Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவில் சித்திரவதைகள் அதிகரிப்பு: ஐ.நா. அதிகாரி மன்பிரட் நோவாக் சாடல்

Featured Replies

சிறிலங்காவில் மக்கள் மீதான கொடுமையான சித்திரவதைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான சிறப்பு பிரதிநிதி மன்பிரட் நோவாக் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Wed Oct 31 9:20:00 2007

சித்திரவதைக் கொடூரங்களை அரசு அடியோடு மறுக்கிறது! விசேட நீதிமன்றங்கள் தேவையே இல்லை ஐ.நா. அதிகாரிக்கு அமைச்சர் பதிலடி

இலங்கையில், பொலிஸாராலும் படையினராலும் பரவலாக தாராளமாக கொடூரமான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்று அரசாங்கம் அடியோடு மறுத்துள்ளது.

கடந்த ஐந்து வருட காலத்தில் 0.02 வீத சித்திரவதைக் குற்றச்சாட்டுகளே பதிவாகியுள்ளன என்று எடுத்துக்காட்டி அரசின் மறுப்பை நிலைநாட்ட முயல்கிறார் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்தசமரசிங்க.

சித்திரவதை முறைப்பாடுகளை சுதந்திரமாகப் பதிவு செய்வதற்கும், அவை குறித்து விசாரணை நடத்தவும் விசேட நீதிமன்றங்கள் தேவையே இல்லை என் றும் ஐ. நா. அதிகாரி மான்பிறெட் நொவாக்குக்கு பதிலடி கொடுத்திருகிறார் அமைச்சர்.

இம்மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்ஸிலின் சித்திரவதை கள் கண்காணிப்புக்கான விசேட இணைப்பா ளர் மான்றெட் நொவாக் கருத்துக்களை யும் அவர் தெரிவித்த சிபார்சுகளையும் ஏற் றுக்கொள்ள முடியாது என்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு நேற்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளது. சிறைகளிலும் ஏனைய பொலிஸ் மற் றும் படை முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்போரிடம் இருந்து சித்திரவதைகள் குறித்து மிகக் குறைந்த எண்ணிக்கையான முறைப்பாடுகளே கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 0.02வீதமானவையே வருடாந் தம் இழைத்திருக்கின்றன என்றும் மனித உரிமை அமைச்சு விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட இணைப்பாளர் மான்பிறெட் நொவாக் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் வெளியிட்ட அறிக்கை யில், சிறைகளிலும் பொலிஸ் தடுப்பு நிலை யங்களிலும் தடுத்து வைக்கப்பட்டோர் பின்வரும் கொடுமையான சித்திரவதை களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விவரித்து இருக்கிறார்.

அவர்கள் பல்வேறு வகையான ஆயு தங்களாலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது காற்பாதங்களில் சூட்டுக் காயங் கள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. காது களை பொத்தி அடிக்கப்பட்டிருக்கிறது. பல் வேறு கோணங்களில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு தொங் கவிடப்பட்ட பின்னர் பலவகை உலோ கங்களினாலும் குறை சிகரெட்டுகளினாலும் சுட்டுக் காயப்படுத்தப் பட்டிருக்கிறர்கள்.

தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப் பட்ட தடுப்புக் காவல் கைதிகளின் முகங் களில் மிளகாய், மிளகு அல்லது வாயுவை பிளாஸ்டிக் பைகளில் கட்டி மூச்சுத் திண றச் செய்தல். பிறப்பு உறுப்புகள் மீது பலவகை யான சித்திரவதைகளைச் செய்தல். இத்தகைய கொடூரமான சித்திரவதைகள் குறித்துத் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்ததாக நொவாக் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரவதை செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு முகாம்கள் நிறுவப்பட வேண்டும். சிறைச்சாலைகளில் நடைபெறும் சித்திரவதைகள், இழிவுபடுத்தங்கள் குறித்து சுதந்திரமான முறையில் முறைப்பாடு செய்வதற்கான வழிமுறைகளும் வகுக்கப்படவேண்டும். அவை குறித்து தகுந்த முறையில் விசாரித்து நடவடிக்கைஎடுப்பதற்கு விசேட நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும் என்று சித்திரவதைகள் கண்காணிப்புக்கான விசேட இணைப்பாளர் நொவாக் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

ஆயினும் விசேட நீதிமன்றம் ஒன்று தேவையில்லை. நிதிவளமின்மையாலும் உரிய ஆளணியினர் பற்றாக்குறையாலுமே இப்போதைய மனித உரிமை ஆணைக்குழு உரியவகையில் இயங்க முடியவில்லை என்று மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அசோசியேட்டட் பிளஸ் செய்தி ஏஜன்சிக்குத் தெரிவித்தார்.

சித்திரவதையை ஒரு சதவீதமேலும் சகித்துக் கொள்ளாத கொள்கையையே எமது அரசாங்கம் கைக்கொள்கிறது. அந்தக் கொள்கையைப் பலப்படுத்தும் பொருட்டு எமது ஸ்தாபன மற்றும் சட்ட அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு நொவாக்கின் பூர்வாங்கச் சிபார்சுகளை நாம் ஆராய்ந்து வருகிறோம் என்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கா மேலும் தெரிவித்தார். (அ)

http://www.uthayan.com/

தோல்வி கண்ட ராஜ்யமாகக்காட்டி நாட்டைப் பிரிப்பதற்கு சூழ்ச்சி ஐ.நா. பிரதிநிதிகளை சாடுகிறது ஜே.வி.பி.

இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக மனித உரிமை மீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐ.நா. வின் விசேட பிரதிநிதி மன்மிராட் நோவாக் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், இவ்வாறானவர்களின் இலங்கை விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளிக்கக் கூடாதென்றும் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,

நோவாக் இலங்கை விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்பே இங்கு சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக அறிக்கையொன்றினை தயாரித்து வைத்து விட்டுத்தான் வந்துள்ளார். அதனையே வெளியிட்டுள்ளார். இலங்கையில் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்வதற்கு வருமுன்பு அமெரிக்காவினால் ஈராக்கில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை ஆராய அங்கு செல்லவேண்டும்.

விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவே, இலங்கையை பிரிக்கும் நிகழ்ச்சி நிரலையே இங்கு வரும் பிரதிநிதிகள் கடைபிடிக்கின்றனர். இலங்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அதற்காக இங்கு சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தோல்வி கண்ட ராஜ்ஜியமாகவும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சியிலும் ஈடுபடுகின்றனர். எனவே, இலங்கைக்கு எதிராக செயற்படும் இது போன்றவர்களின் விஜயங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டுமென்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.