Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“சேர்ந்து இயங்க வேண்டிய நேரம் ; காலம்” ? - நிலாந்தன்

GqfD4QuW0AAQ2aW-cc.jpgஉள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் கிடைத்த பின் முல்லைத்தீவில் இருந்து ஒரு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர் முகநூலில் பின்வருமாறு எழுதினார்… “முல்லைத்தீவு ரவிகரனோடு, கிளிநொச்சி சிறீயரோடு” என்று. அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் முன்பு பிரதேச சபை உறுப்பினராக இருந்தவரும், இப்பொழுது சுமந்திரனின் தீவிர விசுவாசியுமான ஒருவர் பதில் எழுதினார் “யாழ்ப்பாணம் சுமந்திரனோடு” என்று. இது ஒரு சமூக வலைத்தளக் காட்சி.

இரண்டாவது காட்சி, தேர்தல் வெற்றிகள் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், “தமிழரசுக் கட்சி பலவீனமடையவில்லை. தமிழ்த் தேசியக் கூடடமைப்பாக சேர்ந்து இருந்ததைவிட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கிறது” என்று கூறியுள்ளார். எனினும், இது ”நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய நேரம்;காலம்” என்றும் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற கட்சிகளை நோக்கிய மறைமுக அழைப்பு ஒன்று அதில் உண்டு. எனினும் தனது பலத்தை நிரூபித்துக் காட்டிய பின் அந்தப் பலத்தின் அடிப்படையில்தான் அந்த அழைப்பு வந்திருக்கிறது.

ஆனால் மூத்த அரசியல் செயற்பாட்டாளர் ஆகிய பஷீர் காக்கா அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை வைத்து அதில் தமிழரசுக் கட்சிக்குள் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டும் என்ற பொருள்பட கருத்துத்  தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தேர்தல் முடிவுகளின் பின் கருத்துத் தெரிவித்த கஜேந்திரக்குமார், தமிழரசுக் கட்சி ‘எக்கிய ராஜ்ய’ என்ற தீர்வைக் கைவிடுமாக இருந்தால் தாங்கள் அக்கட்சியோடு இணைந்து செயற்படத் தயார் என்று கூறியுள்ளார். அந்த நிபந்தனையைத் தமிழரசுக் கட்சி ஏற்காவிட்டால் உள்ளூராட்சி சபைகளை தமிழரசுக் கட்சியோடு இணைந்து நிர்வாகிப்பதற்கு முன்னணி தயாராக இல்லை என்ற பொருள் அதில் உண்டு.

மேற்கண்டவைகள் யாவும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான தோற்றப்பாடுகளின் தொகுக்கப்பட்ட காட்சி. இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் தெளிவான சித்திரம் என்ன? தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்ததைப் போலவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஒரு தேசமாக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் கட்சிகள்தான் ஆளுக்காள் பிரிந்து நிற்கின்றன. இனிமேலும் பிரிந்து நிற்கப் போகின்றன?

தமிழரசுக் கட்சியின் வெற்றி என்பது ஒரு வகையில் சுமந்திரனின் வெற்றியும் சிறீதரனின் வெற்றியும்தான். அதாவது அது தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே காணப்படும் பிளவைக் கூர்மையாக வெளிப்படுத்தும் ஒரு வெற்றி. அப்படியென்றால் நீதிமன்றத்தில் இருந்து கட்சியை வீட்டுக்குக் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் இப்போதைக்கு கிடையாதா? தன் கட்சிக்குள்ளேயே ஒருமைப்பாட்டை,ஐக்கியத்தைப் பேண முடியாத தலைமைகள் கட்சிக்கு வெளியே தேசிய ஐக்கியத்தை எப்படிப் பேண முடியும்?

தேர்தல் வெற்றிக்குப் பின் சுமந்திரனின் ஆதரவாளர்களும் முன்னணியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் எழுதி வரும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் தேசம் தொடர்ந்தும் கட்சிகளாகப் பிரிந்து நிற்கப் போகிறது என்றே தெரிகிறது. சுமந்திரனின் விசுவாசிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகர சபையின் பிரதான வேட்பாளரும் உட்பட பல பிரதானிகள் தங்கள் சொந்த வட்டாரங்களில் தோற்கடிக்கப்பட்டிருப்பதை ஏளனத்தோடு சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஆனால் சுமந்திரனுடைய தாய்க் கிராமத்திலேயே, குடத்தனையில் தமிழரசுக கட்சி ஒரு முன்னாள் இயக்கத்தவரால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது என்ற விடயத்தை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.

