Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

May 29, 2025 10:57 am

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி வேலைத்திட்டத்துக்கு ‘மீண்டெழும் அலைகள்‘ பெயர் சூட்டப்பட்டுள்ளது.  தூரநோக்கை அடிப்படையாக கொண்டு செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2025 மற்றும் 2035 காலப்பகுதியை மையப்படுத்தியதாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எவை, அவை எவ்வாறு முன்னெடுக்கப்படும், அதன்மூலம் மக்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்ககூடிய அனுகூலங்கள், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணத்திற்கான திணைக்கள அதிகாரிகளால் மேற்படி கலந்துரையாடலின்போது தெளிவுபடுத்தப்பட்டது.

Photo-5.jpg

யாழ். மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றாடல், சுற்றுலா உட்பட சகல விடயங்களுக்கும் மீண்டெழும் அலைகள் என்ற தூர நோக்கத்திற்குள் உள்வாங்கப்பட்டு, கட்டியெழுப்படவுள்ளன. இதன்மூலம் யாழ்.மாவட்டம் மறுமலர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நகர அபிவிருத்தி சபை அதிகாரிகளின் திட்டத்தை கண்காணித்த பின்னர், தமது தரப்பிலுள்ள யோசனைகளையும் அமைச்சர் முன்வைத்தார்.  வளமானதொரு யாழ்.மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு இத்திட்டம் பக்கபலமாக இருக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேற்படி சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இணைப்பாளர் ஸ்ரீ வாகீசன், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் விரிவுரையாளருமான சு.கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

https://oruvan.com/special-discussion-on-major-development-projects-to-be-implemented-in-jaffna-district/

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

Published By: DIGITAL DESK 2

29 MAY, 2025 | 12:47 PM

image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னிட்டு, விசேட கலந்துரையாடல் ஒன்றினை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடத்தினர்.

இந்த கலந்துரையாடலின் போது, “மீண்டெழும் அலைகள்” எனும் தூரநோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, 2025 மற்றும் 2035 ஆண்டுகளை மையமாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் தெரிவித்தார்.

இவை மூலம் யாழ். மாவட்டத்தை கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சுற்றாடல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முழுமையாக மேம்படுத்தும் நோக்கமுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணத்திற்கான திணைக்கள அதிகாரிகள், இந்த திட்டங்கள் தொடர்பான தகவல்களை விளக்கிக் கூறினர். அதனைத் தொடர்ந்து, அமைச்சர் சந்திரசேகர் தமது தரப்பிலிருந்து யோசனைகளையும் முன்வைத்து, திட்டங்கள் மீது கருத்து வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த திட்டங்கள் வளமானதொரு யாழ்ப்பாணம் மாவட்டத்தை உருவாக்கும் ஒரு முக்கிய பக்கபலமாக அமையும். மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கம் ஏற்படும்,” எனத் தெரிவித்தார்.

மேற்படி கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் க. இளங்குமரன், ஜெ. ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, அத்துடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் இணைப்பாளர் ஸ்ரீ வாகீசன், முன்னாள் விரிவுரையாளரும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான சு. கபிலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Photo__6_.jpgPhoto__4_.jpgPhoto__7_.jpgPhoto__2_.jpg

https://www.virakesari.lk/article/215973

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.