Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01 MAY, 2025 | 01:24 PM

image

இந்தியாவின் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெற்றுவரும் நிலையில், பயண கட்டணத்தை குறைத்துள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

WhatsApp_Image_2025-05-01_at_12.33.01_PM

இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயணக் கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவும் வகையில் தற்போதைய கட்டணமான 8,500 ரூபா (இந்திய ரூபா மதிப்பில்)   8000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 

WhatsApp_Image_2025-05-01_at_12.32.59_PM

மேலும், பயணிகள் 10 கிலோ எடையுடைய உடைமைகளை மட்டுமே கப்பலில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கவுள்ளோம்.

இது தவிர 15,000 ரூபாவுக்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், 30,000 ரூபாவுக்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

WhatsApp_Image_2025-05-01_at_12.33.01_PM

சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயணக் கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.

அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல் மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும். 

வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், இந்த 2ஆவது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையிலான தரத்தில் உருவாக்கி வருகிறோம் என்றார். 

WhatsApp_Image_2025-05-01_at_12.32.59_PM

WhatsApp_Image_2025-05-01_at_12.33.00_PM

WhatsApp_Image_2025-05-01_at_12.33.00_PM

WhatsApp_Image_2025-05-01_at_12.33.02_PM

https://www.virakesari.lk/article/213409

  • கருத்துக்கள உறவுகள்

cheriyapani-ship.jpg?resize=680%2C375&ss

நாகை – காங்கேசன்துறை இடையிலான போக்குவரத்துக்கு கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான பயண கட்டணம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக  பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 இந்திய ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயணக் கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகபட்டினத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1430236

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் குறைப்பு

02 MAY, 2025 | 01:45 PM

image

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையின் இரு வழிக்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக "சுபம்" நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும் "சுபம்" பயணிகள் படகு நிறுவனத்தின் தல்லைவர் சுந்தர்ராஜ் யாழ்ப்பாணத்தில்  வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சேவை ஆரம்பிக்கும் போது 36 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட இருவழிக்கட்டணம் பின்னர் 30 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் அது குறைக்கப்பட்டு 28 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் எடுத்துச் செல்லும் பயணப்பொதியின் அளவும் 10 கிலோவிலிருந்து 22 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலா மேம்பாட்டிற்காக இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்காக 7 வகையான புதிய சுற்றுலாப் பொதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து, இருவழி படகு போக்குவரத்து கட்டணம் அடங்கலாக 4 நாட்கள் தங்குவதற்கான கட்டணம் ஆக்க்குறைந்தது 70 ஆயிரம் ரூபாவிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் அடுத்த மாதம் காங்கேசன்துறையிலிருந்து காலையில் புறப்படக்கூடியதான புதிய சேவையும் ஆரம்பிக்கவுள்ளது.

எனவே இச்சேவைகளை பயன்படுத்தி இரு நாடுகளையும் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயனடைய வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/213492

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.