Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவ பீடக்கற்கை நெறியின் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது - ஆறு.திருமுருகன் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 2 24 APR, 2025 | 05:11 PM

image

யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான  கற்றல் நடவடிக்கையை  மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக அறிகிறோம். இது ஆபத்தானது. எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக சித்தமருத்துவ பீட கற்கை நெறி தமிழ்மொழியில் தொடரவேண்டும். இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு  யாழ் பல்கலைக்கழக சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். 

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் பல சான்றோர். பெருமக்களின் முயற்சியால்  ஆரம்பிக்கப்பட்டது. 

எமது பிரதேசப் பல்கலைக்கழகம் எமது பிரதேச சுதேசிய பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் பெரும் கடமையாகும். எமது சுதேசிய மருத்தவப் பாரம்பரியம் பேணிப்பாதுகாப்பதற்காக யாழ் பல்கலைக் கழக கல்விச் சமூகம் 70 களின் பிற்பகுதியில் எடுத்த முயற்சியின் விளைவாக சித்தமருத்துவத் துறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஆரம்பத்தில் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் அயராத முயற்சியால் சித்த மருத்தவ நுல்கள் ஏடுகள் சேகரிக்கப்பட்டு பாரம்பரிய வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்று பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு இத்துறை ஆரம்பிக்கப்பட்டது. 

இணுவில், வட்டுக்கோட்டை, சில்லாலை, ஏழாலை, பருத்தித்துறை, அளவெட்டி போன்ற ஊர்களில் இருந்து சித்த வைத்தியர்களின் நுல்கள், உதவிகள் பெறப்பட்டன. பல்கலைக் கழக நூலகர் முருகவேள், பதிவாளர் சிவராஜா போன்ற பெருமக்கள் சித்த மருத்துவத் துறைக்கான  வளர்ச்சியில் அருந்துணை செய்துள்ளனர்.

சித்த மருத்துவ பீடம் முற்றுமுழுதாக சுதேசிய வைத்தியப் பாரம்பரியத்தை சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். மேலும் கைதடியிலுள்ள சித்தவைத்திய போதனா வைத்தியசாலையின் வளச்சிக்கும் பெரும்பங்காற்றி வருகின்றார்கள்.  பல நூறு சித்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கியுள்ளார்கள். 

துறை சார் விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டு இன்று நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக விளங்குகிறார்கள். 

சகல கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் தமிழ்மொழி மூலம் சிறப்பாக நடைபெறுகின்றது. நீண்ட காலமாக எடுத்த முயற்சியின் பயனாக சித்த மருத்துவத் துறை தனிப்பீடமாக உயர்வுபெற்றுள்ளது மேலும் சித்தமருத்துவபீடம் விஸ்தரிப்பதற்காக புதிய நிலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 

இந் நிலையில் உயர்கல்வி அமைச்சு யாழ் பல்கலைக்கழக சித்தமருத்துவத்துறையை ஆங்கிலமொழி மூலமான  கற்றல் நடவடிக்கையை  மேற்கொள்வதற்கு திட்டமிடுவதாக  அறிகிறோம். இது ஆபத்தானது.

இது பாரம்பரிய சித்த மருத்துவத்துறையை  அருகிப்போகச் செய்யும் முயற்சியாகும். அகத்தியர் பதிணென் சித்தர்கள், திருமூலர், திருக்குறள், பரராஜசேகரம்  போன்ற மூல நுல்களை மொழி பெயர்ப்பதென்பது முடியாத விடயம். 

இதை அனைவரும் அறிவர். இந் நிலையில் சித்த மருத்துவத்தை ஆங்கில மொழியில் எவ்வாறு கற்பிக்கப் போகிறார்கள்? இவ் விடயம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மூதவை, பேரவை மற்றும் தூறைசார்ந்த அறிஞர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும். 