கட்சிகளுக்கு இடையிலான, கட்சிகளுக்கு உள்ளேயான இந்த ஆழமான பிளவுகளை தனக்குச் சாதகமான ஒரு தோற்றப்பாடாக என்பிபி கருதுகின்றது. அதனால்தான் கூறுகிறது, வடமகாணத்தில் தனக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன என்று. யாழ்ப்பாணத்தில் அதுதான் இரண்டாவதாக நிற்கிறது. வவுனியாவில், மன்னாரில் முதலாவதாக நிற்கிறது. மட்டக்களப்பில் இரண்டாவதாக நிக்கிறது. வன்னியில் இரண்டாவதாக நிற்கிறது.

தமிழரசுக் கட்சிக்கு 75 வயது.கொங்கிரஸ் கட்சிக்கு அதைவிட அதிக வயது.இந்த இரண்டு கட்சிகளையும் தனித்தனியாக எடுத்து அவற்றோடு என்பிபியை ஒப்பிட்டுப் பார்த்தால், 6 மாதங்களில் ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு கட்சிக்கு, தென்னிலங்கை மைய கட்சிக்கு,எவ்வளவு வாக்குகள் கிடைத்திருக்கின்றன?

அதே சமயம் எல்லாத் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால் என்பிபி பின் தள்ளப்பட்டு விடும்.அதாவது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த அதே சித்திரம்தான் மீண்டும் கிடைத்திருக்கின்றது.

இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளுக்கு உணர்த்துபவை.இந்தச் சித்திரமே தொடர்ந்தும் காணப்படுமாக இருந்தால் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதில் குழப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

கஜேந்திரகுமார் இறந்த காலத்தில் இருந்து நிறையப் படித்திருப்பதும் அந்த அடிப்படையில் நெகிழ்வாக நடந்து கொள்வதும் தமிழ்த் தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப உதவும். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு அவர் உரையாடியதாகவும் அவர்களிடமிருந்து இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பதில் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள சில கட்சிகள் ஏற்கனவே பழைய கூட்டமைப்பை மீண்டும் புதுப்பிக்கும் விருப்பத்தோடு காணப்படுகின்றன.கிளிநொச்சியில் சந்திரக்குமாரை அவர்கள் உள்வாங்கியதன் மூலம் அவர்கள் தெளிவாக சுமந்திரனை நோக்கிச் சாய்ந்தார்கள்.எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயல்படும் உள்நோக்கம் இருந்தால் அக்கட்சி முன்னணியை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உள்ளூராட்சி சபைகளில் என்பிபிக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் ஒரு தேசமாகத் திரளும் வாய்ப்புக்கள் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் பிரகாசமாக இல்லை.அறுதிப் பெரும்பான்மை இல்லாத சபைகளில் நிச்சயமற்ற தலைமைத்துவம்தான் இருக்கும்.

