்நுட்ப சிக்கல்களுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற முறையற்ற  சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம்  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியதாவது,

எவரேனும் நபர் சட்டவிரோதமான முறையில்  சொத்துக்களை ஈட்டியிருந்தால் அவற்றை சட்டத்தின் ஊடாக  அரசுடமையாக்கிக் கொள்ளும் இயலுமை காணப்படுகிறது. அத்துடன் குறித்த சொத்தின் முதல் உரித்தாளருக்கு சொத்தை  உரித்தாக்கவும் முடியும். குற்றம் தொடர்பில் முறையான காரணிகள் மற்றும் சாட்சியங்கள் இருக்க வேண்டும்.

அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட அனைவரும்  முறையற்ற வகையில் சொத்து சேர்த்திருந்தால் அது சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்.  சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே பேசப்பட்டது.

மோசடி செய்யப்பட்ட சொத்துக்களை மீண்டும் அரசுடமையாக்குவது தொடர்பில்  2015.05.01 ஆம் திகதியன்று ஜனாதிபதி சட்டத்தரணி வெலியமுன தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இந்த செயலணியில் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய  நீதியரசர் யசந்த கோதாகொட உட்பட13 பேர்   சேவையாற்றினார்கள். இந்த சட்டம் உருவாக்களுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 2022 ஆம் ஆண்டு நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையில் விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டு, இந்த சட்ட வரைவு பணிகள் நிறைவுப்படுத்தப்பட்டன. இவ்வாறான பின்னணியில்   ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்த சட்டமூலத்தை எவரும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தவில்லை. நீதிமன்ற விசாரணைக்கு இந்த சட்டமூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால்  காணப்படும் ஒருசில பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்.

இந்த சட்டமூலத்தில்  உறுப்புரை 53, 55, 56  உட்பட பல  பிரிவுகளில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதிப்புக்களில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த சிக்கல்கள் குறித்து  அரசாங்கம் விசேட கவனம் செலுத்த  வேண்டும். நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு  இந்த சட்டம் சிறந்த முறையில் இயற்றப்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/211508

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

08 APR, 2025 | 07:31 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

சட்டவிரோதமான முறையில்  ஈட்டப்பட்ட சொத்துக்கள்  மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்  பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற முறையற்ற சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம்  மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சட்டவிரோதமான  முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதாக நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிச்சயம்  நிறைவேற்றுவோம்.  இதற்கான முதல் கட்டமாகவே முறையற்ற  வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவது  தொடர்பான சட்டமூலம்  கொண்டு வரப்பட்டுள்ளது.

தண்டனை சட்டக்கோவை, பொது சட்டம், ஊழல் சட்டம் ஆகிய சட்டங்களில் காணப்படும் குறைப்பாடுகள்  இந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில்  முறையற்ற வகையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள  சொத்துக்கள் இந்த புதிய  சட்டத்தின் ஊடாக அரசுடமையாக்கப்படும்.

இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மோசடி செய்யப்பட்ட அரச சொத்துக்கள் மற்றும் அரச நிதி அரசுடமையாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கடந்த காலங்களில் அழுத்தமாக  வலியுறுத்தினார்கள். மக்களின் அபிலாசைக்கு அமைவாகவே இந்த சட்டம் சர்வதேச கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முறையற்ற வகையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை சட்டத்தின் பிரகாரம் அரசுடமையாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சட்டத்தின் பிரகாரம்   விசேட பொறிமுறைகள் வகுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/211536

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களை உங்களால் முடக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச சொத்துக்களில் ஊழல், மோசடி செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது - சுனில் ஹந்துன்நெத்தி

08 APR, 2025 | 09:34 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டில் கடந்த காலங்களில் அரச சொத்துக்களில் ஊழல் மோசடி செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த தற்போது அரசாங்கத்துக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதற்கு தேவையான சட்டமாகவே குற்றச்செயல்கள் மூலம்  ஈட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்ட திருத்தம் அமைகிறது. ஆனால், இந்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்ற உறுதியை வழங்குகிறோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) நடைபெற்ற குற்றச்செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கும் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குமான ஒரு சட்டமாகவே இந்த சட்டம் அமைகிறது. எமது நாட்டில் மோசடிகளுக்கு எதிரான அதிகமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகளால் அந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சட்டத்தை அவர்களுக்கு தேவையான முறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதனால் உரிமையாளர் இல்லாத பொருட்கள் வெளிப்பட்டன. அதனால் இந்த சட்டத்தை நாங்கள் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்ற உறுதியை வழங்குகிறோம்.

அதனால் இந்த சட்டம் மக்களுக்காகவும் மக்களின் அபிலாசைகளுக்காகவுமே பயன்படுத்தப்படும். யாரையும் பாதுகாக்க பயன்படுத்தப்படாது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த சபையில் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, ஒரு தடவை அன்று ஆளும் கட்சியில் முதலாம் வரிசையை பாரத்து, தனக்கு அதிகாரம் இருக்குமானால் இங்கு முன்வரிசையில் இருப்பவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அந்த அதிகாரத்தை மக்கள் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு வழங்கியுள்ளது. ஆனால் சொன்ன விடயத்தை இன்னும் செயற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எமக்கு எதிராக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பல குற்றச்சாட்டுக்கள் எமது அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் எமக்கு நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் சட்ட ரீதியில் இதனை மேற்கொள்ள வேண்டி இருந்தது. அதனாலே தற்போது இந்த சட்டத்தை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.இந்த சட்டம் மூலம் முறையற்ற முறையில் சொத்து சேர்த்தவர்கள், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமான சூழல் அமைகிறது. நாட்டு மக்கள் எமக்கு வாக்களிக்க பிரதான காரணம்தான் பிணைமுறை மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாகும். தற்போது அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

அதேபோன்று சீனி வரி மோசடி, சீனாவில் இருந்து கழிவு உரம் கொண்டுவந்தமையால் ஏற்பட்ட நட்டம். கரவை பசுக்களை அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவருவதன் மூலம்16 பில்லியன் ரூபா மோசடி போன்ற மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவர தற்போது இந்த சட்டம் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. எனவே இதுபோன்று நாட்டுக்கும் மக்களுக்கும்  ஏற்பட்ட அனைத்து மோசடிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்தி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/211537

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.