Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN 11 APR, 2025 | 03:26 PM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  புதிய வரிகளை 90 நாட்களிற்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பதற்கு முன்னர் தனது ஆதரவாளர்களை பங்குகளை கொள்வனவு செய்யுமாறு தூண்டியதன் மூலம் சந்தையை தனக்கு ஆதரவானவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் பல செனெட்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டிரம்ப் தனது வரிக்கொள்கையில் மாற்றங்களை அறிவிக்கப்போகின்றார் என்பது அவரது நிர்வாகத்தை சேர்ந்த யாருக்கு முன்கூட்டியே தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சியின் செனெட்டர் அடம் ஷிப் யாராவது பங்குகளை கொள்வனவு செய்து விற்று இலாபம் சம்பாதித்தார்களா என  கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து நான் வெள்ளை மாளிகைக்கு எழுதப்போகின்றேன் மக்களிற்கு உண்மையை அறிவதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

trump_stock.jpg

அமெரிக்காவின் ஜனாதிபதி உலகின் மிகப்பெரிய சந்தையை தனக்கு சாதகமாக கையாளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் நிதிசேவை குழுவில் இடம்பெற்றுள்ள ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அமெரிக்க பங்குசந்தை இயங்க ஆரம்பித்த சில நிமிடங்களில் டொனால்ட் டிரம்ப் இது பங்குகளை கொள்வனவு செய்வதற்கான தருணம் என தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஒரு மணித்தியாலத்தின் பின்னரே அவர் உலக நாடுகளிற்கான தனது புதிய வரியை 90 நாட்களிற்கு ஒத்திவைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

டிரம்ப் தனது சமூகஊடகமான ட்ரூத்சோசியல் பதிவில் டிஜிடி என்ற  எழுத்துக்களுடன் கையெழுத்திட்டிருந்தார். இது அவரது முதல் எழுத்து என்பதுன் அவரது ஊடக நிறுவனமான  டிரம்ப் மீடியா டெக்னோலஜி என்பதன் சுருக்கமாகும்.

இதேவேளை விசாரணைக்கான தேவை உள்ளதாக ஒழுக்ககோவை தொடர்பான வெள்ளை மாளிகையின் முன்னாள் சட்டத்தரணி ரிச்சட்பெயின்டர் தெரிவித்துள்ளார்..

ஜனாதிபதிகள் முதலீட்டு ஆலோசகர்கள் இல்லை என தெரிவித்துள்ள அவர், இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி சந்தையை தனக்கு சார்பாக கையாளும் குற்றச்சாட்டிற்கு ஆளாகநேரிடும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வோல்ஸ்ரீட்டில் தனக்கு நிதி வழங்குபவர்களிற்கு நன்மையளிக்கும் விதத்தில் பங்குசந்தையை பயன்படுத்த முயன்றாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என அமெரிக்க செனெட்டர் எலிசபெத் வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிரம்ப் தனது வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் மூலம் தனக்கு சார்பானவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு உதவினாரா என கேள்வி எழுப்பியுள்ள அவர் இது குற்றச்செயல் போல் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/211809

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.