முன்னணிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையிலான பிளவு கொள்கை அடிப்படையிலானது என்று முன்னணி கூறுகிறது.ஆனால் ‘எக்கிய ராஜ்ய’ என்ற தீர்வு சுமந்திரனின் விருப்பமா அல்லது முழுக் கட்சியினுடையதும் நிலைப்பாடா என்ற கேள்விக்கு விடை வேண்டும்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றிகளின் மூலம் தமிழரசுக் கட்சியின் மீதான சுமந்திரனின் பிடி முன்னரை விடப் பலமானதாகவும் இறுக்கமானதாகவும் மாறியிருப்பதனால், அவர் தனது நிலைப்பாட்டைக் கட்சியின் நிலைப்பாட்டாக மாற்றுவார் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால்,எக்கிய ராஜ்ய என்பது தமிழரசுக் கட்சியின் ஒட்டுமொத்த நிலைப்பாடு அல்ல.கட்சியின் பதில் தலைவர் சிவஞானமும் உட்பட கிளிநொச்சியில் பெரு வெற்றி பெற்ற சிறீதரன், வன்னியில் ரவிகரன், கிழக்கில் சாணக்கியனைத் தவிர பெரும்பாலான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாருமே வெளிப்படைத் தன்மை மிக்க சமஸ்டிக்குத்தான் ஆதரவாக உள்ளார்கள். ஒற்றையாட்சிப் பண்புமிக்க தீர்வுப் பொதி ஒன்றுக்கா தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள்? இல்லை.எனவே இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை சுமந்திரனின் கட்சியாகப் பார்க்க முடியாது.இது தொடர்பாக அதாவது எக்கிய ராஜ்ய தொடர்பாக தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒரு பகிரங்க மேடையில் அமர்ந்து வெளிப்படைத் தன்மை மிக்க ஓர் உரையாடலைச் செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பரப்புரைகளின் போது கஜேந்திரகுமார் ஒரு விடையத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். இது தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்று. தமிழ் மக்கள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை தேர்தலில் வெளிப்படுத்தி விட்டார்கள்.அந்த முடிவின் அடிப்படையில், பொது எதிரிக்கு எதிராக எப்படித் தேசமாகத் திரளலாம் என்றுதான் சிந்திக்கலாமே தவிர மீண்டும் கட்சிகளாகச் சுருங்கவோ சிதறவோ முடியாது.அதிலும் குறிப்பாக இறந்தவர்களை நினைவு கூரும் ஒரு மாதத்தில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணை அது.அதற்குத் தமிழ்க் கட்சிகள் கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் மாகாண சபை தேர்தலின் போதும் மீண்டும் இது தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தல் என்று கூற வேண்டியிருக்கும்.ஏனென்றால் என்பிபி தமிழர் தாயகத்தில் பெரும்பாலும் இரண்டாம் இடத்தில் நிற்கிறது.

https://www.nillanthan.com/7366/

  • கருத்துக்கள உறவுகள்

மிழ் அரசு கட்சிக்கு ஆதரவு கொடுக்க பின்நிற்கமாட்டோம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த ஆணையாகவும் அமையுமென பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

  

யாழ்பாணத்தில் இன்று (10) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது.

இவ்வாறான ஒரு காலச் சூழலில் பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.

இதனூடாக வடக்கு கிழக்கில் தென் இலங்கை இனவாதிகளுக்கு இடம் கொடுக்கப்படாது என்பதை ஆட்சியாளர்களுக்கு தமிழ் மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய பரப்பில் அனேக பிரதேசங்களில் தமிழ் தேசியம் வெற்றிபெற்றுள்ள போதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையில் பின்தங்கிய போக்கே இருக்கின்றது.

அதேபோன்று தமிழ் தேசிய பேரவைக்கும் இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் மக்கள் கொடுத்துள்ள அல்லது கிடைத்த வெற்றியாகவும் இதை நாம் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலச் சூழலுக்கு தேவையான ஒன்றாகும். இதனால் தமிழ் தரப்பு ஆட்சி அமைக்க நாம் தமிழ் அரசு கட்சிக்கும் கொள்கை நிலைப்பாட்டுடன் நின்று ஆதரவை கொடுக்க பின்நிற்கமாட்டோம்.

குறிப்பாக ஆட்சி அதிகாரக் கதிரைக்கான தேசியமாக ஒற்றுமையாக இல்லாது தூய்மையான ஆதரவுக்கான அழைப்பாக இருந்தால் அந்த அழைப்புக்கு தமிழ் தேசிய பேரவை ஆதரவு கொடுக்கும். மேலும் ஒற்றுமையை வலுப்படுத்த தமிழ் அரசியல் பரப்பில் உள்ள பலதரப்பட்டவர்களுடனும் பேசியிருந்தேன். அதற்கான சாதக பெறுபேறும் கிடைத்தது.

அதேநேரம் தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலையும் எம்மிடம் இல்லை. அவர்களுடனும் பேசியே பயணிக்க வேண்டும். தவறான பாதையில் மக்கள் வழிநடத்தப் படுவதை உணர்ந்து அதை வெளிப்படுத்தி தேசியத்தின் பாதையில் மக்களை கொண்டுசெல்ல நாம் வழிவகுத்தோம்.