எக்காரணம் கொண்டும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மாற்றம் செய்யக் கூடாது. இதனைம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு  யாழ் பல்கலைக்கழக சமூகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/212837

  • கருத்துக்கள உறவுகள்

சித்த வைத்தியத்தை ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டம் இருந்தால், அதனை பல்கலைக்கழகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த மண்ணுக்கே உரிய மருத்துவம்... அந்த மண்ணின் மொழியிலேயே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சித்த வைத்தியத்தை ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டம் இருந்தால், அதனை பல்கலைக்கழகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த மண்ணுக்கே உரிய மருத்துவம்... அந்த மண்ணின் மொழியிலேயே இருக்க வேண்டும்.

இதுக்கு எங்கடை 3 ..எம்பிமாரும் ....ஆமாபோட்டிருப்பினம் ...அவைக்கு தலை கால் தெரியாதுதானே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வருடம் எத்தனை பேர் இந்த துறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்இ

ஒரு வருடத்தில் எத்தனை பேருக்கு தமிழ் பகுதிகளில் தொழில் வாய்ப்பு இருக்கிறது போன்ற புள்ளி விபரங்கள் உண்டா ஐயா ?

தீர்மானமான கருத்துக்கள் இந்த புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் என நம்புகிறேன்

நாமெல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் வகையினர் அல்லவே !!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

சித்த வைத்தியத்தை ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டம் இருந்தால், அதனை பல்கலைக்கழகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த மண்ணுக்கே உரிய மருத்துவம்... அந்த மண்ணின் மொழியிலேயே இருக்க வேண்டும்.

தமிழ் மூலம் கற்பித்தலை நிறுத்தக்கூடாது, ஆங்கிலத்திலும் கற்பித்தால் பிறமொழி மாணவர்களை சென்றடையும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

ஒரு வருடம் எத்தனை பேர் இந்த துறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்இ

ஒரு வருடத்தில் எத்தனை பேருக்கு தமிழ் பகுதிகளில் தொழில் வாய்ப்பு இருக்கிறது போன்ற புள்ளி விபரங்கள் உண்டா ஐயா ?

தீர்மானமான கருத்துக்கள் இந்த புள்ளி விபரங்கள் அடிப்படையில் தான் அமைந்திருக்கும் என நம்புகிறேன்

நாமெல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் வகையினர் அல்லவே !!

நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம் இருக்கின்றது.

இந்த கற்கை நெறியை நிறைவுசெய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர்.

அதைவிட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமனத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர்.

ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செவ்வியன் said:

தமிழ் மூலம் கற்பித்தலை நிறுத்தக்கூடாது, ஆங்கிலத்திலும் கற்பித்தால் பிறமொழி மாணவர்களை சென்றடையும்

எமது மருத்துவம் பிற மொழி மாணவர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிங்களவன்.... சில வருடங்களில் எமது மருத்துவத்தை, தனது மருத்துவம் என்று உரிமை கோரக் கூடிய சுபாவம் உள்ளவன்.

எமது ஊர்களை திருடி சிங்களப் பெயர் வைக்கின்றவன், கதிர்காமக் கந்தனை திருடி வைத்திருப்பவன், இராவணனை... உரிமை கோருபவனிடம்... நம்பி எதனையும் கொடுக்க யோசிக்க வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தமருத்துவம் படித்த பெரும்பாலானோர் ஆங்கில வைத்தியம், இ்னி இதை ஆங்கிலத்தில் படித்து பயிற்சி செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் கற்கைகளை நடத்தினாலும் ஆங்கில கல்வியையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்க வேண்டும். பட்டம் பெறுபவர்கள் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஏனெனில் இயற்கை வைத்தியம் என்பது உலகம் முழுவதும் நீண்ட காலமாக உள்ளன. அதுலும் பல வகைகளை உலகின. பல்வேறு நாடுகளில் உள்ளன. ஆகவே அந்த வைத்திய முறைகளையும் கற்றறிந ஆங்கில தேர்சசி உதவியாக இருக்கும். அப்போது தான் இவர்கள் தமது துறையில் முழுமை பெறலாம். தனியே தமிழில் மட்டும் கற்றுவிட்டு உலகத்துக்கே வைத்தியத்தை கொடுத்தவர்கள் நாம் என்பது போல லூசுத்தனமான கிணற்று தவளை கருத்துகளை கொண்டவர்களாக இருப்பர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.