Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

486741201_3470466563085055_9213509431760

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் பதில் கூற வேண்டும்.. மெளனம் காத்தால் சம்மதமா !!!!

பல நூறு மாணவர்களின் கல்வி சார்ந்த பொறுப்பை நடுத்தெருவில் விட்டுவிட்டு மாநகர பதவிக்காக ஜேவிபியின் பின்னால் அலையும் பல்கலைக்கழக விரிவுரையாளர்.

தற்போது ஜேவிபியின் பின்னால் அலையும் கபிலன் என்ற யாழ்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி சார்ந்த பல பொறுப்புக்களை நட்டநடுத்தெருவில் விட்டு விட்டு ஜேவிபி காட்டிய பதவி ஆசையில் ஜேவிபியிற்கு பின்னால் திரிகிறார்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத் தகவல்களின் படி கபிலன் என்ற நபர் அவருக்கு வழங்கப்பட்ட பல பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவுசெய்து கையளிக்காமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு தனது ராஜனாமா கடிதத்தினை துணைவேந்தரிடம் கையளித்துவிட்டு வெளியேறியதாக அறிய முடிகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல மாணவஅணிகளின் பரீட்சை வினாத்தாள்களை திருத்தி கையழிக்கவில்லை என குற்றம் சாட்டடப்படடுகிறது.

அது மட்டுமல்ல பல மாணவ அணிகளின் விரிவுரைகளை நிறைவுசெய்ய வில்லை எனவும் அவற்றை அரைகுறையாக விட்டு தேர்தலுக்காக பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும் மாணவர்களின் செய்முறை பயிற்சிகள் மற்றும் திட்டங்களையும் நிறைவுசெய்யாமல் பாதியில் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு இறுதிவருட மாணவர்களின் ஆய்வு மேற்பார்வை விடயங்களையும் அரைகுறையாக விட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக மாதாந்தம் பல இலட்சம் ரூபா ஊதியமாகப்பெற்ற ஒருவிரிவுரையாளர் ஒரு பொறுப்புணர்வின்றி தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் கையளிக்காமல் மாநகர சபைப்பதவிக்காக ஜேவிபியின் காலில் விழுந்துள்ளார்.

பல்கலைக்கழக விடுப்பில் பல லட்சம் ரூபா மாதாந்த ஊதியத்துடன் உயர்படிப்பை படித்து நிறைவுசெய்த பின்னர் தனது கல்வி முன்னேற்றத்திற்கு அடித்தனமாக இருந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களையும் உரிய முறையில் கவனிக்க தவறிய ஒருவர் ஒரு பொறுப்புள்ள கல்விமானாக இருக்கமுடியாது.

இத்தகையை பொறுப்பற்ற ஒருவர் இனவாத சக்தியான ஜேவிபியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்னத்தை கிழிக்க போகிறார் என்பது தான் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள கேள்வி.........

ஜேவிபியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும் கபிலன் மாநகர சபைத்தேர்தலில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி பதவியாசையில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்தவர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார் என்பது தான் ஜதார்த்தம்........

Sornalingam Varnan

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிடுவதானல் அரச பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி சட்டப்படி ராஜனாமா செய்துள்ளார். இதில் என்ன பிரச்சனை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.