அதன் ஒரு பகுதியாகவே இம்முறை தமிழ் தேசிய பேரவை என்ற கூடின் கீழ் உள்ளூர் அதிகார சபை தேர்தலில் மக்களிடம் சென்றிருந்தோம். அதற்கான அங்கீகாரதை மக்கள் தந்துள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளின் போக்குக்கு மக்கள் ஒரு பாடத்தைகொடுத்தார்கள். அந்த பாடத்தின் ஊடான கிடைத்த படிப்பினைகள் தற்போது தமிழ் தேசிய பாதையை மீளவும் உறுதிபடுத்திக் கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://seithy.com/breifNews.php?newsID=333105&category=TamilNews&language=tamil

தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.

  

பல சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெரும் கட்சிகளே ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதனால், அக்கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கை தமிழ் அரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை கடந்த இரு தினங்களாக பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன.

இது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் கூறுகையில்,

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தமக்கு ஆதரவு தருமாறு பல்வேறு தரப்பினரும் எம்முடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

எமது கூட்டணியில் உள்ள ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம் என தெரிவித்தார்.

https://seithy.com/breifNews.php?newsID=333116&category=TamilNews&language=tamil

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிக்கவில்லை!

தனி மனித தீர்மானம் எடுக்கும் கட்சியாக நாங்கள் இல்லை. தலைவர் என்ற முறையில் நாம் இதனை தெளிவாகச் சொல்கிறேன். முன்பு அவ்வாறான நிலைமை இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அவ்வாறில்லை. ஆகக் குறைந்தது தலைவர், செயலாளராவது கலந்து பேசி எல்லா விடயங்களையும் இணைந்து தான் செயற்படுகிறோம். ஆகவே, தனி மனித தீர்மானம் என்ற பேச்சு அபாண்டமானது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தனி மனித தீர்மானம் எடுக்கும் கட்சியாக நாங்கள் இல்லை. தலைவர் என்ற முறையில் நாம் இதனை தெளிவாகச் சொல்கிறேன். முன்பு அவ்வாறான நிலைமை இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அவ்வாறில்லை. ஆகக் குறைந்தது தலைவர், செயலாளராவது கலந்து பேசி எல்லா விடயங்களையும் இணைந்து தான் செயற்படுகிறோம். ஆகவே, தனி மனித தீர்மானம் என்ற பேச்சு அபாண்டமானது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

  

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றி ஆளும் வகையில் முதல் நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இருக்கிறது. அவ்வாறு எமக்கு வாக்களித்து எம்மை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட, எமக்கு ஊக்கமளித்த, தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற அனைவருக்கும் வடக்கு, கிழக்கு வாழும் மக்கள் எல்லோருக்கும் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மீண்டெழுவதற்கான வாய்ப்பைத் தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

மிகக் கேவலமாக தேர்தல் காலத்தில் எங்களை எதிர்த்துப் போட்டியிட்டு இல்லாதவற்றை சொல்லி தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடியவர்கள் இப்பொழுது நாங்கள் தேசிய மக்கள் கட்சியோடு டீல் பேசுகிறோம் என்று பொறுப்புள்ளவர்களே குறிப்பிட்டு பேசுகிறார்கள்.

தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் என்ற முறையில் பொறுப்போடு இதனை மறுதலிக்கிறேன்.

எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த டீலையும் செய்யவில்லை. இந்த பரப்புரைகள் வேலை செய்யாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர் நளிந்த ஜயதிஸ்ஸ கூட தம்மை தமிழ் கட்சிகள் அணுகவில்லை என்பதை கூறியிருக்கிறார்.

அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாளைய தினம் சனிக்கிழமை அரசியல் குழு கூடி, இவ்வாறான தேர்தல் விடயங்களை எந்தெந்த சபைகளில், எவ்வாறு செயற்படுவது, யார் யாரை முன்னிலைப்படுத்தி தவிசாளர் முதல்வரை தீர்மானிப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.

ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளருடன் பேசியுள்ளார்கள். செல்வம் அடைக்கலநாதன் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளாக நாம் மீண்டும் செயற்பட கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

https://seithy.com/breifNews.php?newsID=333118&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.